என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் – ஸ்டாலின் மீது ஓபிஎஸ் பாய்ச்சல்!

சென்னை (17 பிப் 2022): “ஜல்லிக்கட்டு விவகாரத்தில் என் மீது முதல்வர் ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காணொலிக் காட்சி வாயிலாக மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு குறித்து பேசி இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட காரணமாக இருந்த கட்சி மத்திய காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த தி.மு.க….

மேலும்...

ஆஸ்காருக்கு செல்லும் ஜல்லிக்கட்டு!

திருவனந்தபுரம் (25 நவ 2020): 2021 ஆஸ்கர் விருதுகளுக்கான இந்திய திரைப்படமாக மலையாள திரைப்படம் ஜல்லிக்க ட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. . லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கியுள்ள இப்படம் ஏற்கனவே பல விருதுகளை வென்றுள்ளது. 27 இந்திய படங்களில் இருந்து ஜல்லிக்கட்டு ஆஸ்காருக்கு தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளது.. இப்படத்தில் அந்தோணி வர்கீஸ், செம்பன் வினோத், சபுமோன் மற்றும் சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும்...

ஜல்லிக்கட்டு நாயகன் என்றால் ஓபிஎஸ் என்ன மாடுபிடி வீரரா? – துரைமுருகனின் காமெடி கலாட்டா!

சென்னை (19 பிப் 2020): விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் பேசும் போது, ஜல்லிக்கட்டு நாயகர் என்று குறிப்பிட்டு ஓ.பி.எஸ். பெயரை தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய துரைமுருகன், அவர் என்ன மாடுபிடி வீரரா என்றும் இதற்கு முன் காளைகளை அடக்கி இருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பினார். அப்போது அங்கு சிரிப்பலை எழுந்தது. இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டுக்காக சிறப்பு அனுமதியை பெற்று தந்ததால் ஓ.பி.எஸ்.ஸை அன்போடு ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைப்பதாக விளக்கம் தந்தார்.

மேலும்...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புதிய சாதனை படைத்த மாடுபிடி வீரர்!

மதுரை (18 ஜன 2020): அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் ரஞ்சித் குமார் புதிய சாதனை படைத்து சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப் பட்டார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நேற்று காலை தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. போட்டியில் 688 மாடுபிடி வீரர்கள், 739 காளைகள் பங்கேற்றன. இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ரஞ்சித் குமார் சுற்றி சுற்றி காளைகளை அடக்கினார். மிகவும் வலுவான காளைகளை கூட, இவர்…

மேலும்...

ஜல்லிக்கட்டில் தடியடி- அவனியாபுரத்தில் பரபரப்பு!

மதுரை (15 ஜன 2020): மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் போலீசார் தடியடி பிரயோகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் , மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிடாோர் அடங்கிய குழுவினர் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வருகிறது. மாலை 4 மணிவரை நடைபெறும் இந்தப் போட்டிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்தார். ஜல்லிக்கட்டு…

மேலும்...