பாஜக வைரஸ் – சானிடைசர் அடித்து சுத்தம் செய்யப்பட்ட பாஜகவினர்!

கொல்கத்தா (24 ஜூன் 2021): பாஜகவிலிருந்து திரிணாமுல் காங்கிரசில் இணைந்த 150 பேருக்கு பாஜக வைரஸ் இருப்பதாகக் கூறி அவர்களை சானிடைசர் அடித்து திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த தேர்தல் பாஜகவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்த நிலையில், பாஜக கூடாரம் காலியாகி வருகிறது. ஏற்கனவே திரிணாமுல் காங்கிரசிலிருந்து பாஜகவில் இணைந்தவர்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்பி வருகின்றனர்.  இந்நிலையில் பிர்பூமின் இளம்பஜார் தொகுதியில் 150 பாஜகவினர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். இவர்களுக்கு பாஜக வைரஸ்…

மேலும்...

எச்.ராஜா மீது அடுக்கடுக்கு குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக நிர்வாகிகள்!

காரைக்குடி (24 ஜூன் 2021): எச்.ராஜாவுக்கு எதிராக சிவகங்கை மாவட்ட பாஜகவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.கவின் முன்னாள் தேசிய செயலாளர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அனால் இந்த தோல்விக்கு கரணம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் என குற்றம் சாட்டுகிறார். இந்த நிலையில் காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு ஒன்றிய தலைவர் பாலா உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் மாவட்டத் தலைவர் செல்வராஜிடம் ராஜினாமா கடிதம்…

மேலும்...

பெட்ரோல் விலை உயர்வுக்கு காங்கிரஸே காரணம் – ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர்!

புதுடெல்லி (23 ஜூன் 2021): எரிபொருள் விலை உயர்வுக்கு காங்கிரஸே காரணம் என்று ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “காங்கிரஸ் ஆட்சியின்போது, ​​எண்ணெய் பத்திரங்களில் இருந்த பல கோடி ரூபாய்கள் திருப்பிச் செலுத்தப் படவில்லை. இப்போது நாங்கள் அந்தத் தொகையினை, முதல் மற்றும் வட்டியுடன் சேர்த்து செலுத்துகிறோம். ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதுதான் பெட்ரோல் விலை பெருமளவில் அதிகரிக்க வழிவகுத்தது. அதுமட்டுமல்லாமல் சர்வதேசச் சந்தையில் கச்சா…

மேலும்...

நீட் தேர்வுக்கு தடை – பாஜக அந்தர் பல்டி!

சென்னை (23 ஜூன் 2021): தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதில் பாஜக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதல் உடனடியாக பெற வேண்டும் என பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நிலைப்பாடு,…

மேலும்...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து மெகா கூட்டணி – திமுக பங்கேற்பதாக தகவல்!

புதுடெல்லி (22 ஜூன் 2021): வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து மெகா கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த 15 கட்சிகளுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இதில் திமுக பங்கேற்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் இருமுறை சந்தித்து விதித்துள்ளனர். இதில் நேற்றைய சந்திப்பில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியை பிரதமர்…

மேலும்...

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு ஆபத்து – என்ன சொல்கிறது சிவசேனா?

மும்பை (21 ஜூன் 2021): மஹாராஷ்ட்ராவில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சிவசேனா கட்சி கூட்டணி கட்சியான பாஜகவுடன் நட்பை முறித்துக்கொண்டு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு இணைந்து ஆட்சி அமைத்தது. இந்தநிலையில் சமீபத்தில் சிவசேனா கட்சி தலைவரும், மஹாராஷ்ட்ரா முதல்வருமான உத்தவ் தாக்ரே பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார், ஆனால் சிவசேனா பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்து ஆட்சியமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும்,…

மேலும்...

பாஜக அலுவலகம் சூறை – பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

புதுச்சேரி (20 ஜூன் 2021): புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட 50 நாட்கள் நிறைவடைந்து விட்டன. இன்னமும் அங்கு நிலையான ஆட்சி அமையவில்லை. என்ஆர் காங்கிரஸ் 3 அமைச்சர் பதவிகளையும் துணை சபாநாயகர் பதவியையும் பெற்றுக்கொண்டது. பாஜகவிற்கு 2 அமைச்சர் பதவிகள், சபாநாயகர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். தற்போது 2 அமைச்சர் பதவிகளுக்குப் போட்டோபோட்டி நடந்துகொண்டிருக்கிறது. பாஜக சார்பில் போட்டியிட்ட ஜான் குமாரும் சாய் சரவணக்குமாரும் தங்களுக்குத்…

மேலும்...

கவிழும் அபாயத்தில் பாஜக ஆட்சி!

திரிபுரா (17 ஜூன் 2021): திரிபுரா மாநிலத்தில் ஒன்பது பாஜக எம்.எல்.ஏக்கள் திரிணாமூல் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அங்கு ஆளும் பாஜக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் மேற்கு வங்க திரிணாமூல் காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்த முகுல் ராய், பாஜகவில் இணைந்தார். அதேநேரத்தில் திரிபுரா திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் பாஜகவில் இணைந்தனர். இதற்கு முகுல் ராயே…

மேலும்...

வானதியை கிண்டலடித்த எஸ்வி சேகர் – முகம் சுளிக்கும் பாஜகவினர்!

சென்னை (17 ஜூன் 2021): பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை எஸ்வி சேகர் கிண்டலடிக்கும் வகையில் டிவிட்டரில் பதிவிட்டிருப்பது பாஜகவினரை முகம் சுழிக்க வைத்துள்ளது. கோவை தெற்கு தொகுதியில போட்டியிட்டு கடைசி நேர இழுபறியில் கமலை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றவர் பாஜக வானதி. இவர் 3 நாளைக்கு முன்பு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவகத்தை திறந்து வைத்தார். இதன் திறப்பு விழாவில், வானதி சீனிவாசனின் கணவர் சீனிவாசன், மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்…..

மேலும்...

திமுக அரசின் முடிவுக்கு பாஜக வரவேற்பு!

சென்னை (14 ஜூன் 2021): பெண்களை கோயில் அர்ச்சகர்களாக நியமிக்க திமுக அரசு எடுத்த முடிவை தமிழக பாஜக வரவேற்றுள்ளது. முன்னதாக இந்து மதத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் முடிவை தமிழக பாஜக தலைமை வரவேற்றது. இந்நிலையில் பெண்களை கோயில் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பெண்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆர்வமுள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்...