உக்ரைனில் மற்றுமொரு இந்திய மாணவர் மரணம்!

புதுடெல்லி (02 மார்ச் 2022): உக்ரைனில் மற்றும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். அந்த மாணவர் பஞ்சாபை சேர்ந்தவர். உயிரிழந்த மாணவர் பஞ்சாபை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் சிறிது காலம் மருத்துவமனையில் இருந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதற்கிடையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தனது குடிமக்கள் அனைவரையும் உடனடியாக கார்கிவை விட்டு வெளியேறுமாறு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர்கள் பெசோசின், பாபே மற்றும் பெஸ்லியுடோவ்கா குடியிருப்புகளை அடைய வேண்டும்…

மேலும்...

சவூதியில் சமூக வலைதளத்தில் இஸ்லாத்திற்கு எதிராக பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட இந்தியர் ஹரீஷ் விடுதலை!

தம்மாம் (19 ஆக 2021): சவூதி அரேபியாவில் சமூக வலைதளத்தில் வெறுக்கத்தக்க அளவில், பதிவிட்டு கைதான கர்நாடகாவை சேர்ந்த ஹரீஷ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபியா தம்மாமில் பணிபுரிந்து வந்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த ஹரீஷ். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் புனித மக்காவையும், சவூதி அரசாங்கத்தையும் விமர்சித்து பதிவிட்டு இருந்தார். இதன் காரணமாக அவரை டிசம்பர் 20, 2019 அன்று சவுதி பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கைதான ஹரீஷை விடுதலை செய்ய…

மேலும்...

சவூதி ஜித்தாவில் இந்தியர் குத்திக் கொலை!

ஜித்தா (05 ஆக 2021): சவூதி அரேபியா ஜித்தாவில் 45 வயது இந்தியர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பூரை சேர்ந்த குஞ்சலவி என்பவர் ஜித்தாவில் வாகனம் ஒன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் நண்பர்கள் சந்தேகம் அடைந்து அவரை தேடியபோது அவர் வாகனத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இந்நிலையில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் ஒருவரை சவூதி போலீசார் கைது செய்துள்ளனர்….

மேலும்...

நோயாளிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவருக்கு ஆயுள் தண்டனை!

லண்டன் (08 பிப் 2020): நோயாளிகளிடம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்ட இந்திய மருத்துவருக்கு, மூன்று ஆயுள் தண்டனை வழங்கி லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லண்டனில் மருத்துவம் பயின்று அங்கேயே சிகிச்சை அளித்து வரும் இந்திய மருத்துவர் மனீஷ் நட்வர்லால் ஷா. இவர் மருத்துவமனைக்கு வரும் பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக நோயாளிகள் மனீஷ் மீது குற்றம் சுமத்தினர் . மேலும் பெண் நோயாளிகள் வந்தால் அவர்களிடம் மர்ம உறுப்புகளை சோதனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியும் பயமுறுத்தியும்…

மேலும்...

நான் முஸ்லிம், என் மனைவி இந்து, என் பிள்ளைகள்? -நடிகர் ஷாருக்கான் பதில்!

மும்பை (26 ஜன 2020): என் வீட்டில் இதுவரை எங்கள் மதம் குறித்து விவாதித்ததே இல்லை என்று நடிகரி ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் குடியரசு தின தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பல சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்தார். அப்போது “நான் முஸ்லிம் மதத்தவன் என் மனைவி இந்து மதத்தைச் சேர்ந்தவள், என் பிள்ளைகள் பள்ளிச் சான்றிதழில் என்ன மதம் குறிப்பிட வேண்டும் என்று கேட்டபோது இந்தியன் என்று குறிப்பிடச் சொன்னேன்”…

மேலும்...