ஒரே விசாவில் இனி ஒட்டு மொத்த வளைகுடா பயணிக்கலாம்!

தோஹா, கத்தார் (09 நவம்பர் 2023):  வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இனி கத்தார், சவுதி அரேபியா, குவைத், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு ஒரே விசாவில் பயணிக்க முடியும். வளைகுடா ஒத்துழைப்பு சபையில் (Gulf Cooperation Council) உள்ள ஆறு நாடுகளுக்கான ஒருங்கிணைந்த சுற்றுலா விசாவுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்ற GCC உள்துறை அமைச்சர்களின் 40வது கூட்டத்தின்போது GCC-இன் பொதுச்செயலாளர் ஜாசிம்…

மேலும்...

சவூதியில் அதிகரிக்கும் உள் நாட்டு சுற்றுலா பயணிகள்!

ரியாத் (26 டிச 2022): சவுதி அரேபியாவில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுற்றுலாத்துறையின் புதிய திட்டங்களால் வெளிநாடுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இதுவரை, 32 மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் சவுதியில் உள்ளா சுற்றுலா இடங்களுக்குச் சென்றுள்ளனர். 2015ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு சவூதி அரேபியாவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 37 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 64 மில்லியன் சுற்றுலாப்…

மேலும்...

கொரோனா ருத்ரதாண்டவத்திலும் உல்லாச சுற்றுலா – வெளிநாட்டு பயணிகளுக்கு அரசு அனுமதி (வீடியோ)

புதுடெல்லி (03 மார்ச் 2020): கொரோனா ருத்ரதாண்டவத்திலும் உல்லாச சுற்றுலாவுக்கு வெளிநாட்டு பயணிகளை அரசு அனுமதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இரண்டு சொகுசு பேருந்துகளில் சென்றுள்ளனர். இதனை ஸ்வராஜ் எக்ஸ்பிரஸ் என்ற தொலைக்காட்சி சேனல் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. அந்த சேனலின் செய்தியாளர் சுற்றுலா பயணிகளிடமும், சுற்றுலா வழிகாட்டியிடமும் “இந்த நெருக்கடியான சூழலில் எப்படி வெளியே வந்தீர்கள்? எப்படி சுற்றுலா செல்ல முடிந்தது?” என்று கேள்வி எழுப்பினார். ஆனால்…

மேலும்...

சுற்றுலா சென்ற இந்தியர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

நேபாள் (22 ஜன 2020): நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 8 இந்தியர்கள் சொகுசுபங்களாவில் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். நேபாளத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தளமான போகாராவிற்கு, கேரளாவைச் சேர்ந்த 15 சுற்றுலாப்பயணிகள் சென்றிருந்தனர். அவர்கள் காத்மாண்டுவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அந்த அறைகளில் எரிவாயுவில் இயங்கும் ஹீட்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அதிலிருந்து எரிவாயு கசிந்ததில் அங்கு தங்கியிருந்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அறையில் போதிய காற்றோட்டம் இல்லாததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு…

மேலும்...