தங்கக் கடத்தல் வழக்கில் அமைச்சர் ஜலீலிடம் என்.ஐ.ஏ 8 மணிநேரம் விசாரணை!

திருவனந்தபுரம் (18 செப் 2020): கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீலிடம் என்.ஐ.ஏ 8 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஸ்வப்னா சுரேஷ், முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் மிகவும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியானதால் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள்…

மேலும்...

முதல்வருக்கும் ஸ்வப்னாவுக்கும் தொடர்பு – என்.ஐ.ஏ பரபரப்பு தகவல்!

திருவனந்தபுரம் (06 ஆக 2020): தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு கேரளா முதல்வர் அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்வப்னா சுரேஷ் அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மூன்று பேர் மீதும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தச் சூழலில்,…

மேலும்...

ஸ்வப்னா சுரேஷ் கைதும் பரபரப்பு பின்னணியும்!

திருவனந்தபுரம் (13 ஜூலை 2020): தங்கக் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட ஸ்வப்னா சுரேஷ் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக்வே தங்கக் கடத்தலில்ஈடுபட்டுள்ளதாக என்.ஐ.ஏ. குற்றம் சாட்டியுள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில், சரக்கு விமானத்தில் 30 கிலோ தங்கக்கட்டிகள் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த, சுங்கத்துறை அதிகாரிகள், தங்கத்தை பெற்றுக் கொள்வதற்காக சென்ற, தூதரக…

மேலும்...

தங்க கடத்தல் – ஸ்வப்னா சுரேஷ் கைது!

திருவனந்தபுரம் (19 ஜூலை 2020): 30 கிலோ தங்க கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக முகவரியை தவறாக பயன்படுத்தி 30 கிலோ தங்கத்தினை கடத்த நடந்த முயற்சியை கேரள சுங்கத்துறையினர் 30.6.2020 கண்டறிந்து முறியடித்தனர் இது சம்பந்தமாக சரித் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது, தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றியவரும், கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் வேலை செய்த ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கும்…

மேலும்...

அரசியலாகும் தூதரக தங்கக் கடத்தல் விவகாரம்!

திருவனந்தபுரம் (09 ஜூலை 2020): கேரளாவில் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகப் பெயரில் சரக்கு விமானத்தில் வந்த பொருட்களை கடந்த 5-ஆம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அதில் 30 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வரும் கும்பல் ஒன்றுதான் இந்த தங்கத்தையும் அனுப்பி இருக்கக்கூடும் என்று…

மேலும்...