முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது!

சென்னை (21 பிப் 2022): முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக கைது செய்யப்படுள்ளார். தமிழகத்தில் கடந்த பிப் 19 ஆம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஆயுதம் ஏந்திய காவல்துறையின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்…

மேலும்...

பஞ்சாப் முதல்வரின் மருமகன் கைது!

புதுடெல்லி (04 பிப் 2022): பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபேந்திர சிங் ஹனி,மணல் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப்பில் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 10-ம் தேதி முடிவுகள் வெளியாகிறது. இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபேந்திர சிங் ஹனியை நேற்று மாலை காவலில் எடுத்த அமலாக்கத்துறை, இன்று அவரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது. பணமோசடி தடுப்புச்…

மேலும்...

11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் கைது!

பாட்னா (09 ஜன 2022): பிகாரில் ஒரே வருடத்தில் 11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகாரில் 84 வயது முதியவர், கடந்த ஒரு வருடத்தில் 11 முறை கோவிட்-19 தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளார். இதனை அடுத்து மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் வினய் கிருஷ்ண பிரசாத் அளித்த புகாரின் அடிப்படையில், பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்பவர் மீது புரைனி காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்திய…

மேலும்...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது!

ஓசூர் (05 ஜன 2022): பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ்…

மேலும்...

முஸ்லீம் பெயரில் போலி பாஸ்போர்ட் மூலம் வளைகுடா நாடுகளுக்குச் சென்ற ராஜேஷ் என்பவர் கைது!

திருவனந்தபுரம் (21 டிச 2021): பாஸ்போர்ட்டில் மோசடி செய்து 10 ஆண்டுகளாக முஸ்லீம் அடையாளத்துடன் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வந்த ராஜேஷ் (47) என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்படுள்ளார் . ஷெரின் அப்துல் சலாம் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து வளைகுடா நாடுகளுக்கு சென்று திரும்பிய நிலையில் ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ் கடந்த 2006-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாடு சென்றதாக கிளிமானூர் காவல் நிலையத்தில் 2019 இல் வழக்குப்…

மேலும்...

நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது!

புதுக்கோட்டை (13 டிச 2021): குன்னூர் ஹெலிகாப்டர் குறித்து அவதூறாக பதிவிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்த சம்பவத்தில், முக்கிய தலைவர்களை விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.க.வைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், பிபின் ராவத்…

மேலும்...

எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் கைது!

சென்னை (28 நவ 2021): முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடியில் ஈடுபட்டதாக நெய்வேலியை சேர்ந்த பொறியாளர் தமிழ்ச்செல்வன் என்பவர் அளித்த புகாரின் பேரில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி மணி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். அவரைப்பிடிக்க 4…

மேலும்...

சொகுசு அறையில் கைதான பிரபல தமிழ் நடிகர்!

மூணாறு (23 நவ 2021): பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் மூணாறு சொகுசு அறையில் கைதாகியுள்ளார். மலையாளம் மற்றும் ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம். இவரும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் மீன்குழம்பும், மண்பானையும், ஒருபக்க கதை ஆகிய படங்கில் நடித்துள்ளார். தற்போது வெப் தொடர்களில் நடித்து வருகிறார். ஒரு வெப் தொடரில் நடிப்பதற்காக கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு சென்றார் காளிதாஸ். அங்கு படக்குழுவினருடன்…

மேலும்...

திரிபுரா வகுப்புவாத வன்முறை குறித்து செய்தி வெளியிட்ட பெண் பத்திரிகையாளர்கள் கைது!

புதுடெல்லி (15 நவ 2021): திரிபுராவில் நடந்த வகுப்புவாத வன்முறை குறித்து செய்தி வெளியிட்ட இரண்டு பெண் பத்திரிக்கையாளர்கள் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். விஸ்வ ஹிந்து பரிஷத் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எச்டிடபிள்யூ நியூஸ் என்கிற இணையதளத்தின் பத்திரிக்கையாளர்களான சம்ருதி ஷகுனியா மற்றும் ஸ்வர்ணா ஜா ​​ஆகியோர் திரிபுராவிலிருந்து டெல்லி திரும்பி விடுதியில் தங்கியிருந்தபோது இருவரும் நேற்று இரவு 10:30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கைதுக்கு கடும்…

மேலும்...

முஸ்லிம் மத அறிஞர் கைது – மதசார்பற்ற கட்சிகள் மவுனம்!

லக்னோ (23 செப் 2021): உத்திர பிரதேசத்தில் மதகுரு மவுலானா கலீம் சித்தகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மதசார்பற்ற கட்சிகள் இவ்விவகாரத்தில் மவுனம் சாதிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏவான அமனதுல்லா கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மவுலானா கலீம் சித்திகி வடக்கு உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய மத தலைவராக பார்க்கப்படுபவர், இவர் நடத்தி வந்த ஜாமியா இமாம் வலியுல்லா எனும் அறக்கட்டளை இவரது தலைமையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இவர் பலரை கட்டாய மத மாற்றம் செய்ததாகக்…

மேலும்...