மருந்து தரத்தை மீறியதால் கருப்புப் பட்டியலில் பாபா ராம்தேவின் பதாஞ்சலி தயாரிப்பு நிறுவனம்!

காத்மண்டு (21 டிச 2022): உலக சுகாதார அமைப்பின் மருந்து உற்பத்தித் தரத்தை மீறியதாகக் கூறி பாப ராம்தேவின் பதாஞ்சலி உட்பட 6 இந்திய மருந்து நிறுவனங்களை நேபாளம் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இத்தகவலை நேபாள அரசு டிசம்பர் 18ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு மூலம் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை சப்ளை செய்யும் நேபாளத்தில் உள்ள உள்ளூர் முகவர்களை உடனடியாக ஆர்டர்களை திரும்பப் பெறுமாறு நேபாள அரசு கேட்டுக் கொண்டுள்ளது….

மேலும்...

பதாஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்துக்கு தடை!

புதுடெல்லி (23 ஜூன் 2020): பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் பல்வேறு மருந்துகள் ஆய்வின் அடிப்படையில் தற்காலிகமாக வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் ஒருபுறம் கொரோனாவுக்கு நிரந்தர மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வும் உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இது இப்படியிருக்க யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை 7 நாட்களில் கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தது….

மேலும்...