டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் முழுமையாக மீண்டும் திறப்பது குறித்து நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (15 மார்ச் 2022): டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் உள்ள மசூதி வளாகம் முழுவதையும் தொழுகைக்காக மீண்டும் திறக்க அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யுமாறு டெல்லி வக்ஃப் வாரியத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) வழங்கிய சமீபத்திய வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு, டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸை மீண்டும் திறக்க வக்ஃப் வாரியத்தின் மனுவைக் கையாளும் நீதிபதி மனோஜ் குமார் ஓஹ்ரி, உடனடியாக ஹஸ்ரத்…

மேலும்...

பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு – 2 பேர் பலி!

லூதியானா (23 டிச 2021): பஞ்சாப் மாநில நீதிமன்றத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் பலியாகியுள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குடும்பம் மற்றும் குற்றவியல் போன்ற வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நீதிமன்றத்தின் 3வது தளத்திலுள்ள கழிவறைக்குள் திடீரென பயங்கர வெடிசத்தம் கேட்டிருக்கிறது. இதனையடுத்து அது குண்டுவெடிப்பு என தெரியவந்துள்ளது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த இந்த…

மேலும்...

ஜெயலலிதா இல்லம் குறித்து அதிமுக மேல் முறையீடு செய்ய நீதிமன்றம் அனுமதி!

சென்னை (15 டிச 2021): ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து அதிமுக மேல் முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையமும் அங்குள்ள அசையும் சொத்துகளும் அரசுடமையாக்கப்பட்டன. இந்தச் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா,…

மேலும்...

ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் குற்றமல்ல – நீதிமன்றம் பகீர் தீர்ப்பு!

மும்பை (25 ஜன 2021): ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் குற்ற வழக்கில் சேராது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த 39 வயது   நபர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமியை  மார்பகங்களை ஆடையோடு சேர்த்து அழுத்தி பாலியல் ரீதியாக அத்துமீறல் செய்துள்ளார். இது தொடர்பாக குற்றவாளிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு நடைபெற்றது. குற்றவாளியை போஸ்கோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை…

மேலும்...

நீட் தேர்வு விவகாரம் – நீதிமன்றம் மீது நடிகர் சூர்யா பாய்ச்சல்!

சென்னை (13 செப் 2020): கொரோனா அச்சத்தால் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணைகளை நடத்தும் நீதிமன்றம், மாணவர்களை நேரடியாக சென்று நீட் தேர்வு எழுத வலியுறுத்துகிறது என்று நடிகர் சூர்யா விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதல பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்குப் பதிலாக அறுதுல் சொல்வதை போல அவலம் எதுவுமில்லை. கொரோனா தொற்று…

மேலும்...
Vinayagar Chathurthi

விநாயகர் சதூர்த்தியை நடத்த உத்தரவிடக் கோரி மனு – அபராதம் விதிக்கப்போவதாக நீதிமன்றம் உத்தரவு!

மதுரை (18 ஆக 2020): கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வீதிகளில் கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் பிரதான இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி கொண்டாடக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அவரவர் வீட்டில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தலாம் என்றும் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்து உரிய வழிகாட்டுதல்களின்படி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதிப்பது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் ராஜபாளையம் தர்மாபுரத்தில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் சிலை…

மேலும்...

திருமணத்திற்கு முன் ஏமாற்றி உடலுறவு கொண்டால் பலாத்காரமல்ல – நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

கட்டாக் (25 மே 2020): திருமணத்திற்கு முன் ஏமாற்றி உடலுறவு கொள்வது பலாத்காரம் அல்ல என்று ஒடிசா நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம், கோரபுத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் இளம் பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருகும் காதல் மலர்ந்துள்ளது. இதில் அந்த பெண் கர்ப்பமானார். பின்பு அந்த இளைஞர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ்…

மேலும்...

அந்த இருமல் சத்தத்தை கொஞ்சம் நிறுத்துங்கப்பா – நீதிமன்றத்தை தெறிக்கவிட்ட வழக்கு!

சென்னை (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் வந்தது ஒருபுறம் என்றால் அதுகுறித்த விழிப்புணர்வுகளும் தெறிக்க விடுகின்றன. கரோனா வைரஸ் பரவலிலிருந்து தற்காத்துக் கொள்வது எவ்வாறு என்றொரு பிரச்சாரத்தை மொபைல் போன் மூலம் மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தப் பிரசாரமே பெருந்தொல்லையாக மாறிக்கொண்டிருக்கிறது. மொபைல் போனில் ஒருவரை அழைத்ததும் ஒரு பெரிய இருமலுடன் தொடங்கி, பதிவு செய்யப்பட்ட ஒரு பெண்ணின் குரல் வெகுவேகமாக கரோனா பரவலில் தற்காத்துக் கொள்வது பற்றி ஒலிக்கிறது. பெரும்பாலான மொபைல் போன் எண்களைத்…

மேலும்...

என்னை கூப்பிடாதீங்க – நீதிமன்றம் செல்ல அஞ்சும் ரஜினி!

சென்னை (22 பிப் 2020): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதற்கு விலக்கு கேட்டு நடிகர் ரஜினி மனு அளித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு குறித்தும், போராட்டம் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, போராட்டக்காரர்களுக்குள் சமூக விரோதிகள் நுழைந்ததாக கருத்து தெரிவித்தார். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்…

மேலும்...

நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு! – உத்திர பிரதேசத்தில் பரபரப்பு!

லக்னோ (13 பிப் 2020): உத்திர பிரதேசம் லக்னோ நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 வழக்கறிஞர்கள் உள்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்தனர். அப்பகுதியில் இருந்து வெடிக்காத 3 வெடி குண்டுகளைக் கைப்பற்றினர். வெடிகுண்டு வீசப்பட்ட பகுதியில் ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டதால்…

மேலும்...