50 வருடங்களாக மசூதியை பராமரித்து வரும் இந்து குடும்பத்தினர்!

கொல்கத்தா (20 பிப் 2022): மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸில் மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அங்குள்ள பராசத்தில் உள்ள அமனாதி மசூதியின் பராமரிப்பாளர்களாக கடந்த 50 ஆண்டுகளாக ஒரு இந்து குடும்பம் செயல்பட்டு வருகிறது. வடக்கு 24 பர்கானாவின் பராசத்தை சேர்ந்த மூத்த குடிமகன் தீபக் குமார் போஸ் மற்றும் அவரது மகன் பார்த்த சாரதி போஸ் ஆகியோர் தற்போதைய சூழலில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர். இந்துக்களின் ஆதிக்கம் நிறைந்த நாபோபள்ளி பகுதியில்…

மேலும்...

19 வயது முஸ்லீம் வாலிபர் படுகொலை -4 ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் கைது!

கடக் (19 ஜன 2022): கர்நாடகாவில் 19 வயது வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தின் நர்குண்டு நகரில் சமீர் மற்றும் ஷம்சீர் ஆகியோர் திங்கள்கிழமை இரவு 7:30 மணியளவில் இருச்சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது 10க்கும் மேற்பட்ட கும்பல் அவர்களது வாகனத்தை மறித்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. அவர்களிடமிருந்து இருவரும் தப்பிச் செல்ல முயன்ற போது விடாமல் துரத்திச் சென்று தாக்கியுள்ளனர்….

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்புவாத பேச்சு – ஆயுதப் படை தலைவர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம்!

புதுடெல்லி (01 ஜன 2022): ஹரித்வாரில் முஸ்லிம்களுக்கு எதிராக சமீபத்தில் நடந்த வகுப்புவாத பேச்சுகளைக் கண்டித்து முன்னாள் ஆயுதப்படை தலைவர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் “வெறுப்பின் பொது வெளிப்பாடுகளுடன் வன்முறையைத் தூண்டுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது, இது உள்நாட்டுப் பாதுகாப்பின் மீறல்களுக்கு வழிவகுக்கும், நமது நாட்டின் சமூக கட்டமைப்பை சீரழித்துவிடும்” என்று முன்னாள் ஆயுதப்படை தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். நமது எல்லையில் தற்போது நிலவும் சூழ்நிலையில், தேசத்திற்குள் அமைதி மற்றும்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிராக இணையத்தில் பரவும் தவறான தகவல்!

புதுடெல்லி (28 டிச 2021): ‘இந்து எதிர்ப்புப் பாடல் ஒன்று இசுலாமியர்களால் இயற்றப்பட்டது’ என்ற தவறான தகவல் இணையத்தில் பரவி வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான காட்சிகள் தயாராகி வருகின்றன. அதேபோல முஸ்லிம்களுக்கு எதிரான போலியான தகவல்களும் பரவ ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் தேர்தலுக்கு முன்பு “இந்து விரோத உணர்வைத் தூண்டுவதற்காக முஸ்லீம்களால் இயற்றப்பட்டது” என்ற கூற்றுடன் ஒரு பாடல் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் பாடலின் இசையமைப்பாளர் ஒரு இந்து என்றும்…

மேலும்...

முஸ்லிம்களை படுகொலை செய்யுங்கள் – அதிர்ச்சி அடைய செய்யும் இந்துத்வா அமைப்பினரின் மாநாடு!

புதுடெல்லி (25 டிச 2021): முஸ்லிம்களை படுகொலைச் செய்ய வேண்டும் என்று உத்தர்காண்டில் நடைபெற்ற இந்துத்துவா மாநாட்டில் பிரகடனம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர்காண்ட் மாநிலம் ஹரித்வாரில் பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் இணைந்து நடத்திய ‘தர்ம சன்சத்’ என்ற பெயரில் இந்துத்துவ மாநாடு நடந்தேறியுள்ளது. அதில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளும் முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும் என்பதாகவும் பிரகடனப்படுத்தப்பட்டள்ளது. இந்த மாநாடு டிசம்பர் 17 முதல் 19 வரை நடைபெற்றது. விழாவில் பேசிய தலைவர்கள்…

மேலும்...

முன்னாள் வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி இந்து மத்திற்கு மாறினார்!

லக்னோ (06 நவ 2021): உத்திர பிரதேச முன்னாள் வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி இந்து மதத்திற்கு மாறினார் காஜியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோவிலின் தலைமை பூசாரி சுவாமி யதி நரசிங்கானந்த் என்பவரால் ரிஸ்வி இந்து மதத்திற்கு மாற்றப்பட்டார். மத மாற்றத்திற்குப் பிறகு ரிஸ்வியின் புதிய பெயர் ஜிதேந்திர நாராயண் சிங் என்று மாற்றிக்கொண்டார். முன்னர், இவர் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

மதமாற்ற நாடகமாடிய பாஜக – சிக்கலில் போலீஸ்!

அலிகார் (30 செப் 2201): உத்தர பிரதேச மாநில அலிகார் நகரில், ஒரு முஸ்லீம் இளைஞர் இந்துவை மதம் மாற்றுவதாக விடியோ வெளியான நிலையில் அதன் உண்மை தன்மை அறியாமல் நடவடிக்கை எடுத்து உ.பி போலீஸ் சிக்கலில் சிக்கியுள்ளது. வைரலான இந்த வீடியோவை, பாஜகவினர் அலிகார் போஸிஸிடம் காண்பித்து புகார் அளிக்க. உடனே, செயல்பட்ட போலீஸ மதமாற்றம் செய்தவர் மீது மட்டுமின்றி… மதம் மாறியவர் மீதும் ஜாமீனில் வெளியே வர முடியாத கடுமையான சட்டப்படி இருவர் மீதும்…

மேலும்...

கோவிலுக்கு வாட்டர் கூலர் அன்பளிப்பு வழங்கிய முஸ்லீம் – அடித்து நொறுக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்!

அலிகார் (01 ஜூலை 2021): கோயிலுக்கு முஸ்லீம் ஒருவர் நன்கொடை அளித்த வாட்டர் கூலரில் உள்ள முஸ்லீம் பெயர் அடங்கிய தகடுகளை அடித்து நொறுக்கியவர்கள் மீது, கோயில் குழு அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். உத்திரப் பிரதேசம் அலிகரில் உள்ள ஒரு கோவிலுக்கு அப்பகுதி சமாஜ்வாடி கட்சித் தலைவர் சல்மான் ஷாஹித் வாட்டர் கூலரை அன்பளிப்பாக வழங்கினார். அதில் சல்மான் ராஷித் பெயர் பொறிக்கப் பட்டிருந்தது. சமீபத்தில் கோவிலுக்குள் நுழைந்த பஜ்ரங் தள் அமைப்பினர் சிலர், ஒரு முஸ்லீம்…

மேலும்...

பல்வேறு மதங்களிலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய 2000 பேர்!

துபாய் (28 ஜூன் 2021) பல்வேறு நாடுகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த 2,000 பேர் இந்த 2021 ஆண்டில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக, முகமது பின் ரஷீத் இஸ்லாமிய கலாச்சார மையம் அறிவித்துள்ளது. துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறையின் (ஐ.ஏ.சி.ஏ.டி) கீழ் செயல்பட்டு வரும் முகமது பின் ரஷீத் மையம் ஆகும். இது, பொதுமக்களுக்கு இஸ்லாமிய கலாச்சாரத்தையும் அதன் சகிப்புத்தன்மையுள்ள போதனைகளையும் கற்பிக்கும் அறக்கட்டளையாகும். இது, இஸ்லாமிய மதத்தைப் பற்றி தெரிந்து…

மேலும்...

தலித் இளைஞர் முஸ்லீம் பெண் படுகொலை – கவுரவக் கொலையா?

பெங்களூரு (26 ஜூன் 2021): தலித் இளைஞரும் முஸ்லீம் பெண்ணும் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் சலடஹில் என்ற கிராமம் உள்ளது.. இங்கு பசவராஜ் மடிவலபா படிகர் என்ற தலித் இளைஞர் வசித்து வந்தார்.. இவருக்கு 18 வயதாகிறது. அதே கிராமத்தை சேர்ந்த டவால்பி பந்தகிசாப் என்ற இஸ்லாமிய பெண்ணும் வசித்து வந்தார். இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருவரும் நேற்று முன் தினம் வயல் வெளி…

மேலும்...