அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி!

கலிபோர்னியா (23 ஜன 2023): அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில் திடீரென நுழைந்த மர்ம நபர், துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுடத் தொடங்கினார். இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் வரை உயிரிழந்த நிலையில் மேலும் பத்து பேர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் லாஸ் ஏஞ்சல்ஸ் கன்ட்ரி ஷெரீப் அலுவலகம் துப்பாக்கி…

மேலும்...

கர்ப்பிணிப் பெண் வயிற்றில் துப்பாக்கிச் சூடு – உத்திர பிரதேசத்தில் நடந்த கொடூரம்!

லக்னோ (01 ஜன 2023): உத்தரபிரதேச மாநிலம் மஹோபாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்றில் மான் வேட்டைக்கு வந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தாய் மற்றும் வயிற்றில் உள்ள சிசு கவலைக்கிடமாக உள்ளது. வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த 30 வயது பெண் வந்தனா மீது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது, பலத்த காயம் அடைந்த கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வந்தனாவின் கணவர் பூபேந்திர சிங் ராஜ்புத் கூறுகையில், மானை வேட்டையாட அருகில் வந்த…

மேலும்...

திண்டுக்கல்லில் திடீர் துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் பலி!

திண்டுக்கல் (03 ஜன 2022): திண்டுக்கல்லில் வாலிபர்கள் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் மீது துப்பாகிச் சூடு நடத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் மரியநாதபுரம் செட்டிகுளத்தை மீன் குத்தகை எடுத்து உள்ளார். இவருடைய மகன் ராகேஷ் குமார்(26) . இவர் நேற்று இரவு 1.30 மணி அளவில் செட்டிகுளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் அவரை சுட்டனர்.‌…

மேலும்...

கனடாவில் பயங்கரம் – மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி!

டொராண்டோ (20 ஏப் 2020): கனடாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கன்டாவின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். போலீசார் போல் உடையணிந்து கொண்டு வாகனம் ஒன்றில் சுற்றி திரிந்த அந்த நபர் பலரது வீடுகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பெண் போலீசார் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். மற்றொரு காவலர் காயமடைந்து உள்ளார். உயிரிழந்த பெண்…

மேலும்...

ஜெர்மனியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி!

ஜெர்மனி (20 பிப் 2020): ஜெர்மனியின் ஹனாவ் நகரில் இரு வேறு இடங்களில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தென்மேற்கு ஜெர்மனியின் ஹனாவ் நகரில் புதன்கிழமை பிற்பகல் 2 பார்களில் மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக நடந்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் தாக்குதல் நடந்த இடத்தில் இரவு 10 மணியளவில் இருண்டான பகுதியில் வாகனம் காணப்பட்டதாகவும், இரண்டாவது…

மேலும்...

சிஏஏ போராட்டத்தில் போலீஸாரால் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்குப்பதிவு!

மீரட் (17 பிப் 2020): உத்திர பிரதேசம் மீரட்டில் சிஏஏ போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில், கடந்த டிசம்பர் 20ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. 13 மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மதியம் மசூதிகளில் தொழுகையை முடித்தபின், தடையை மீறி போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலிஸார் கற்களை வீசியும், தடியடி நடத்தியும்…

மேலும்...

டெல்லியில் பரபரப்பு – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

புதுடெல்லி (12 பிப் 2020): டெல்லியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆம் ஆத்மி தொண்டர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் கடந்த சில தினங்களாகவே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக் களத்தில் மூன்று முறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் செவ்வாயன்று டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்ட நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ நரேஷ் யாதவ் அவரது ஆதரவாளர்களுடன் வெற்றியை கொண்டாடிவிட்டு, கோவிலிலிருந்து திரும்பி வந்து…

மேலும்...

தாய்லாந்தில் பயங்கரம் – பொது மக்களை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்!

கொராட் (08 பிப் 2020): தாய்லாந்தில் பொதுமக்கள் மீது ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பாங்காக்கில் உள்ள கொராட் என்ற இடத்தில் புத்தமத கோவில் மற்றும் உள்ள வணிகவளாகம் அருகே ராணுவ வீரர் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை கொலையாளி பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிணைக்கைதிகளை கட்டடத்திற்குள் அழைத்து சென்ற பிறகும் துப்பாக்கி சத்தம்…

மேலும்...

டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி – இன்றும் ஒரு துப்பாக்கிச் சூடு!

புதுடெல்லி (07 பிப் 2020): டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக், ஜாமியா பல்கலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று டெல்லி ஜாஃப்ராபாத் துணிக் கடை ஒன்றின் மீது இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து முகத்தை மறைத்து வந்த அவர்கள்,  தொடர்ந்து நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்….

மேலும்...

போலீசா? பாஜக செய்தி தொடர்பாளரா? – டெல்லி போலீசை விளாசும் ஆம் ஆத்மி!

புதுடில்லி (05 பிப் 2020): டெல்லி போலீசார் பா.ஜ.கவின் செய்திதொடர்பாளரை போல் பேசுவதாக ஆம்ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் ஷாஹின் பாக் பகுதியில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது சமீபத்தில் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தினான், அவனை கைது செய்து விசாரித்து வந்த டெல்லி போலீசார், தற்போது அவர் ஆம்ஆத்மி கட்சியின் உறுப்பினர் எனக் கூறி, அதற்கு ஆதாரமாக போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அது தாக்குதல் நடத்திய கபில் குஜ்ஜார்,…

மேலும்...