சாக்லேட்டில் விஷம் -மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

மும்பை (04 டிச 2022): மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அடையாளம் தெரியாத நபர் மாணவர்களுக்கு வழங்கிய சாக்லேட்டில் விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் வழங்கிய சாக்லேட் சாப்பிட்ட 17 மாணவர்களுக்கு உணவு விஷம். மல் இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் விநியோகித்த சாக்லேட்டை சாப்பிட்ட மாணவர்களுக்கு உணவு விஷம் ஏற்பட்டது. மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு அம்பாசாரி சாலையில்…

மேலும்...

ஹிஜாப் அனுமதி கோரிய மாணவிகளை பயங்கரவாதிகள் என அழைத்த பாஜக தலைவர்!

உடுப்பி (17 மார்ச் 2022): ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகிய மாணவிகள் “தேச விரோதிகள்” மற்றும் “பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்” என்று பாஜக மூத்த தலைவரும், உடுப்பி அரசுப் பல்கலைக்கழகக் கல்லூரி மேம்பாட்டுக் குழுவின் துணைத் தலைவருமான யஷ்பால் சுவர்ணா கூறியுள்ளார். இதுகுறித்து சுவர்ணா செய்தியாளர்களிடம் கூறும்போது, “நீதிமன்றத்தை அணுகியது மாணவிகள் அல்ல, தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அறிக்கைகள் கொடுப்பதன் மூலம் கற்றறிந்த நீதிபதிகளை…

மேலும்...

ஒன்றிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை (12 மார்ச் 2022): உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்கு ஒன்றிய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் கடைசி குழுவினரை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் வரவேற்றார். இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட ஒன்றிய அரசுக்கும், வெளியுறவுத் துறை அமைச்சருக்கும்…

மேலும்...

உணவு, குடிநீர் கிடைக்கவில்லை – உக்ரைனிலிருந்து வந்த தமிழக மாணவர் தகவல்!

தேனி (26 பிப் 2022): உக்ரைனில் மாணவர்களுக்கு குடிநீரோ உணவோ கிடைப்பது இல்லை என்று உக்ரைனிலிருந்து தமிழகம் வந்துள்ள தேனீ மாணவர் தெரிவித்துள்ளார். உக்ரைனைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவ வீரர்கள் போர் தொடுத்து வருகின்றனர். பதற்றமான சூழலுக்கு நடவே தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளனர். இந்நிலையில் போர் துவங்குவதற்கு சற்று முன்பு உக்ரைனிலிருந்து தமிழகம் வந்துள்ள தேனி மாணவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள தகவலில் “உக்ரைன் கீவ் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில்…

மேலும்...

எந்த சூழலிலும் ஹிஜாபை கைவிடமாட்டோம் – மாணவிகள் திட்டவட்டம்!

பெங்களூரு (05 பிப் 2022): எந்தச் சூழலிலும் ஹிஜாபை கைவிடமாட்டோம் என்று கர்நாடக கல்லூரி மாணவிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பல கல்லூரிகளில் மாணவிகள் வகுப்புக்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இது ஒருபுறமிருக்க முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது, இல்லையென்றால் நாங்கள் காவித் துண்டு அணிந்து வருவோம் என்று ஆர் எஸ் எஸ் அமைப்பு மாணவர்கள் காவித் துண்டுகளுடன் கல்லூரிகளுக்குள் நுழைந்து போராட்டம்…

மேலும்...

முதல்வர் ஸ்டாலினிடம் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் திடீர் கோரிக்கை!

சென்னை (17 ஜன 2022): சென்ற ஆண்டைப்போல இந்த வருடமும் 12ஆம் வகுப்புத் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அளிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மாணவர்கள் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளனர். 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனாவுக்கு தற்போது வரை முடிவு காலம் வரவில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு கல்வி முறையில் பெரும் மாற்றங்கள் நடந்துள்ளன. கடந்த இரண்டு வருடத்தில்…

மேலும்...

மாணவர்கள் பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள – வீடியோ

மாணவர்கள் பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுரை வீடியோ

மேலும்...

நடிகர் சூர்யாவின் அடுத்த பரபரப்பு ட்வீட்!

சென்னை (14 செப் 2020): ஒன்றிணைவோம்; மாணவர்களோடு துணை நிற்போம் என்று நடிகர் சூர்யா மற்றும் ஒரு பரபரப்பு வீடியோ ட்விட் வெளியிட்டுள்ளார். நீட் தேர்வு அச்சம்காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதுதொடர்பாக நடிகர் சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை. கொரோனா…

மேலும்...

பள்ளிகளை திறக்கலாமா? – பெற்றோர்களை அணுக தமிழக அரசு முடிவு!

சென்னை (01 ஜூன் 2020): பள்ளிகளை திறந்தால் பிள்ளைகளை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்புவார்களா? என்பது குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் மற்றும் தற்போதைய கொரோனா சூழலில் பள்ளிகள் திறப்பு என்பது சாத்தியமாக இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். ஜூன், 15 முதல் 25 வரை தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடக்கிறது. தேர்வு முடிந்த பின், ஜூலை மாதத்தில் தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்படும். அதன்பின் அப்போதைய…

மேலும்...

நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள், சாவர்க்கரின் பிள்ளைகளல்ல – ரஜினியை விளாசிய ஜேஎன்யூ மாணவர் தலைவர்!

சென்னை (23 பிப் 2020): மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் ரஜினிக்கு ஜே.என்.யு மாணவர் தலைவர் அய்ஷி கோஷ் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அனைவருக்குமான கல்வியை உறுதி படுத்த வேண்டும், கல்வியை தனியார்மயமாக்கக் கூடாது. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கு பெற்ற ஜே.என்.யு. மாணவர் தலைவர் அய்ஷி கோஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது,…

மேலும்...