குவைத்தில் சட்ட விரோதமாக 60 வயதுக்கு மேல் இக்காமா புதுப்பித்தது குறித்து விசாரணை!

குவைத் (14 ஜூலை 2021): குவைத்தில் 60 வயதுக்கு மேல் உள்ள வெளிநாட்டவர்களின் உரிமத்தை (இக்காமா) புதுப்பித்த அதிகாரிகளுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் விசாரணையை தொடங்கியுள்ளது. குவைத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 157 வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கள் இகாமாவை புதுப்பித்திருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 35 ஊழியர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குவைத்தில் இளங்கலை பட்டம் பெற்ற 60 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு பணி அனுமதி புதுப்பிக்கப்படலாம். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அரிய சிறப்பு கல்வித் தகுதி…

மேலும்...

இந்தியாவுக்கு விமான போக்குவரத்து எப்போது? – வளைகுடா வாழ் இந்தியர்கள் கவலை!

ரியாத் (11 ஜூலை 2021): இந்தியாவில் கோவிட் பாதிப்பு ஒருபுறம் என்றால் கேரளாவில் ஜிகா வைரஸும் பரவி வருவதால் சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கலில் சிக்கல் ஏற்படுமோ என்று இந்தியர்கள் கவலை அடைந்துள்ளனர். கொரொனா பாதிப்பு உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் இரண்டாவது அலை பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. தற்போது இந்தியாவில் கொரானா குறைந்து வருவதால் திருப்தி அடைந்து வரும் வளைகுடா வாழ் இந்தியர்கள் கடந்த ஒன்றரை வருடமாக தடையில்…

மேலும்...

கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் கத்தார் நாட்டிற்கு அங்கீகாரம்!

தோஹா (10 ஜூலை 2021): கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் வளைகுடா நாடுகளில் கத்தார் நாடு இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஜெர்மன் பத்திரிகையான ‘டெர் ஸ்பீகல்’ வெளியிட்டுள்ள பட்டியலில் பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. லக்சம்பர்க், நோர்வே மற்றும் டென்மார்க் இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. ஆசிய நாடுகளான தைவான் ஐந்தாவது இடத்திலும், சிங்கப்பூர் ஆறாவது இடத்திலும், ஜப்பான் ஏழாவது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் கத்தார் உலகளவில் 15 வது இடத்தில் உள்ளது….

மேலும்...

மிகக் குறைவான வாழ்க்கை செலவை உள்ளடக்கிய நகரம் குவைத்!

குவைத் (07 ஜூலை 2021): வளைகுடா நாடுகளில் மிகக் குறைவான செலவு செய்யக்கூடிய நகரம் என்ற சிறப்பை குவைத் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் நம்பியோ இன்டெக்ஸ் என்ற வலைத்தளம் இதுகுறித்த பட்டியல் ஒன்றை வெளியிடும். அது வெளியிட்டுள்ள பட்டியலில் வளைகுடாவில் அதிக வாழ்க்கைச் செலவு கொண்ட நகரங்களின் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரத்திலும் தினசரி தேவைகள் மற்றும் உணவு, செலவு மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவற்றை உள்ளடக்கி இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில்…

மேலும்...

கோவிட் காரணமாக வெளிநாடுகளில் இறந்த தமிழர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை!

அபுதாபி (04 ஜூலை 2021);கோவிட் 19 பாதிப்பால் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடாவில் இறந்த தமிழர்களுக்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவிடால் இறந்த வளைகுடா கேரளவாசிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கேரளா அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று புகழ்பெற்ற நிறுவனமான லூலூ குழும உரிமையாளர் எம்.ஏ. யூசுப் அலி அபுதாபியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், கோவிட் காரணமாக வெளிநாடுகளில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க உரிமை உண்டு கேரளா…

மேலும்...

பல்வேறு மதங்களிலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய 2000 பேர்!

துபாய் (28 ஜூன் 2021) பல்வேறு நாடுகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த 2,000 பேர் இந்த 2021 ஆண்டில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக, முகமது பின் ரஷீத் இஸ்லாமிய கலாச்சார மையம் அறிவித்துள்ளது. துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறையின் (ஐ.ஏ.சி.ஏ.டி) கீழ் செயல்பட்டு வரும் முகமது பின் ரஷீத் மையம் ஆகும். இது, பொதுமக்களுக்கு இஸ்லாமிய கலாச்சாரத்தையும் அதன் சகிப்புத்தன்மையுள்ள போதனைகளையும் கற்பிக்கும் அறக்கட்டளையாகும். இது, இஸ்லாமிய மதத்தைப் பற்றி தெரிந்து…

மேலும்...

கோடைக்கால விடுமுறை – கத்தார் கல்வி அமைச்சகம் எச்சரிக்கை!

தோஹா (05 மார்ச் 2021): கத்தார் நாட்டில் பள்ளி ஆசிரியர்கள் குறுகியகால கோடை விடுமுறையில் விமான பயணம் மேற் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்குப் பிறகு மார்ச் 13 முதல் மார்ச் 18 வரை விடுப்பு கிடைக்கும். கோவிட் கால சூழலாக இருப்பதால் குறுகிய விடுப்பில் விமான பயணம் மேற்கொண்டால் சரியான நேரத்தில் கத்தாதிரும்புவது கடினம் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 21 முதல் கோவிட் தடுப்பூசி போடாத ஊழியர்களை…

மேலும்...

பாலஸ்தீன முன்னேற்றத்திற்கான பைடன் திட்டம் – அரபு நாடுகள் வரவேற்பு!

துபாய் (28 ஜன 2021): பாலஸ்தீனத்திற்கு சாதகமாக தீர்வு ஏற்படுத்தப்படும் என்ற பைடன் நிர்வாகத்தின் முடிவை அரபு நாடுகள் வரவேற்றுள்ளன. அமெரிக்க அதிபர் பைடன் ஆட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். ஏற்கனவே ட்ரம்ப் நிர்வாகம், முஸ்லீம் நாடுகள் அமெரிக்காவில் நுழைய விதித்த தடையை நீக்கினார். இந்நிலையில் டிரம்ப் நிர்வாகத்தால் முடிவுக்கு வந்த பாலஸ்தீனத்துடனான இராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்க உள்ளதாக பைடன் அறிவித்துள்ளார். மேலும் பாலஸ்தீனிய சமூகம் மீது “அனுதாப நிலைப்பாட்டை” எடுக்கும் என்று பிடன்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெட் அலர்ட்!

துபாய் (17 ஜன 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் உட்பட பல பகுதிகளில் கடும் மூடுபனி மற்றும் மங்கலான கால சூழ்நிலையால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது. அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மான் பகுதிகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

ஓமானில் தண்டனை இல்லாமல் நாடுகளுக்கு திரும்பி செல்ல கால அளவு நீட்டிப்பு!

மஸ்கட் (06 ஜன 2021): போதுமான ஆவணங்கள் இல்லாமல் ஓமானில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களை திருப்பி அனுப்பும் திட்டம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, ஓமானின் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், அமுறையான ஆவணங்கள் இல்லாமல் ஓமானில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களை ஆபராதம் அல்லது தண்டனை இல்லாமல் திருப்பி அனுப்பும் திட்டம் டிசம்பர் 31 வரை அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஓமானிய தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது….

மேலும்...