மதத்தலைவர்களுடன் தலைமை செயலர் அவசரக் கூட்டம்!

சென்னை (03 ஏப் 2020): சென்னை தலைமை செயலர் அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இன்று (03/04/2020) மாலை 03.00 மணிக்கு அனைத்து மத தலைவர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.கரோனா விவகாரத்தில் மதச்சாயம் பூசப்படுவதைத் தடுக்கும் நோக்கில் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே மாவட்டங்களில் மத தலைவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை செய்யவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும்...