அதானி அம்பானி நிறுவனங்களின் விற்பனை கடும் பாதிப்பு – கடுங் குளிரிலும் தொடரும் விவசாயிகள் போராட்டம்!

புதுடெல்லி (25 டிச 2020): டெல்லியில் தொடர்ந்து நடந்து வரும் விவசாயிகள் போராட்டதில் இதுவரை 32 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை திருப்திப்படுத்துவதற்காக மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை முன்வைத்திருந்தாலும், சட்டம் திரும்பப் பெறும் வரை தாங்கள் சமரசம் செய்ய மாட்டோம் என்று விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். ஆனால் சட்டத்தை திரும்பப் பெறாமல் மத்திய அரசு பிடிவாதமாகவே உள்ளது.

மேலும்...

விவசாயிகள் போராட்டத்தை அடுத்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் திடீர் முடக்கம்!

புதுடெல்லி (21 டிச 2020): டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் நீக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மத்திய அரசிற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நேரடி வீடியோவைப் பகிர்ந்த பின்னர் ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ பக்கத்தில் பதியப்பட்ட வீடியோ அதிலிருந்து திடீரென நீக்கப் பட்டதோடு, அந்த கணக்கும் முடக்கப்பட்டது. மூன்று மணி நேரம் கழித்து கணக்கு மீட்டமைக்கப்பட்டது. அதில் பதியப்பட்ட பதிவு பேஸ்புக் சமூக விதிமுறைகளுக்கு எதிரானது…

மேலும்...

ராமர் கோவிலுக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கும் முடிச்சு போடும் யோகி ஆதித்யநாத்!

லக்னோ (18 டிச 2020): அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பிடிக்காதவர்களே விவசாயிகள் போராட்டத்தை பின்னின்று இயக்குகிறார்கள் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். விவசாய சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள யோகி ஆதித்யநாத், இதுகுறித்து கூறுகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை பிடிக்காதவர்கள் விவசாயிகளை உசுப்பேற்றி நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த முயற்சிப்பதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ‘இந்தியா ஒரு சிறந்த இந்தியாவாக இருக்க விரும்பாத மக்கள் போராட்டத்தின் பின்னால் உள்ளனர். ஆதரவு…

மேலும்...

விவசாயிகளுக்காக தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட மதகுரு!

புதுடெல்லி (17 டிச 2020): விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் டெல்லியில் உள்ள சிங்கு எல்லையில் ஒரு சீக்கிய மதகுரு பாபா ராம்சிங் தற்கொலை செய்து கொண்டுள்ளார். விவசாயிகளின் அவலத்தால் விரக்திடைந்த அறுபத்தைந்து வயது பாபா ராம்சிங் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள கடிதம் விவசாயிகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை தெளிவுபடுத்துகிறது. “உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிவரும் விவசாயிகளின் நிலைமை என்னைப் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அரசு அவர்களுக்கு நீதி வழங்கவில்லை..விவசாயிகளின்…

மேலும்...

அம்பானி வீட்டை முற்றுகையிட விவசாயிகள் முடிவு!

புதுடெல்லி (17 டிச 2020): விவசாயிகளின் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, அம்பானி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த சட்டங்கள் விவசாயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைய வழிவகை செய்யும் என கூறப்படுகிறது. இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மும்பையில்…

மேலும்...

சங் பரிவாருக்கு விடை கொடுத்த மோச்சி – இன்று டெல்லியில் விவசாயிகளுடன் போராட்டம்!

புதுடெல்லி (16 டிச 2020): அன்று சங் பரிவருக்காக கொடியை ஏந்தி குஜராத் கலவரத்தில் ஈடுபட்ட அசோக் மோச்சி, இன்று சிவப்பு கொடியுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் குஜராத் இனப்படுகொலையின் முக்கிய நபராக அசோக் மோச்சியை சங் பரிவார் பயன்படுத்திக் கொண்டது. தன்னை இனப்படுகொலையின் ஒரு பகுதியாக ஆக்குவது உட்பட சங்க பரிவாரின் அனைத்து அட்டூழியங்களையும் அசோக் மோச்சி பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். பாஜகவிடமிருந்து விடை பெற்ற அசோக் மோச்சி,பல இடங்களில் சங்க பரிவருக்கு எதிரான போராட்டங்களில் கலந்து…

மேலும்...

மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதம் – மேலும் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்!

புதுடெல்லி (16 டிச 2020): விவசாய சட்டங்களுக்கு எதிராக நடந்துவரும் விவசாயிகளின் போராட்டம், மேலும் தீவிரமடைந்து வருகிறது. போராட்டம் துவங்கி, இன்றோடு 21 நாட்களாகின்றன. டெல்லி-நொய்டா எல்லையில் உள்ள விவசாயிகள், இன்று அப்பகுதியை முற்றிலுமாக சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பெண்கள் உட்பட உழவர் குழுக்கள் ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து தொடர்ந்து வருகின்றனர். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருகிறது. அதே சமயம், “இந்தச் சட்டம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதாகவும், உண்மையான…

மேலும்...

அமித் ஷாவின் கோரிக்கையை ஏற்க விவசாயிகள் மறுப்பு – திங்கள் கிழமை தேசிய அளவில் போராட்டம்!

புதுடெல்லி (09 டிச 2020): வேளாண் சட்டத்தை திரும்பப்பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதேவேளை சில திருத்தங்கள் செய்ய எழுத்துப் பூர்வமாக அறிவிக்க தயாராக உள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார். அனால் இதனை ஏற்க விவசாயிகள் மறுத்துவிட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று (புதன்கிழமை) 14-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது. விவசாய சங்க பிரதிநிதிகளிடம் மத்திய…

மேலும்...

விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் கார்த்தி குரல்!

சென்னை (06 டிச 2020): விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் கார்த்தி குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்த அவரது ட்வீட்டர் பதிவில், “நீர் பற்றாக்குறை மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக விவசாயிகள் பாதிப்படைவது ஒருபுறம் என்றால், இதுபோன்ற சட்டங்களாலும் விவசாயிகள் பாதிக்கபப்டுகின்றனர். என்று கார்த்தி தெரிவித்துள்ளார். மேலும் “விவசாய மசோதாவை எதிர்த்து விவசாயிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் ஒற்றை அடையாளமாக அவர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக அணிவகுத்துள்ளனர்.” என்று கார்த்தி கூறியுள்ளார்…..

மேலும்...

மத்திய அரசுக்கு விவசாயிகள் மீண்டும் கிடுக்கிப்பிடி – தோல்வியில் முடிந்த ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை!

புதுடெல்லி (05 டிச 2020): விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது. விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடந்தது.. விதிகளை ரத்து செய்யாமல் எந்த விவாதமும் இருக்காது என்று விவசாயிகள் தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். விதிகளை வாபஸ் பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாவிட்டால் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாக விவசாயிகள் தெளிவுபடுத்தியிருந்தனர். அதே நேரத்தில், சட்டங்களை ரத்து செய்வது…

மேலும்...