49 ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ் அப் வேலை செய்யாது!

நியூயார்க் (03 ஜன 2023): பழைய ஸ்மார்ட்போன் பதிப்புகளில் இனி WhatsApp கிடைக்காது. ஆப்பிள், சாம்சங், ஹூவாய் மற்றும் எல்ஜி போன்ற பழைய போன்களில் வாட்ஸ்அப் செயல்படுவதை நிறுத்தியுள்ளது. WhatsApp பயன்பாடு இப்போது Android OS பதிப்பு 4.1 மற்றும் அதற்கு மேல் மற்றும் iOS 12 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றில் வேலை செய்யும். “தொழில்நுட்பத்தில் புதிய மாற்றங்களைத் தொடர, பழைய இயக்க முறைமையில் வாட்ஸ் அப் வேலை செய்வதை நிறுத்தியுள்ளது. இதுகுறித்து உங்கள் OS இல்…

மேலும்...

வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் புதிய வசதி!

புதுடெல்லி (11 டிச 2022): வாட்ஸ் அப்பில் புதிய வசதியை அறிமுகப் படுத்தவுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள தனக்குத்தானே செய்தி அனுப்பிக் கொள்ளும் வசதியை தற்போது கணினி பயன்பாட்டிற்கும் விரிவுபடுத்தப் படவுள்ளது. அதேபோல ஒரு செய்தியை ஒரு முறை மட்டுமே வாசிக்கும் வகையிலும் புதிய அம்சம் அறிமுகப் படுத்தப்படவுள்ளது. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.

மேலும்...

உலக அளவில் முடங்கியது வாட்ஸ் அப்!

புதுடெல்லி (25 அக் 2022): வாட்ஸ் அப் உலக அளவில் முடங்கியுள்ளது. சிக்கலை ஒப்புக்கொண்ட மெட்டா செய்தித் தொடர்பாளர், ‘முடிந்தவரை விரைவாக’ சேவைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். மேலும் “சிலருக்கு தற்போது செய்திகளை அனுப்புவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம், மேலும் அனைவருக்கும் வாட்ஸ்அப்பை விரைவில் மீட்டெடுக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று ராய்ட்டர்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார். Realtime Monitor Downdetector இன் கூற்றுப்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ் அப் முடக்கம்…

மேலும்...

இனி தவறான செய்திகளை அனுப்பினால் உங்கள் வாட்ஸ் அப் முடக்கப்படலாம்!

புதுடெல்லி (21 மார்ச் 2022): Meta நிறுவனத்திற்குச் சொந்தமான WhatsApp பயனர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் தொழில்நுட்பச் சட்ட விதிகளை சமூக வலைத்தள நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. இதனையடுத்து, நாட்டில் சேவை அளித்துவரும் பெரிய சமூக வலைத்தளங்கள், புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒவ்வொரு மாதமும் அரசிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அந்த வகையில், வாட்ஸ்அப் கடந்த மாதங்களில் லட்சக் கணக்கிலான கணக்குகளை முடக்கியதாக தகவல் வெளியிட்டிருந்தது….

மேலும்...

வாட்ஸ் அப் குழு அட்மின்களுக்கு புதிய வசதி!

புதுடெல்லி (27 ஜன 2022): வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்படும் அநாகரீக, ஆபாசச் செய்திகளை குழு அட்மினால் நீக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், குழு நிர்வாகிகள் அனைவருக்கும் செய்திகளை நீக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் மெசேஜிங் ஆப் விரைவில் வெளியிடும். குழு நிர்வாகிகள் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், குழுவின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகாத செய்திகளை நீக்கும் அதிகாரத்தைப் அவர்கள் பெறுவார்கள். விரும்பத்தகாத ஒரு செய்தியை அனைவரும் பார்ப்பதற்குள் அவர்கள் நீக்கிவிடலாம்….

மேலும்...

இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பைப் பரப்பும் வாட்ஸ் அப் – அதிர வைக்கும் புள்ளி விவரம்!

வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படும் மூன்றில் ஒரு குறுஞ்செய்தி இஸ்லாம் மீதான பயத்தையும், வெறுப்பையும் விதைக்கும் விதமாக இருக்கின்றன என்று ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 2018-ல் இருந்து ஆகஸ்ட் 2019-வரை வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை Fear Speech, Normal என இருவகைகளாகப் பிரித்துள்ளனர். இதில் வாட்ஸ்அப் குழுக்களில் அனுப்பப்படும் மூன்றில் ஒரு குறுஞ்செய்தி இஸ்லாம் மீதான பயத்தையும், வெறுப்பையும் விதைக்கும் விதமாக இருப்பதாக அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்திருக்கிறது. மேலும், இந்த மாதிரியான Fear Speech வகை…

மேலும்...

வாட்ஸ்ஆப் அப்டேட்டிங் திட்டத்தில் திடீர் மாற்றம்!

நியூயார்க்(16 ஜன 2021): வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டிங் கொள்கையை அமல்படுத்துவதை மே 15 வரை ஒத்திவைத்துள்ளது. கடந்த மாதம் வாட்ஸ்ஆப் அப்டேட்டிங்கில் தனி மனித சுதந்திர தலையீடு இருக்கக் கூடும் என்ற அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எதிர்ப்புக்களை சம்பாதித்துக் கொண்டது. இதனை அடுத்து அப்டேட்டிங் புதுப்பிப்பைத் தற்போதைக்குச் செயல்படுத்த வேண்டாம் என்று வாட்ஸ்ஆப் முடிவு செய்துள்ளது. மேலும், சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களுக்கு மக்கள் பெருமளவில் மாறுவது வாட்ஸ்ஆப்பிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது….

மேலும்...

புல்வாமா தாக்குதலை முன்னரே தெரிந்துகொண்ட அர்னாப் கோஸ்வாமி – பரபரப்பு தகவல்!

புதுடெல்லி(16 ஜன 2021): இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதல் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்கூட்டியே தெரிந்து கொண்டதற்கான வாட்ஸ்ஆப் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர அரசினால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும், டிஆர்பி ஊழல் வழக்கில் மேலும் ஒரு முன்னேற்றமாக, குடியரசு தொலைக்காட்சியின் நெறியாளர் அர்னப் கோஸ்வாமி புல்வாமா தாக்குதல் நடப்பது தொடர்பாக முன்னரே தெரிந்திருந்ததற்கு ஆதாரமாக, வாட்ஸ்ஆப் அரட்டை இணையத்தில் கசிந்துள்ளது. டி.ஆர்.பி ரேட்டிங்கைத் தனக்கு சாதகமாக கையாளவும், பாஜக அரசாங்கத்திடம் உதவி பெறவும் அவர்…

மேலும்...

பயனர்களுக்கு வாட்ஸ் அப்பின் முக்கிய விளக்கம்!

நியூயாக் (12 ஜன 2020): பரபரப்பான சூழலில் பயனர்களுக்கு வாட்ஸ் அப் முக்கிய அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பயனர்களின் பிரைவசியில் வாட்ஸ் அப் தலையிடாது. பயனர்களின் உரையாடல்களை வாட்ஸ் அப்,/பேஸ்புக் கவனிக்காது. பயனர்களின் தகவல்களை வாட்ஸ் அப் சேமிக்காது. தொடர்பு  எண்களை பேஸ்புக்குடன் பகிறாது. குறிப்பிட்ட காலங்களில் மெஸேஜ்களை பயனர்களே நீக்கம் செய்யலாம். வாட்ஸ் அப் குழுமங்கள் வழக்கம்போல் செயல்படலாம் வழக்கம்போல் பகிர்வுகள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். வாட்ஸ் அப் குறித்து வெளியான பரபரப்பான தகவல்களை…

மேலும்...

கொரோனா எதிரொலியால் குறைந்த வாட்ஸ் அப் சேவை – திணறும் வாடிக்கையாளர்கள்!

புதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக வாட்ஸ் அப் தனது சேவையை குறைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் மக்களின் பொழுதுபோக்காக தொலைக்காட்சியும் மொபைலுமே உள்ளன. அதிலும் மொபைல் போனிலே மக்கள் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். மேலும், ஐ.டி நிறுவனங்கள் பல தங்களது பணியாளர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும்படி…

மேலும்...