பதில் சொல்லுங்கள் முதல்வரே – குஷ்பூ கேள்வி

சென்னை (12 ஜூன் 2021): “உங்களுக்கு வந்தா அது இரத்தம், எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னியா?” என்று பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் ஊரடங்கு, சில தளர்வுகளுடன் வரும் ஜூன் 21ஆம் தேதிவரை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப்…

மேலும்...

பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்த குஷ்பூ!

சென்னை (03 ஜூன் 2021): கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாஜகவினர் கருணாநிதியையும், திமுகவையும் சாடியே பதிவிடுவார். இந்நிலையில் குஷ்பூ வெளியிட்டுள்ள பதிவில், நீங்கள் எனக்கொரு சிறந்த ஆசான் என்று கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பாஜக நிர்வாகி குஷ்பு ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். குரு என்பவர் கடவுளுக்கும் மேலானவர். உங்கள் அருள் எனக்கு எப்போதும் இருக்கும் என்று அவர்தெரிவித்துள்ளார். இது பாஜகவினரை அதிர்ச்சி அடைய…

மேலும்...

திமுக அரசுக்கு ஐஸ் வைக்கும் குஷ்பூ!

சென்னை (08 மே 2021): “திமுக அரசின் உத்தரவுகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்” என்று நடிகையும் பாஜகவில் சமீபத்தில் இணைந்தவருமான குஷ்பூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது:- “தமிழக மக்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து இணைந்து செயல்பட வேண்டும். கொரோனோவுக்கு எதிரான போரில் அரசால் மட்டும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. மக்களின் பங்கும் முக்கியமானது. நம்மால் முடிந்த ஒத்துழைப்பை நாம் அளிப்போம். சிறு துளி பெருவெள்ளமாகும்!” என்று…

மேலும்...

மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட குஷ்பூ!

சென்னை (28 பிப் 2021): மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நடிகை குஷ்பூ மன்னிப்பு கோரியுள்ளார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பூ  முன்பு காங்கிரசில்  இருந்தபோது, சமூக ஊடகத்தில், பா.ஜ., தலைவர்களை அவர் விமர்சனம் செய்திருக்கிறார். தற்போது பாஜகவில் இணைந்ததும்  பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் அவர் சமீபத்தில் சந்தித்த தலைவர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். சென்னை வந்த நிர்மலாவை போய் பார்த்தார். அப்போது டிவிட்டரில் நிர்மலா சீதாராமனை விமர்சித்ததற்காக மன்னிப்பு…

மேலும்...

குஷ்பூ கட்சியில் இணைந்த பிரபு குடும்பம்!

சென்னை (11 பிப் 2021): நடிகர் பிரபுவின் அண்ணனும் நடிகருமான ராம்குமார் பாஜகவில் இணைந்தார். சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன், பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், நடிகருமான ராம்குமார், அவரது மகனுடன் பாஜகவில் இணைந்தார். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற சி.டி.ரவி., பா.ஜ.க.வில் இணைந்ததற்காக உறுப்பினர் அட்டையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க.வின் நிர்வாகிகள் வி.பி.துரைசாமி,…

மேலும்...

பாஜகவில் குஷ்பு புறக்கணிப்பு!

சென்னை (14 டிச 2020): பாஜகவில் குஷ்பு மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். பல கட்சிகளில் இருந்து விட்டு கடைசியாக காங்கிரஸிலிருந்து பாஜகவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நடிகை குஷ்பு, மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கட்சியில் இணைந்தார். ஆனால் இதுவரை அவரை அக்கட்சியினர் ஒருவர் கூட மதித்ததாக தெரியவில்லை. திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தி அதில் அவர் பேசிய வீடியோ சினிமாவில் நடிப்பதுபோல் டேக் கட் சொல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி கேலிக்கு ஆளானார். இது இப்படியிருக்க தமிழக சட்டமன்ற…

மேலும்...

பாஜக சார்பில் போராட வரவில்லை – குஷ்பூ விளக்கம்!

கேளம்பாக்கம் (27 அக் 2020): நான் பாஜக சார்பில் போராட வரவில்லை என்று சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். . விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை எதிர்த்து போராட்டம் நடத்திய குஷ்பூ இன்று காலை கைது செய்யப்பட்டார் பின்பு மாலை விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப் பின்னர் கேளம்பாக்கத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; “தேர்தல் சமயத்தில் மட்டுமே சிலர் கோவில்களுக்கு செல்கின்றனர். பெண்களைப் பற்றி இழிவாக பேசியதால், திருமாவளவனுக்கு எதிராக போராட்டம்…

மேலும்...

நடிகை குஷ்பூ மீது மாற்றுத்திறனாளிகள் போலீசில் புகார்!

மதுரை (15 அக் 2020): நடிகை குஷ்பூ மீது மாற்றுத்திறனாளிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். நடிகை குஷ்பு, அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்த பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் தான் 6 ஆண்டுகள் இருந்ததாகவும், தனக்கு அங்கு மரியாதை தரப்படவில்லை என்றும் கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியை…

மேலும்...

குஷ்பூ விலக காரணம் ஏன்? – பிரபல இயக்குனர் மீது காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை (13 அக் 2020): காங்கிரஸிலிருந்து குஷ்பூ விலக குஷ்பூவின் கணவரம் இயக்குனருமான சுந்தர்.சி. யே காரணம் என்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. நடிகை குஷ்பூ காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் அவரது விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான கோபண்ணா, “குஷ்பு கொஞ்ச காலமாகவே கட்சியின் செயல்பாடுகளில் ஆர்வம் குறைந்து காணப்பட்டார்… ஷூட்டிங்கிலும் பிசியாக இருந்தார்… நாங்க அழைக்கும்போதுகூட, வெளிநாடுகளில் ஷூட்டிங்கில் இருப்பதாகவே தகவல்கள் வந்தன.. இப்போது சுந்தர்…

மேலும்...

நான் யாருன்னு 6 வருஷம் கழித்து தெரிந்துள்ளது – குஷ்பூ காட்டம்!

சென்னை (13 அக் 2020): நான் நடிகை என்பது 6 வருஷம் கழித்துதான் காங்கிரசுக்கு தெரிந்துள்ளது என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வில் சேர்ந்தபிறகு, டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நடிகை குஷ்புவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூக்களைத் தூவி குஷ்புவை வரவேற்ற பா.ஜ.க.வினர் ஆளுயர மாலையையும் அணிவித்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, “சிந்திக்கக்கூடிய மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ். ஆறு வருடம் கழித்துத்தான் நான் நடிகை என காங்கிரஸ் கட்சிக்குத்…

மேலும்...