சவூதி அரேபியா ஜித்தாவில் உடல் நலக்குறைவு காரணமாக எட்டு வயது சிறுமி மரணம்!

ஜித்தா (16 ஜன 2023): சவூதி அரேபியா ஜித்தாவில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுமி காய்ச்சல், வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஸ்கேன் செய்து பார்த்ததில் இடுப்புப் பகுதியில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது. நடைமுறைகள் முடிந்து இன்று பிற்பகல் அல் பைசலியா சமாதியில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என ஜித்தா கேஎம்சிசி தெரிவித்துள்ளது.

மேலும்...

சிறுமிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது!

ஜார்கண்ட் (14 டிச 2022): ஜார்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர், 8 வயது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த சில நாட்களாக, சிறுமியை அருகிலுள்ள புதருக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினார். கடந்த வாரம் படாம்டா தொகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், குற்ற செயலில்…

மேலும்...

சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்தவர்கள் வீடுகள் புல்டோசர் மூலம் இடிப்பு!

போபால் (19 செப் 2022): மத்திய பிரதேசத்தில் 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் 16 வயது சிறுமி தனது வருங்கால கணவருடன் கோவிலுக்கு சென்றபோது, வருங்கால கணவர் முன் சிறுமி இரண்டு மைனர்கள் உட்பட 6 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். ஆனால், இரு குடும்பத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில், இரு குடும்பத்தாரும் புகார் அளிக்க விரும்பவில்லை. இந்த…

மேலும்...

மூன்றரை வயது சிறுமி பள்ளி பேருந்து ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம்!

போபால் (13 செப் 2022): மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மூன்றரை வயது சிறுமியை பள்ளி பேருந்து ஓட்டுனர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் போபாலில் உள்ள ஒரு முக்கிய பள்ளியில் படிக்கும் மாணவி. பாடசாலை முடிந்து வீடு வந்து கொண்டிருந்த போது பள்ளி பேருந்து ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்தபோது பேருந்தில் பள்ளியின் பெண் ஊழியரும் இருந்துள்ளார். இந்த சம்பவத்தை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றதாக…

மேலும்...

சிறுமி வன்புணர்வு – விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்!

நொய்டா (29 ஏப் 2022): உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் வியாழன் அன்று காவல்துறை அதிகாரிகளுக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்-பஜ்ரங் தள அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இதில் ஒரு காவல்துறை அதிகாரி காயம் அடைந்தார். 17 வயது சிறுமியை 13 வயது சிறுவன் வன்புணர்வு செய்த வழக்கு தொடர்பாக வலதுசாரி அமைப்பினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. சிறுமியும் சிறுவனும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. வன்புணர்வு செய்த சிறுவன் இந்து என்பதாக கூறப்படுகிறது….

மேலும்...

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெரியப்பா கைது!

சென்னை (29 ஜூன் 2021): 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, சிறுமியின் பெரியப்பா சென்னையில் கைது செய்யப் பட்டுள்ளார். தாய், தந்தையை இழந்த 13 வயது சிறுமி சென்னை வேப்பேரியில் தனது சித்தி வீட்டில் தங்கிருந்து எட்டாம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் திடீரென சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் சித்தி. மருத்துவப் பரிசோதனையில் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சித்தி, சிறுமியிடம் விசாரித்தபோது…

மேலும்...

ஹத்ராஸ் தலித் சிறுமி வன்புணர்வு வழக்கில் திடீர் திருப்பம்!

லக்னோ (18 டிச 2020): உத்தரபிரதேசம் ஹத்ராஸில் இளம் பெண் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லபட்டதை சிபிஐ உறுதி செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் மத்திய புலனாய்வுப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஹத்ராஸில் ஒரு தலித் சிறுமி நான்கு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கண்டறிந்துள்ளது. கற்பழிப்பு மற்றும் கொலை குற்றச்சாட்டில் ஹத்ராஸில் உள்ள நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் அரங்கேறிய அடுத்த கொடூரம் – 5 வயது சிறுமியையும் விட்டு வைக்காத காம கொடூரர்கள்!

லக்னோ (11 அக் 2020): உத்திர பிரதேசத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. அந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அதன்பின்னரும் பல்வேறு இடங்களில் பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஹர்டோய் மாவட்டத்தில் 5 வயது…

மேலும்...

உனக்கு 16 எனக்கு 11 – விளைவு தற்கொலை!

சிவகங்கை (02 அக் 2020): சிறுவயது காதல் பிரச்சனை தற்கொலையில் முடிந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிவபுரிப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த 11 வயதான சிறுமி ஒருவர் அப்பகுதியில் அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, விரைந்த வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அதுகுறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது….

மேலும்...

அப்பாவின் மொபைலில் ஆபாச படம் – சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

திருச்சி (30 மே 2020): திருச்சி அருகே அப்பாவின் மொபைல் போனில் உள்ள ஆபாச படம் 14 வயது சிறுவனை கொலைகாரனாக்கியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் ச் சேர்ந்த ராஜாங்கம் – லலிதா தம்பதிக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதில் மூன்றாவது மகள் பெயர் கண்மணி ( மாற்று பெயர் ). கண்மணி அப்பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்மணி தனது வீட்டு…

மேலும்...