அமித்ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம்!

சென்னை (27 அக் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு எம்.பி., அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு: மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் வணக்கம். பொருள்: நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, மருத்துவப் படிப்புகளில் 7.5% முன்னுரிமை ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவிற்கு மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள்…

மேலும்...

உதய சூரியன் ஒழிக – அண்ணா அறிவாலயத்தில் கோஷம்!

சென்னை (25 அக் 2020): சென்னை அண்ணா அறிவாலயத்தின் வாசலில் , ‘ஸ்டாலின் வாழ்க; உதயசூரியன் ஒழிக’ என திமுக தொண்டர்கள் சிலர் கோஷம் எழுந்திருப்பது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. குமரகுருவுடன் திருவெண்ணெய்நல்லூர் தி.மு.க கிழக்கு ஒ.செ துரைராஜும், கள்ளக்குறிச்சி தி.மு.க மா.செ உதயசூரியனும், நெருக்கமாக இருப்பதாகவும் இதனால்தான் குமரகுரு மூன்று முறையாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் என்றும் அந்தப் பகுதி தி.மு.க.வினருக்கு நீண்ட நாட்களாக கோபம். இந்த விவகாரத்தை கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் சொல்வதற்காக…

மேலும்...

முதலில் திமுக ஆட்சி – அடுத்து நீட்டுக்கு தடை : ஸ்டாலின்!

சென்னை (24 அக் 2020): திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வுக்கு தடை விதிக்க மேற்கொள்ளப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: -நீட் தேர்வை பொருத்தவரை தொடர்ந்து குழப்பம்…

மேலும்...

திமுக எம்பியின் சொத்துக்கள் அமலாக்கத்துறையினரால் முடக்கம்!

சென்னை (17 அக் 2020): திமுக எம்பி கவுதமசிகாமணியின் 8.6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை தெரிவித்து இருப்பதாவது: அந்நிய செலாவணி விதிகளை மீறி கவுதமசிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார். ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக வெளிநாடுகளில் சொத்து சேர்த்தது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கவுதமசிகாமணி முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

வெடிக்கும் பூகம்பம் – திமுக விசிக இடையே விரிசல்?

சென்னை (16 அக் 2020): தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. ஒவ்வொரு கட்சியிலும் பொறுப்புகள் பிரிக்கப்பட்டு பல்வேறு குழுக்கள் அமைத்து தேர்தல் வேலைகள் நடைபெறுகின்றன. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணியில் தற்போது யார் இருக்கிறார்கள் யார் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியாத வகையில் கட்சித் தலைவர்கள் குழப்பி வருகின்றனர். திமுகவைப் பொறுத்தவரை மக்களவை தேர்தலின் போது அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில் தேர்தல்…

மேலும்...

ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்கவேண்டும் – திமுகவினர் ஆர்வம்!

சென்னை (15 அக் 2020): ரஜினி தேர்தலுக்கு முன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று திமுகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளுமே தயாராகிவிட்டன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. சசிகலா விடுதலையானால், என்ன நடக்கும் என்ற பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சியை தொடங்கி…

மேலும்...

ஏன் இவ்வளவு அவசரப் படுகிறார்கள் – ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை!

சென்னை (12 அக் 2020): திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பக்குவப்பட்ட புரிந்துணர்வோடும், பண்பட்ட நேச மனப்பான்மையோடும், தி.மு.கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெகுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன், 2021 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. தி.மு.கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்குள்ளே, ஏதாவது திருகு தாளங்களைச் செய்து, தூய சுமூகமான உறவு நிலையைக்…

மேலும்...

அதிமுக எம்.எல்.ஏ திமுகவில் தஞ்சம்!

சென்னை (10 அக் 2020): விளாத்திகுளம் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து அதிமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 2016 சட்டசபை தேர்தலில் விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உமா மகேஸ்வரி. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் அணியில் இணைந்த 18 எம்.எல்.ஏக்களில் உமா மகேஸ்வரியும் ஒருவர். இதனால் உமா மகேஸ்வரி எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து 2019-ல்…

மேலும்...

திமுக முக்கிய புள்ளிக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று!

சென்னை (28 செப் 2020): திமுக எம்.எல்.ஏ மா. சுப்பிரமணியனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச்செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று…

மேலும்...

திமுகவில் பரபரப்பு – மீண்டும் திமுகவில் இணைந்த அழகிரி!

மதுரை (23 செப் 2020): அழகிரி திமுகவில் மீண்டும் இணைந்துள்ள உறுப்பினர் அட்டை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவிலிருந்து நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அண்மையில் தன்னை மீண்டும் திமுகவில் சேர்க்கக் கோரி வெளிப்படையாகவே தெரிவித்தார். ஆனால், திமுக அதைப் பொருட்படுத்தாத நிலையில், இணையவழி உறுப்பினர் சேர்க்கையில் மு.க.அழகிரி பெயரில் உறுப்பினர் அட்டையைப் பெற்றிருக்கிறார் அவரது ஆதரவாளர் கபிலன். கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பேரூர் திமுகவின் முன்னாள் செயலாளராக இருந்தவர் பெ.கபிலன். தீவிர…

மேலும்...