பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்கள் மீது கமல்ஹாசன் குற்றச்சாட்டு!

சென்னை (30 செப் 2020): பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்கள் சாரியான ஆதாரங்களை காட்டவில்லை என்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை…

மேலும்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

சென்னை (30 செப் 2020): பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை வரவேற்பதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , “அதிமுகவில் பிரிவு என்பதே இருக்காது. கட்சி வளர்ச்சிக்காக நிர்வாகிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கிறார். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி உரிய நேரத்தில் அறிவிக்கும். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பை வரவேற்கிறேன். தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்...