முஹம்மது நபி குறித்து இழிவாக பேசிய பாஜக எம்எல்ஏ கைது!

ஐதராபாத் (23 ஆக 2022): முஹம்மது நபி குறித்து இழிவாக பேசிய தெலுங்கானா பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா  பாஜக எம்எல்ஏ ராஜா சிங் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக சில வீடியோக்களை சமூக வலைதளத்தில் பரப்பினார். இதனை அடுத்து தெலுங்கானாவில் பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. மேலும் ராஜா சிங்கிற்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து ராஜா சிங் செவ்வாய் கிழமை காலை போலீசாரால் கைது…

மேலும்...

மக்கள் மனதிலிருந்து பெயரை மாற்ற முடியாது – யோகிக்கு உவைசி பதிலடி!

ஐதராபாத் (30 நவ 2020): ஐதராபாத் நகரின் பெயரை பாக்யாநகர் என மாற்றப்படும் என்று உ..பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதற்கு அசாதுத்தீன் உவைசி பதிலடி கொடுத்துள்ளார். ஐதராபாத் நகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது யோகி ஆதித்யநாத் பேசும்போது, “ஐதராபாத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், ஐதராபாத்தின் பெயர் பாக்யநகர் என்று மாற்றப்படும்.”என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் AIMIM தலைவர் உவைசி கூறுகையில், “ஐதராபாத்தின் பெயரை மாற்றினாலும் மக்கள் மனதிலிருந்து ஐதராபாத் என்ற பெயரை…

மேலும்...

ஐதராபாத் பெயர் மாற்றம் – யோகி ஆதித்யநாத் சர்ச்சை பேச்சு!

ஐதராபாத் (29 நவ 2020): தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தை பாக்யநகர் என பெயர் மாற்றுவதில் என்ன தவறு உள்ளது? என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று நடந்த பிரச்சாரத்தின்போது ஐதராபாத் பெயர் மாற்றம் தொடர்பாக அவர் பேசியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரச்சாரத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: “ஐதராபாத்தை பாக்யநகர் என பெயர்…

மேலும்...

புத்தாடை இல்லா ரம்ஜான் பண்டிகை – முஸ்லிம்கள் முடிவு!

ஐதராபாத் (22 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம்கள் புத்தாடை அணியாமல் இவ்வருட ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடிவு செய்துள்ளனர். ரம்ஜான் நோன்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலக அளவிலான கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகமெங்கும் ரம்ஜான் பண்டிகை களையிழந்து காணப்படுகிறது. இது இப்படியிருக்க இந்தியாவில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கு ம் தெலுங்கானா மாநிலத்தில் இவ்வருடம் புத்தாடை அணியாமல் வீட்டிலேயே தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முஸ்லிம்கள் முடிவு செய்துள்ளனர். எனினும்…

மேலும்...

நெஞ்சை பிழியும் சம்பவம்: பசி பட்டினி – புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளுடன் தற்கொலை!

ஐதராபாத் (22 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் 9 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் , நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட முன்னறிவிப்பில்லாத ஊரடங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பெரிய அளவில் பாதித்தது. இவர்களில் தினக்கூலிகள் கையில் உணவு,பணம் எதுவும் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் வரங்கல் புறநகர் கிணற்றில் மொத்தம் 9 புலம்பெயர் தொழிலாளர்களின் சடலங்களை போலீசார் மீட்டுள்ளனர். இவர்களின் உடம்பில்…

மேலும்...

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் வெளியேற்றம்!

ஐதராபாத் (27 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட இருந்த பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், நேற்று மாலை ஹைதராபாத் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்டார். அதனைத் தொடர்ந்து, அவர் இன்று காலை டெல்லிக்கு அனுப்பி வைக்கப் படுவதாகவும், தனது ஆதரவாளர்களை போலீசார் தாக்கியதாகவும் சந்திரசேகர் ஆசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சந்திரசேகர் ஆசாத் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது: “தெலுங்கானாவில் சர்வாதிகாரம் அதன் உச்சத்தில் உள்ளது. முதலில் எனது ஆதரவாளர்கள்…

மேலும்...

வேலையின்மையைதான் பதிவு செய்ய வேண்டும் குடியுரிமையை அல்ல – பிரகாஷ்ராஜ் அதிரடி!

ஐதராபாத் (20 ஜன 2020): இந்தியாவில் வேலையில்லாதவர்கள்தான் அவர்கள் நிலை குறித்து பதிவு செய்ய வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று பேசிய பிரகாஷ்ராஜ், “நாட்டில் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள் அவர்கள்தான் அவர்களது நிலையை பதிவு செய்ய வேண்டும். மேலும் பலருக்கு உரிய கல்வி கிடைக்கவில்லை அதற்கான குறிக்கோள்களை அரசு முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து குடியுரிமை சட்டம் அவசியமற்றது” என்று தெரிவித்தார்.

மேலும்...

13 வயது மகளை வன்புணர்ந்த தந்தைக்கு ஐந்து ஆண்டு சிறை!

ஐதராபாத் (20 ஜன 2020): 13 வயது வளார்ப்பு மகளை வன்புணர்ந்த தந்தைக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு 48 வயது ரமேஷ் என்பவர் அவர் தத்தெடுத்த 13 வயது மகளை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து வீட்டுக்கு வந்த தாயிடம் சிறுமி கூறியதை அடுத்து தாய் போலீசில் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த…

மேலும்...

இங்கே பிறந்தோம் இங்கேயே மடிவோம் – மக்கள் வெள்ளத்தால் திணறிய ஐதராபாத்!

ஐதராபாத் (04 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஐதராபாத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் 40 அமைப்புகளால் ஒருங்கிணைக்கப் பட்டு இருந்தது. பல்வேறு மதத்தினர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். அவர்கள் தேசியக் கொடியை ஏந்தியபடி, ‘இங்கேயே பிறந்தோம் இங்கேயே மடிவோம்” என்றவாறு கோஷமிட்டனர். போராட்டத்தை ஒட்டி ஐதராபாத்தில் அனைத்து கடைகள் நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

மேலும்...