மீண்டும் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்!

புதுடெல்லி (27 நவ 2022): நாட்டில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் நேற்று ராஜ்பவனுக்கு விவசாயிகள் பேரணியாக செல்கின்றனர். ஆதரவு விலை உள்ளிட்ட விவகாரங்களில் அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு மீறுவதாக வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் அடுத்த கட்ட போராட்டத்தின் தொடக்கமாக நேற்றைய போராட்டமாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடன் தள்ளுபடி, லக்கிம்பூர் விவசாயிகளின் மரணத்துக்கு காரணமான அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்து…

மேலும்...

பஞ்சாபில் பிரதமர் மோடியை வழிமறித்தது பாஜகவினர் – விவசாயிகள் பரபரப்பு தகவல்!

புதுடெல்லி (09 ஜன 2022): பஞ்சாபில் பிரதமர் மோடியை வழிமறித்தது விவசாயிகளல்ல, பாஜகவினர் தான் என்று கிஷான் எக்த மோர்ச்சா தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை, பல புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கான பூஜைக்காக, பிரதமர் மோடி பஞ்சாப் சென்றார். மோசமான வானிலை காரணமாக அவர் ஹெலிகாப்டர் பயணத்தைத் தவிர்த்துவிட்டு, சாலை மார்க்கமாகப் பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது, ஹுசைனிவாலாவிலுள்ள தியாகிகள் நினைவிடத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகனம் மறிக்கப்பட்டது. மேம்பாலத்தில் சிலர் சாலைமறியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனால்,…

மேலும்...

வேளாண் சட்டம் ரத்து – மோடியின் வாக்குறுதியை விவசாயிகள் நம்பத் தயாரில்லை – ராகுல் காந்தி!

புதுடெல்லி (21 நவ 2021): பிரதமரின் வார்த்தைகளை விவசாயிகள் நம்பத் தயாராக இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று ஐக்கிய கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அறிவித்ததை அடுத்து ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த கால அனுபவங்கள் விவசாயிகளை வேலைநிறுத்தத்தைத் தொடரத் தூண்டியுள்ளன. நரேந்திர மோடி முன்பு பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளார். மக்கள் இன்னும் அவரின் பொய்யான…

மேலும்...

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன் விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க ஒன்றிய அரசு முடிவு!

புதுடெல்லி (21 நவ 2021): விவசாயிகள் போராட்டத்தை, பார்லிமென்ட் கூட்டத்தொடருக்கு முன் தீர்த்து வைக்க, ஒன்றிய அரசு முயற்சியில் உள்ளது. அடுத்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், விவசாய சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். நாளைக்குள் மசோதா தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, கூட்டு கிசான் மோர்ச்சாவின் முக்கியமான கூட்டம் இன்று நடைபெறுகிறது. பிரதமரின் அறிவிப்பு மற்றும் போராட்ட வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். நாடாளுமன்றத்தில் சட்டத்தை…

மேலும்...

நாடாளுமன்றத்தில் வாபஸ் பெறாமல் போராட்டம் வாபஸ் இல்லை – விவசாயிகள் அறிவிப்பு!

புதுடெல்லி(21 நவ 2021): வேளாண் சட்டம் திரும்பப் பெற்றபோதிலும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றாமல் போராட்டம் வாபஸ் இல்லை என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். விவசாயச் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தின் எதிர்காலம் குறித்து முடிவு செய்வதற்காக கூட்டு கிசான் மோர்ச்சா (ஜேகேஎம்) இன்று சிங்கில் கூடுகிறது. முன்னதாக நேற்று விவசாயிகள் அமைப்புகளின் கோர் கமிட்டி கூடி டெல்லி எல்லையில் போராட்டம் தொடரும் என அறிவித்தது. லக்னோவில் இன்று நடைபெறும் மகா பஞ்சாயத்து…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த களமிறங்கும் விவசாயிகள்!

லக்னோ (13 ஜூன் 2021): உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரிய சரியை சந்திக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். நடைபெற உள்ளது. பாஜக ஆட்சி நடப்பதால் பல்வேறு மாநில மக்களும் இந்த தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உத்தர பிரதேசமும் ஒன்று. அங்கு மருத்துவ கட்டமைப்புகள் சரியில்லை என்று பாஜகவினரே குற்றம் சாட்டும் அளவுக்கு மோசமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாநிலமான…

மேலும்...

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் தள்ளுபடி – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

சென்னை (05 பிப் 2021):கூட்டுறவு வங்கிகளில் 16,43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்- அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல் -அமைச்சர் அறிவித்துள்ளார். விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், கடந்த 2016-ஆம் ஆண்டில் தமிழக அரசு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது….

மேலும்...

டெல்லியை அதிர வைக்கும் விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு!

புதுடெல்லி(26/01/2021): குடியரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் அணிவகுப்பு நடத்தி அதிர வைத்து கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. குடியரசு தினமான இன்று ஒரு லட்சம் ட்ராக்டர்கள் அணிவகுப்பு நடத்துவோம் என விவசாயிகள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இதனைத் தடுக்க அரசு எல்லா வழிகளிலும் முனைந்தும் எதுவும் கைகூடவில்லை. தற்போது ஆயிரக்கணக்கான ட்ராக்டர்கள் டெல்லி வீதிகளைத் திணறடித்துக் கொண்டிருக்கின்றன. சாரை…

மேலும்...

ஏழை தாயின் மகனுக்கு ஏழைகள் குறித்து தெரியாதது வேடிக்கை – மோடி மீது ஸ்டாலின் தாக்கு!

சென்னை (07 டிச 2020): டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் நியாயமானவை என்றும் விவசாய சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அனைத்து எதிர் கட்சிகள் நடத்திய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டதில் திமுகவின் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்ட.ன. இதில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் டிசம்பர் 8 விவசாயிகளின் பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய ஸ்டாலின், விவசாயிகளின் போராட்டம் நியாயமானது., அவர்கள் வெற்றியுடனேயே போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு…

மேலும்...

நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் போராட்டத்திற்கு அழைப்பு – திணறும் டெல்லி!

புதுடெல்லி (30 நவ 2020): வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஒட்டு மொத்த இந்திய விவசாயிகளுக்கான போராட்டம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி அரியானா எல்லையில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடங்கி நான்கு நாட்கள் ஆகின்றன. கிளர்ச்சி தீவிரமடைந்து வருகிறது, மத்திய அரசு போராட்டத்தை நிபந்தனைகளுடன் முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். “இந்த விவசாய…

மேலும்...