ஹோலி கொண்டாட்டத்தில் ஜப்பானிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை VIDEO

புதுடெல்லி (11 மார்ச் 2023): ஹோலி கொண்டாட்டத்தின் போது, ​​ஜப்பானிய பெண்ணை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியை இளைஞர்கள் துஷ்பிரயோகம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில், இளைஞர்கள் குழு ஒன்று சிறுமியை கீழே பிடித்து வலுக்கட்டாயமாக வர்ணம் பூசி அவள் முகத்தில் தெளித்து, அவள் தலையில் முட்டைகளை வீசுகிறது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…

மேலும்...

முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கொலை செய்ய பாஜக கூட்டத்தில் சாமியார் அழைப்பு!

புதுடெல்லி (08 பிப் 2023): முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கொலை செய்ய வேண்டும் என்று இந்துக்களுக்கு சாமியார் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை இந்துத்துவா அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சாமியாரின் கொலை வெறி உரை இணையங்களில் வைரலாகி வருகிறது. பாஜகவின் ஹரியானா தலைவரும் கர்னிசேனா தலைவருமான சூரஜ் பால் அமுவும் சுதர்சன் டிவியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் சாவான்கேக்கு ஆதரவாக ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அந்த சாமியார் இவ்வாறான வெறுப்புப் பேச்சினை…

மேலும்...

அழைத்த கவர்னர் – மறுத்த முதல்வர்!

புதுடெல்லி (27 ஜன 2023): தன்னை சந்திக்க வருமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தான் பஞ்சாப் செல்ல இருப்பதாக கெஜ்ரிவால் பதில் அளித்துள்ளார். டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களை பின்லாந்து நாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்ப டெல்லி அரசு எடுத்த முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 16-ந் தேதி, கவர்னர் மாளிகைக்கு அரவிந்த் கெஜ்ரிவாலும்,…

மேலும்...

தமிழ்நாட்டு ஆளுநர் மாற்றமா? – ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!

சென்னை (18 ஜன2023): தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக, திமுக அரசு ஆளுநர் மீது குற்றம் சாட்டி வருகிறது. கடந்த 12-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த திமுக குழு, 20 நிமிடங்கள் அவருடன் பேசியது. பின்னர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் சார்பில் புகார் மனு குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்டது. இதே போன்று, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும்…

மேலும்...

வட இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.9 என பதிவு!

புதுடெல்லி (06 ஜன 2023): டெல்லி உட்பட வட இந்திய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி மற்றும் ஹரியானாவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வட இந்திய மாநிலங்களில் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த உயிரிழப்பு அல்லது பிற விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை. ஐந்து நாட்களில் டெல்லியில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். ஏற்கனவே…

மேலும்...

டெல்லியில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்புணர்வு – குற்றவாளி தலைமறைவு!

புதுடெல்லி (23 டிச 2022): தலைநகர் டெல்லியில் 5 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி தலைமறைவாகியுள்ளான். அவனை போலீசார் தேடி வருகின்றனர். வடக்கு டெல்லியின் பல்ஸ்வா பால் பண்ணை பகுதியில் புதன்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை கடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. புதன்கிழமை மாலை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை குற்றவாளி கடத்திச் சென்றுள்ளான். பின்னர்,…

மேலும்...

கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் மோதி மூன்று குழந்தைகள் படுகாயம் – பரபரப்பு வீடியோ காட்சி!

புதுடெல்லி (18 டிச 2022); டெல்லியில் கட்டுப்பாட்டை இழந்த கார் குழந்தைகள் மீது மோதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி குலாபி பாக்கில் உள்ள லீலாவதி பள்ளி அருகே இன்று காலை நடைபாதையில் நின்று கொண்டிருந்த குழந்தைகள் மீது மாருதி ப்ராஸ்ஸா என்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதில் மூன்று குழந்தைகள் படுகாயமடைந்தனர். குழந்தைகளுக்கு பத்து, நான்கு மற்றும் ஆறு வயது ஆகும். இவர்களில் ஒரு குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளார். சம்பவத்தையடுத்து, காரில் இருந்தவர்கள் தப்பியோட…

மேலும்...

டெல்லியில் முஸ்லிம் வாக்குகளை இழந்த ஆம் ஆத்மி கட்சி!

புதுடெல்லி (08 டிச 2022): டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வெற்றி பெற்றாலும் பெரும்பாலான முஸ்லிம் வாக்குகளை இழந்துள்ளது 2020 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஆம் ஆத்மி தனது முஸ்லிம் வாக்குகளில் 14% மற்றும் தலித் வாக்குகளில் 16% இழந்துள்ளது. ஜாகிர் நகர், ஷாஹீன் பாக் போராட்டங்கள் நடந்த பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேலும் முஸ்தபாபாத்திலும் ஆம் ஆத்மி தோல்வியடைந்துள்ளது. ஜாகிர் நகரில் ஆம் ஆத்மி கட்சியின்…

மேலும்...

பாஜகவுக்கு பலத்த அடி – குஜராத்தில் மட்டுமே கொண்டாட்டம்!

புதுடெல்லி (08 டிச 2022): குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல், 2 கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ம் தேதி 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, இன்று காலை தொடங்கியது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குஜராத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதேவேளை இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இமாச்சல பிரதேசத்தில்…

மேலும்...

டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் – ஆம் ஆத்மி முன்னிலை!

புதுடெல்லி (07 டிச 2022): டெல்லி மாநகராட்சி தேர்தலின் முதல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கருத்துக்கணிப்பு முடிவுகள் கணித்தபடி ஆம் ஆத்மி கட்சியே முன்னேறி வருகிறது. ஆம் ஆத்மி 86 இடங்களிலும், பாஜக 72 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னேறி வருகின்றன. டெல்லி மாநகராட்சியில் 250 வார்டுகள் உள்ளன. அறுதிப் பெரும்பான்மை பெற 126 வார்டுகளில் வெற்றி பெற வேண்டும்.

மேலும்...