மத்திய பிரதேசத்திலும் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்த கல்லூரி!

போபால் (15 பிப் 2022): கர்நாடகாவில் தொடங்கிய ஹிஜாப் தடை விவகாரம் தற்போது மத்திய பிரதேசத்திற்கும் பரவியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில், டாடியா மாவட்டத்தில் உள்ள அக்ரானி அரசு தன்னாட்சி முதுநிலை கல்லூரி திங்கள்கிழமை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில் மாணவர்கள் ‘மதம் சார்ந்த’ உடைகள் அணிவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிந்திருந்த இரு மாணவிகளுக்கு எதிராக காவி சால்வை அணிந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, கல்லூரி…

மேலும்...

கொரோனா என்னை தாக்காது – மாஸ்க் அணியாத அமைச்சர் தரும் விளக்கம்!

போபால் (12 ஜன 2022): மத்தியப் பிரதேச அமைச்சரும் பாஜக தலைவருமான உஷா தாக்கூர், கொரோனா என்னை தாக்காது என்று கூறிக் கொண்டு மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் உலா வருகிறார். இந்தியாவில் அதி வேகத்தில் கொரோனா பரவி வருகிறது . இந்நிலையில் மத்திய பிரதேச சுகாதரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர், தனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்றும், கடந்த 30 ஆண்டுகளாக அக்னிஹோத்ர பூஜை செய்து வருவதாகவும் கொரோனா என்னை தாக்கது என்பதாகவும் கூறி மாஸ்க்…

மேலும்...

மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது பள்ளி மீது பஜ்ரங் தள் அமைப்பினர் வெறிச்செயல்!

போபால் (07 டிச 2021): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினர் பள்ளி ஒன்றின் மீது பஜ்ரங் தள் அமைப்பினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். மத்திய பிரதேசம் விதிஷா மாவட்டத்தில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் பஜ்ரங் தளம் மற்றும் விஎச்பி செயல்பாட்டாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பள்ளியில் மாணவர்கள் மதம் மாற்றுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிய நிலையில்…

மேலும்...

உத்திர பிரதேசத்தை அடுத்து மத்திய பிரதேசத்திலும் முஸ்லிம்களை குறி வைக்கும் சட்டம்!

புதுடெல்லி (27 டிச 2020): உத்தரபிரதேசத்திற்குப் பிறகு, மத்திய பிரதேச அரசு முஸ்லிம்களை குறி வைத்து மதமாற்ற தடை சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது. சர்ச்சைக்குரிய மதமாற்று தடை சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து உத்தரபிரதேசத்தில், 35 முஸ்லிம் இளைஞர்கள் ஒரு மாதத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் மாநிலத்தில் டஜன் கணக்கான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன . சட்டம் நடைமுறைக்கு வந்த மறுநாளே முஸ்லிம்களின் கைதுகள் தொடங்கிவிட்டன. சில சந்தர்ப்பங்களில், ஆதாரங்கள் இல்லா…

மேலும்...

மதம் மாறி திருமணம் செய்து கொண்டால் 10 ஆண்டுகள் சிறை!

போபால் (26 நவ 2020): மதம் மாறி திருமணம் செய்துகொண்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்கும் வகையில் மத்திய பிரதேச பாஜக அரசு சட்ட மசோதா கொண்டுவந்துள்ளது. லவ் ஜிஹாத்தை தடுக்கும் நடவடிக்கையாக இந்த மசோதாவை மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்துகிறது இந்த மசோதாவின் கீழ், மாவட்ட கலெக்டரின் அனுமதியின்றி மதம் மாறியவர்கள் திருமணம் செய்வது தண்டனைக்குரியது. இந்த மசோதா டிசம்பர் 28 ம் தேதி சட்டசபையில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பிரதேச உள்துறை…

மேலும்...
Supreme court of India

தேர்தல் ஆணையத்திற்கு எந்த உரிமையும் இல்லை – உச்ச நீதிமன்றம் காட்டம்!

புதுடெல்லி (02 நவ 2020): கமல் நாத்தின் நட்சத்திர பிரசாரகர் உரிமையை பறிக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த உரிமையும் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தப்ரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கடந்த வாரம் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்….

மேலும்...

காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்த பாஜக பிரமுகர் ஜோதிராதித்யா சிந்தியா

போபால் (01 நவ 2020): பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க சென்ற பாஜகவை சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா வாய் தவறி காங்கிரசுக்கு வாக்கு சேகரித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 3 ம் தேதி மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் மேற்கொண்ட சமீபத்தில் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா, பாஜகவுக்கு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் தப்ராவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின் போது ஜோதிராதித்யா சிந்தியா பாஜக வேட்பாளர் இம்ராதி தேவிக்கு வாக்கு சேகரித்தார்….

மேலும்...

12 மணிநேரத்தில் 7 பேர் மர்ம மரணம் – விசாரணைக்கு உத்தரவு!

போபால் (15 அக் 2020): மத்தியப் பிரதேசத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 7 பேர் மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உஜ்ஜைன் நகரில் கடந்த 12 மணி நேரத்தில் 7 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இந்த மர்ம…

மேலும்...

குழந்தைகள் கண்முன்னே விஷம் குடித்த பெற்றோர்- மத்திய பிரதேசத்தில் பரிதாபம்!

போபால் (16 ஜூலை 2020): குழந்தைகளின் கண் முனபாகவே பூச்சிக் கொல்லி மருந்துகளை பெற்றோர் உட்கொண்ட பரிதாப சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள குணா என்ற இடத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராம்குமார் அஹிர்வார் என்ற தலித் விவசாயி அரசு இடத்தில் தங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த இடத்தில் ஒரு கல்லூரி கட்ட குணா நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதற்காக அந்த விவசாயியை காலி செய்ய சொல்லி வந்துள்ளனர். இதற்கு அவர்…

மேலும்...

விலை பேசும் பாஜக – கூவத்தூர் ஸ்டைலில் எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டில் அடைப்பு!

ஜெய்ப்பூர் (11 ஜூன் 2020): ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக விலைபேசுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜெய்ப்பூரில் உள்ள ரிசார்ட்டில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆளும் காங்கிரசுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையில் ராஜஸ்தானில் முழு அளவிலான அரசியல் போர் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜக ரூ.25 கோடியை வழங்குவதாகக் கூறியுள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லாட் பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார். இதனை அடுத்து ராஜஸ்தான் காங்கிரஸ் தனது எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு…

மேலும்...