ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் எதிர் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் நாட்டை அவமதித்ததாகக் கூறி ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை ரத்து செய்ய பாஜக கோரி வருகிறது…

மேலும்...

அதானி விவகாரம் ஊடகங்களில் வெளியாவதை தடுக்க முடியாது – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

புதுடெல்லி (25 பிப் 2023): அதானி குழுமம்-ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை உச்சநீதிமன்றம் தடுக்காது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெளிவுபடுத்தினார். அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை நீதிமன்றம் உத்தரவிடும் வரை நிறுத்தக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், தர்க்கரீதியான வாதங்களை முன்வைக்க மனுதாரரை கேட்டுக் கொண்டுள்ளது. தலைமை நீதிபதி பி.எஸ்.நரசிங்க மற்றும் ஜே.பி.பர்திவாலா…

மேலும்...

தொடர்ந்து சரிவை சந்திக்கும் அதானி குழுமம் – கண்காணிப்பை தீவிரப்படுத்தும் செபி!

புதுடெல்லி (23 பிப் 2023): பங்குச்சந்தையில் கௌதம் அதானியின் நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ள நிலையில், செபி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. கௌதம் அதானியின் அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களின் பொறுப்புகள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகளை செபி கண்காணித்து வருகிறது. சட்டச் சிக்கல்களுக்குப் பயந்து, அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து ஓரியண்ட் சிமெண்ட்ஸ் விலகியுள்ளது. சுமார் 25 லட்சம் கோடியாக இருந்த அதானி குழும நிறுவனங்களின் தற்போதைய மதிப்பு 7.5 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. நேற்று மட்டும் அதானி எண்டர்பிரைசஸ்…

மேலும்...

அதானி விவகாரத்தில் எஸ்பிஐ, எல்ஐசி க்கு அழுத்தம் தரப்பட்டதா? – பிரதமருக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!

புதுடெல்லி (19 பிப் 22023): அதானி விவகாரத்தில் பிரதமர் மவுனம் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அதானி குழும பங்குகளில் முதலீடு செய்யும்படி எல்ஐசி, எஸ்பிஐ நிறுவனங்களுக்கு அழுத்தம் தரப்பட்டதா? எனவும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜெய்ராம் ரமேஷ் தன் டிவிட்டரில், ‘‘அதானி என்டர்பிரைசஸ் பொதுப்பங்குகளில் முதலீடு செய்யும்படி பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி, எஸ்பிஐ வங்கிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா?. இந்த விவகாரத்தில் இன்னமும் பிரதமர் மோடி…

மேலும்...

அதானி விவகாரத்தில் ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (18 பிப் 2023): அதானி விவகாரத்தில் இதுகுறித்த குழுவிற்கு ஒன்றிய அரசால் சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பிக்கப்பட்ட பெயர்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவை ஆய்வு செய்ய உச்ச ஒன்றிய அரசு குழு ஒன்றை நியமித்து அதன் பெயரை சீலிடப்பட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தது அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் நேரடியாகக் குழுவை நியமிக்கும் என்றும். மத்திய அரசால் சீல் வைக்கப்பட்ட உறையில்…

மேலும்...

22 நாட்களில் அதானி பங்குகள் பாதிக்கு மேல் இழப்பு!

மும்பை (14 பிப் 2023): ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதில் இருந்து அதானி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கௌதம் அதானி தனது நிகர மதிப்பில் சரிவைக் கண்டு வருகிறார். அவரது நிறுவனப் பங்குகள் இன்றும் தொடர்ந்து சரிவை சந்தித்தது. வெறும் 22 நாட்களில் 66 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதானி இழந்துள்ளார். இன்று மதியம் 1 மணி நிலவரப்படி, அதானி கிரீன், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், என்டிடிவி, அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் உள்ளிட்ட பெரும்பாலான அதானி…

மேலும்...

இன்றும் சரிவை சந்தித்த அதானி நிறுவன பங்குகள்!

மும்பை (13 பிப் 2023): சமீபத்தில் உலகின் டாப் 20 பில்லியனர்கள் பட்டியலில் ஒரு இடத்தை இழந்த கௌதம் அதானியின் குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து இரத்தம் வருவதால், இன்று அவரது நிகர மதிப்பு 2.4 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது. இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் கடுமையாக சரிந்தன. அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு தொடங்கப்பட்ட விற்பனைகள் கௌதம் அதானியின் நிகர மதிப்பில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது….

மேலும்...

நாடாளுமன்றத்தை அதிர வைத்த மஹுவா மொய்த்ராவின் உரை – பிரபல பாலிவுட் நடிகை பாராட்டு!

புதுடெல்லி (11 பிப் 2023): அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ஆற்றிய உரையை பிரபல பாலிவுட் நடிகை மீரா சோப்ரா பாராட்டியுள்ளார். அதானி-ஹிண்டன்பர்க் பிரச்சினையில் மஹுவா மொய்த்ராவின் பேச்சு தேசிய கவனத்தை ஈர்த்தது. மஹுவாவின் பேச்சு, “நான் இன்று இந்தியாவில் மிகவும் பிரபலமான நபரைப் பற்றி பேசுகிறேன். துரதிஷ்டவசமாக அது மாண்புமிகு பிரதமர் அல்ல. A இல் ஆரம்பித்து I இல் முடிபவர் ஒருவர். அது அத்வானி அல்ல. அவரது…

மேலும்...

அதானி மெகா ஊழல் பிரச்சனை – வலுக்கும் எதிர்கட்சிகளின் போராட்டம்!

புதுடெல்லி (09 பிப் 2023): அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளன. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்கும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் கொள்கை அறிவிப்பு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜ்யசபாவில் பதில் அளிக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஒத்துழைத்த எதிர்க்கட்சிகள் இன்று முதல் மக்களவையில் அதானி விவகாரத்தில்…

மேலும்...

அதானி குழுமம் மீது விசாரணை நடத்த ஒன்றிய அரசு முடிவு!

புதுடெல்லி (04 பிப் 2023): அதானி குழுமத்திற்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய நிறுவன விவகார அமைச்சகம் இதுகுறித்து விசாரனை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதானியின் நிதித் தகவல்கள் மற்றும் பதிவுகளை அமைச்சகம் ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு இதுவே முதல் விசாரணை. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானாலும், அதானி குழுமத்தை ஒன்றிய அரசு விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதானிக்கு ஒன்றிய அரசு உதவி செய்வதாகவும்…

மேலும்...