நமக்கு உணவளிப்பவர்களின் கோரிக்கைக்காக நேரம் ஒதுக்க முடியவில்லையா? – ஹர்பஜன் கேள்வி!

புதுடெல்லி (29 நவ 2020): நாளுக்கு நாள், நாட்டில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. பாலிவுட் நட்சத்திரம் டாப்சிக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தியாவின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டிவிட்டரில் விவசாயிகளுக்கு ஆதரவாக இட்டுள்ள பதிவில், “விவசாயிகள் நமக்கு உணவளிப்பவர்கள். அவர்களுக்காக நாம் நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களின் குரலை செவி கொடுத்து கேட்க…

மேலும்...

மனித நேயத்தை மிஞ்சியது எதுவும் இல்லை – ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்த ஷஹித் அஃப்ரிடி!

இஸ்லாமாபாத் (25 மார்ச் 2020): கொரோனா எதிரொலியாக உணவின்றி பாதிக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹிர் அஃப்ரிடி பலருக்கு உதவி வருகிறார். இந்நிலையில் அஃப்ரிடியின் உதவியை மெச்சிய இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அஃரிடியை பாராட்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில்” உண்மையில் மிக உண்ணதமான சேவையை செய்கிறீர்கள் அஃப்ரிடி. மனிதநேயமிக்க உங்கள் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. உங்களுக்கு இறைவனின் அருள் என்றென்றும் கிடைக்கட்டும். உலகில் அனைவருக்காகவும் நாம் பிரார்த்திப்போம்”…

மேலும்...