ஆளுநர் பதவியிலிருந்து விலக முடிவு!

மும்பை (24 ஜன 2023): மகாராஷ்டிர ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது ஆளுநர் – முதல்வர் இடையே சிறுசிறு மோதல் நிலவி வந்தது. பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பா.ஜ.க.வுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், மகாராஷ்டிர ஆளுநர் பதவியில் இருந்து விலக பகத்சிங் கோஷ்யாரி முடிவு…

மேலும்...

மகாராஷ்டிராவில் ரெயில் நிலைய மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து!

மும்பை (27 நவ 2022): மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் உள்ள பலார் ஷா ரயில் நிலையத்தில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்தது. நடைமேடை எண் 1 மற்றும் நடைமேடை எண் 4 ஆகியவற்றை இணைக்கும் பாலம் இன்று இடிந்து விழுந்தது. மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். பாலம் இடிந்து ரயில் பாதையில் இருபது அடி உயரத்தில் இருந்து மக்கள் விழுந்தனர். அப்போது அந்த பாதையில் ரயில்கள் எதுவும் ஓடாததால் பெரும்…

மேலும்...

விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்ச்சியில் 20 பேர் பலி!

மும்பை (10 செப் 2022): மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது ஏற்பட்ட வெவ்வேறு சம்பவங்களில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கிய 10 நாள் விநாயகர் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தா மாவட்டத்தில், விநாயகர் சிலையை கரைக்கும்போது சவாங்கியில் மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்தனர், மற்றொருவர் தேவ்லியில் சிலையை கரைக்கும்போது இறந்தார் என்று ஒரு அதிகாரி கூறினார். மேலும் யவத்மால் மாவட்டத்தில்…

மேலும்...

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கு எதிராக உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கை!

மும்பை (02 ஜூலை): மகாராஷ்டிராவின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அனைத்து கட்சி பதவிகளில் இருந்தும் ஷிண்டேவை நீக்கம் செய்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். பாஜக ஆதரவுடன் புதிய மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டேவை அனைத்து கட்சிப் பதவிகளில் இருந்தும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நீக்கினார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஷிண்டே நீக்கப்பட்டுள்ளதாக சிவசேனா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழன் அன்று, மகாராஷ்டிரத்தின் 20வது முதலமைச்சராக…

மேலும்...

மகாராஷ்டிராவில் சிவசேனா போராட்டம் நடத்த திட்டம்!

மும்பை (25 ஜூன் 2022): மகாராஷ்டிராவில் குழப்பமான அரசியல் சூழல் நிலவும் நிலையில் சிவசேனா கட்சியின் தொண்டர்கள் மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் பெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்த கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவுடன் அணி திரண்டுள்ளனர். இவர்கள் அனைவரும்…

மேலும்...

மசூதிகளுக்கு அருகில் ஹனுமான் பாடல் ஒலிக்க தடை – மகாராஷ்டிரா காவல்துறை உத்தரவு!

நாசிக் (18 ஏப் 2022): மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஹனுமான் ஊர்வலம் மற்றும் பஜனையின்போது மசூதிகளில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ஒலிபெருக்கியில் ஹனுமான் பாடல் இசைக்க தடை விதித்து நாசிக் நகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நகரின் காவல் ஆணையர் தீபக் பாண்டே ANI செய்தியாளர்களிடம் கூறும்போது, ​​“ஹனுமான் ஊர்வலம் மற்றும் பஜனைக்கு முன் அனுமதி பெற வேண்டும். மசூதிகளில் பாங்கு அழைப்புக்கு முன்னும் பின்னும் 15 நிமிடங்களுக்கு ஹனுமான் பாடல் இசைக்க அனுமதி இல்லை….

மேலும்...

உத்தவ் தாக்கரே மனைவியை விமர்சித்ததற்காக பாஜக தலைவர் மீது வழக்குப் பதிவு!

புனே (07 ஜன 2022): மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மனைவி ரேஷ்மி தாக்கரேவை பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மனைவி ராஃப்ரி தேவியுடன் ஒப்பிட்டு விமர்சித்ததற்காக சமூக ஊடக பிரிவு பொறுப்பாளர் ஜிதின் கஜாரியா மீது புனே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பீகாரில் கால்நடை ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டபோது அவரது மனைவி ராஃப்ரி தேவி, முதல்வராக பதவியேற்றார். இந்த நிகழ்வை ஒப்பிட்ட…

மேலும்...

துபாயிலிருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியம்!

மும்பை (25 டிச 2021): ஒமிக்ரான் பரவிவரும் சூழலில் துபாயில் இருந்து மும்பை செல்லும் பயணிகளுக்கு ஏழு நாள் கட்டாய தனிமைப்படுத்தல் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. துபாயில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பயணிக்கும் பயணிகள் ஏழு நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, தனிநபர் RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவர். சோதனை முடிவு எதிர்மறையாக (நெகட்டிவ்) இருந்தாலும், இன்னும் ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும். நேர்மறை (பாசிட்டிவ்) சோதனை முடிவு எனில், அதிகாரிகள் நோயாளியை மருத்துவமனைக்கு…

மேலும்...

அர்ணாப் கோஸ்வாமிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன – மகாராஷ்டிரா அரசு திட்டவட்டம்!

மும்பை (07 ஜன 20221): ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமிக்கு எதிரான டிஆர்பி வழக்கில் வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று மகாராஷ்டிரா அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டிஆர்பி ரேட்டிங் வழக்கில் தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை மற்றும் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி அர்னாப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜனவரி 15 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான கபில் சிபல், தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனமான…

மேலும்...

பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்!

மும்பை (26 அக் 2020): துணிவிருந்தால் எங்கள் அரசை கவிழ்த்துப் பாருங்கள் என்று பாஜகவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சவால் விட்டுள்ளார். சிவசேனா கட்சியின் சார்பில் தசரா பேரணி மும்பை தாதர் பகுதியில் சிறிய அரங்கில் நேற்று நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக மிகப்பெரிய அளவில் சிவாஜி பார்க்கில் திறந்த வெளியில் நடத்தப்படாமல் சிறிய அளவிலேயே நடத்தப்பட்டது. இந்த தசரா பேரணியில் சிவசேனா தலைவரும், மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:…

மேலும்...