பாஜக அரசு தரும் கொரோனா தடுப்பூசியை நம்ப முடியாது – அகிலேஷ் யாதவ் பகீர்!

லக்னோ (02 ஜன 2021): பாஜக அரசின் தடுப்பூசியை நம்ப முடியாது என்று இப்போது தடுப்பூசி பெறவில்லை என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கோவிட் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில் அகிலேஷ் யாதவ் இவ்வாறான கருத்தை முன்மொழிந்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் “எங்கள் தலைமையிலான அரசு அமைக்கப்படும் போது, ​​அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். அதேவேளை பாஜக அரசு வழங்கும் தடுப்பூசி நம்பத்தகுந்ததல்ல” என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

மேலும்...