Sonia Gandhi

மீண்டும் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியின் பெயர் பரிந்துரை!

புதுடெல்லி (14 செப் 2022): காங்கிரஸின் தலைவராக சோனியா காந்தியின் பெயரை பரிந்துரைக்க அனைத்து மாநில காங்கிரஸ் பிரிவுகளும் தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதேச காங்கிரஸ் கமிட்டி, சோனியா காந்தியை தலைவர் பதவிக்கு இம்மாதம் 20ஆம் தேதிக்குள் முன்னிறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெறுகிறது….

மேலும்...

சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வதாக ராகுல் காந்தி மீது புகார்!

புதுடெல்லி (14 செப் 2022): பாரத் ஜோடோ யாத்ராவை சட்ட ரீதியாக சிக்கலாக்க தேசிய குழந்தைகள் நலக் குழு மூலம் முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருவதாக தெரிகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான கன்னியாகுமரி-காஷ்மீர் பாரத் ஜோடோ யாத்திரை குழந்தைகளை அரசியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. ராகுல் காந்தி மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அந்த…

மேலும்...

தமிழ் நாட்டிற்கு நன்றி – நாளுக்குநாள் ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு!

கன்னியாகுமரி (11 செப் 2022): காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் தனது நடைபயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்தார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தில் 56 கி.மீ தூரத்தைக் கடந்துள்ளார் ராகுல். குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபயணம் சென்ற ராகுல்காந்தி, இன்று கேரள எல்லையில் தனது பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். கேரளா, செறுவாரகோணத்தில் இருந்து…

மேலும்...

ராகுல் காந்தி டி-சர்ட் விவகாரம் – பாஜகவுக்கு மஹுவா மொய்த்ரா எச்சரிக்கை!

புதுடெல்லி (10 செப் 2022): ராகுல் காந்தி மீது பாஜகவின் ‘டி-சர்ட்’ கேலிக்குப்பதிலளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பாஜக எல்லை மீறுவதாக தெரிவித்துள்ளார். நடந்து வரும் “பாரத் ஜோடோ யாத்ரா” பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அவர் அணிந்திருந்த டி-சர்ட்டின் விலை 41,000 ரூபாய்க்கு மேல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக விமர்சித்துள்ளது. இந்நிலையில் பாஜகவின் கீழ்த்தரமான விமர்சனங்களை எதிர் கட்சித் தலைவர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து…

மேலும்...

உண்மை மட்டுமே சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்டும் – ராகுல் காந்தி!

புதுடெல்லி (27 ஜூலை 2022): செவ்வாயன்று டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசாங்கத்தைப் பற்றி குறிப்பிடுகையில், இந்த சர்வாதிகாரத்திற்கு உண்மைதான் முடிவு கட்டும் என்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில் “சர்வாதிகாரத்தைப் பாருங்கள், அமைதியான ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடியாது, பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து விவாதிக்க முடியாது. காவல்துறை மற்றும் ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம், எங்களை கைது செய்தாலும், உங்களால் ஒருபோதும் எங்களை…

மேலும்...

தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்தியா – ராகுல் காந்தி பரபரப்பு தகவல்!

புதுடெல்லி (03 பிப் 2022): உலக நாடுகளிலிருந்து இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில் அனைத்து பக்கமும் வெறுப்புகளால் நமது நாடு சூழப்பட்டிருக்கிறது. உலக நாடுகளால் தனித்து விடப்பட்டிருக்கிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆபத்தான நிலையில் உள்ளது நம் தேசம். இதை நான் விரும்பவில்லை. இது என்னை கவலையடைய செய்கிறது. சீனாவையும் பாகிஸ்தானையும் பிரித்து வைப்பதுதான் இந்தியாவின் இலக்கு ஆகும். ஆனால் பாஜக அரசோ வெளியுறவுக் கொள்கை மூலம் இரண்டையும் ஒன்றிணைத்து…

மேலும்...

பாஜகவால் காலூன்ற முடியாது – ராகுலுக்கு அண்ணாமலை பதில்!

சென்னை (03 பிப் 2022): தமிழ்நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்’ என்று ராகுல் காந்திக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டில் பாஜகவால் ஆதிக்கம் செலுத்த முடியாது எனவும், தமிழ்நாட்டிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் பாஜகவை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இது குறித்து தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பதில் கருத்தை ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,…

மேலும்...

காங்கிரஸ் இந்துக்கள் கட்சி – ராகுல் காந்தி உரை!

ஜெய்ப்பூர் (13 டிச 2021): காங்கிரஸ் கட்சியின் பிரம்மாண்ட மாநாடு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி, இந்து மற்றும் இந்துத்துவா என்பதற்கு வித்தியாசம் இருப்பதாக தெரிவித்தார். இரண்டும் வெவ்வேறானவை எனக்கூறிய அவர், ‘ நான் ஒரு இந்து, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்துத்துவவாதிகள்’ என கடுமையாக விமர்சித்தார். உண்மையை நேசிப்பவர்கள் இந்துக்கள் எனக் கூறிய ராகுல்காந்தி, மகாத்மா காந்தி உண்மையைத் தேடியவர் எனத் தெரிவித்தார். ஆனால், நாதுராம் கோட்சே இந்துத்துவவாதி,…

மேலும்...

மூன்றாவது அணியை ஒருங்கிணைக்கும் மம்தா – காங்கிரஸ் மீது சாடல்!

புதுடெல்லி (02 டிச 2021): காங்கிரஸ் தவிர மூன்றாவது அணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி களமிறங்கியுள்ளார். மேற்கு வங்க இடைத்தேர்தலில் பவானிபூரில் அமோக வெற்றி பெற்ற பிறகு, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து பரந்த கூட்டணியை அமைப்பதுதான் மம்தா பானர்ஜியின் நடவடிக்கை. ஆனால் தற்போது UPA மாற்றுக் கூட்டணி என்ற நிலைப்பாட்டை மம்தா எடுத்துள்ளார். நேற்று முன் தினம் மகாராஷ்டிரா வந்தடைந்த மம்தா பானர்ஜி, இன்று சரத் பவாரை…

மேலும்...

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ 4 லட்சம் வழங்க ராகுல் காந்தி கோரிக்கை!

புதுடெல்லி (24 நவ 2021): கோவிட்டால் இறந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ” கோவிட் காரணமாக இறந்தவர்கள் குறித்த நம்பகத்தகுந்த தகவல்களை அரசு வழங்க வேண்டும். அதேபோல், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கை. மக்களின் வேதனையை அரசு குறைப்பதுடன், அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குஜராத் மாடல் என பரபரப்பாக…

மேலும்...