டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அதிர்ச்சி!

புதுடெல்லி (04 டிச 2022): டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் முடக்கம் பின்னணியில் சீன ஹேக்கர்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் டெல்லி எய்ம்ஸ் சர்வர் முடக்கம் தொடர்வதால் அங்கு பல்வேறு சேவைகள் இன்னமும் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரிலிருந்து நிறைய நோயாளிகளின் தரவுகளை எடுத்து அதனை டார்க் வெப் இணையத்திற்கு ஹேக்கர்கள் விற்பனை செய்திருக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அஞ்சப்படுகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் ஏராளமான அரசியல்வாதிகளின் மருத்துவ சிகிச்சை…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் கோவிட் பாதித்தவர்கள் நிலை – மருத்துவ நிபுணர்கள் முக்கிய தகவல்!

புதுடெல்லி (06 ஜூன் 2021): கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் கோவிட் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்தும் மரணம் ஏற்படுகின்றதா? என்பது குறித்தும் எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அதன்படி, இதுதொடர்பாக எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ஆய்வில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா வந்த 36 நோயாளிகளும், ஒரு டோஸ் போட்டு தொற்று பாதிப்புக்குள்ளான 27 பேரும் என 63 பேர் உட்படுத்தப்பட்டனர். இதில் 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும்…

மேலும்...

உதயநிதியின் ஆயுதத்தை கையில் எடுத்த ஸ்டாலின்!

சென்னை (05 ஜூன் 2021): எய்ம்ஸ் மருத்துவ மனையின் ஒற்றை செங்கல்லை வைத்து கடந்த தேர்தலில் பிரச்சாரத்தில் பட்டையை கிளப்பினார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும் என, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்குவதற்காக 27-1-2019 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர்…

மேலும்...

எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா மீண்டும் அனுமதி!

புதுடெல்லி(13 செப் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்ட அமித்ஷா, கொரோனா நெகட்டிவ் ஆன நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருமுறை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக அமித்ஷா மேலும் சில நாள் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்...

தனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பாற்றிய டாக்டர் ஜாஹித்!

புதுடெல்லி (10 மே 2020): நோன்பு திறக்கும் நேரம் நெருங்கிவிட்டது. டாக்டர் ஜாஹித் நோன்பு திறப்பதற்காக அமர்ந்து பிரார்த்தனையில் இருந்தார். அப்போது அவருக்கு அவசர அழைப்பு வந்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் ஜாஹித். கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நோயாளியை ஆம்புலன்சிலிருந்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்ற வேண்டும். அதற்கு டாக்டர் ஜாஹிதின் உதவி தேவை. அதற்கான அழைப்புதான் அப்போது ஜாஹிதுக்கு வந்திருந்தது. உடனே…

மேலும்...