சவூதி வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் பலி!

ரியாத் (17 டிச 2022): சவுதி அரேபியாவில் வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் பகுதியில் உள்ள மஜ்ரிதா கவர்னரேட்டில் பெய்த மழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவில் பாதுகாப்பு குழு வெள்ளத்தில் இருந்து ஒருவரின் உடலை வெளியே எடுத்தது. மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சவுதி அரேபியாவில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேற்குப்…

மேலும்...

அரபிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை!

சென்னை (14 டிச 2022): அரபிக்கடல் பகுதியில் கேரளா, கர்நாடகாவை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதுகுறித்து சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரபிக்கடல் பகுதியில் கேரளா,கர்நாடகாவை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக,…

மேலும்...

சவூதியில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ரியாத் (12 டிச 2022): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு முதல் வியாழன் வரை மிதமானது முதல் பலத்த மழை, இடி, காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரியாத், ஜித்தா, மக்கா, மதீனா, தாயிப் என அனைத்து பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை எச்சரிக்கை காரணமாக ஜித்தா, ராபிக் மற்றும் குலைஸ் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக…

மேலும்...

வங்கக்கடலில் புயல் சின்னம்!

சென்னை (06 டிச 2022): வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று மாலைக்குள் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அப்போது காற்று தமிழகம் மற்றும் ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த…

மேலும்...

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பேரிடர் மீட்புப்படை விரைவு!

சென்னை (06 டிச 2022): தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறுகிறது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறும் நிலையில் டிசம்பர் 8 ஆம் தேதி இது புயலாகவும் தீவிரமடைகிறது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்படுகிறது. இந்த பெயரை ஐக்கிய அரபு நாடுகள்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

துபாய் (03 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மூடுபனியும் கூடும் என மதிப்பிடப் பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கிழக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பனிமூட்டம் காரணமாக, வாகனங்களை மெதுவாகச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பின்வரும் சாலைகளில் வேகக் குறைப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: Al Saad – Sweihan road: 80 km/h Trucks…

மேலும்...

தமிழகத்தில் சுழற்றி எடுக்கவுள்ள காற்றும் மழையும்!

சென்னை (01 டிச 2022): தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் அந்தமான் அருகே டிசம்பர் 5ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இன்றைய தினம் தமிழகம், புதுச்சேரிக்கு நல்ல மழை இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.. மேலும் அரபிக்…

மேலும்...

சவூதி அரேபியாவில் மீண்டும் கனமழை – பொதுமக்களுக்கு சிவில் பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை!

ரியாத் (30 நவ 2022): சவுதியில் மேற்கு பகுதியில் பெய்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்றும் மழை தொடரும் எனவும், மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் சிவில் பாதுகாப்பு பிரிவினர் எச்சரித்துள்ளனர். தபூக் பகுதி, துபா அல்-வாஜ், உம்லுஜ், மதீனா மற்றும் யாம்பு ஆகிய இடங்களில் நேற்று கனமழை பெய்தது. தபூக் பகுதியில் சில தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின….

மேலும்...

ஜித்தா பெருமழையில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களுக்கும் இழப்பீடு!

ஜித்தா (27 நவ 2022): ஜித்தா மழையில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் வாகனங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜித்தாவில் கடந்த வியாழன் அன்று ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சேதம் அடைந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு அந்நாட்டு சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும் என சட்ட நிபுணர் முஹம்மது அல் வுஹைபி தெரிவித்துள்ளார். சொத்துக்கள், கட்டிடங்கள், வாகனங்கள் போன்றவற்றுக்கு ஏற்படும் சேதங்கள் இழப்பீடு பெற தகுதியானவை. விரிவான காப்பீட்டுக் கொள்கைகளைக் கொண்ட வாகனங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீடு வழங்கப்பட…

மேலும்...

தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை (19 நவ 2022): தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,” தென்கிழக்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது வலு பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து…

மேலும்...