பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்த தப்லீக் ஜமாத்தினர் பட்டியல் அரசிடம் ஒப்படைப்பு!

ஐதராபாத் (02 ஜூன் 2020): கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்த 38 தப்லீக் ஜமாத்தினர் பட்டியலை தெலுங்கானா அரசிடம் அசாதுத்தீன் உவைசி ஒப்படைத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதித்து மீண்ட தப்லீக் ஜமாத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிறருக்கு பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் 38 தப்லீக் ஜமாத்தினர் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர்களைப் பற்றிய பட்டியல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஐதராபாத் எம்.பி.யும், AIMIM…

மேலும்...

முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை – அசாதுத்தீன் உவைசி சாடல்!

புதுடெல்லி (12 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையிலும் முஸ்லிம்களுக்கு அநீதிதான் கிடைக்கும் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். டெல்லி கலவரம் தொடர்பாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது உரையை முடித்தவுடன், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி மத்திய அரசை கடுமையாக சாடி பேசினார். பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு அரசு என்ன செய்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பிறகு நாடாளுமன்றம் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய உவைசி “டெல்லி வன்முறையால்…

மேலும்...

என் மார்பில் சுட்டாலும் என் ஆதாரங்களை காட்ட மாட்டேன் – அசாதுத்தீன் உவைசி!

புதுடெல்லி (11 பிப் 2020): என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் என் குடியுரிமை ஆதாரங்களை காட்ட மாட்டேன் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூலில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட கூட்டத்தில் பேசிய உவைசி, “முஸ்லிம்களிடம் இருந்த மரணம் பயம் இப்போது நீங்கியிருக்கிறது. அதற்கு காரணம் பாஜகவின் வெறுப்பு பேச்சு. நான் பாஜகவினருக்கு கூறிக் கொள்கிறேன், முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளீர்கள். அதற்காக முஸ்லிம்கள் அஞ்சப்போவதில்லை. அவர்களுக்கு மரண பயம்…

மேலும்...

ஷஹீன் பாக் ஜாலியன் வாலாபாக்காக மாறும் அபாயம் – உவைசி எச்சரிக்கை!

புதுடெல்லி (06 பிப் 2020): டெல்லி ஷஹின் பாக் போராட்டக் காரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தக்கூடும் வாய்ப்பு இருப்பதாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை விடுத்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் கடும் குளிர் பனியையும் பொருட்படுத்தாமல் இடைவிடாது தொடர் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கலந்துகொண்டுள்ளனர். இந்த போராட்டத்தால் வெறுப்படைந்துள்ள இந்துத்வா கும்பல்கள் போராட்டத்தை…

மேலும்...

முஸ்லிம் பெண்களை கண்டு பிரதமர் மோடிக்கு ஏன் அச்சம்? – உவைசி சரமாரி கேள்வி!

புதுடெல்லி (05 பிப் 2020): முஸ்லிம் பெண்களின் சகோதரனான பிரதமர் மோடிக்கு முஸ்லிம் பெண்களை கண்டு ஏன் அச்சப்படுகிறார்? என்று அசாதுத்தீன் உவைசி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின்போது , குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஷஹீன் பாக்கில் டிசம்பர் 15 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். இதற்கு AMIM தலைவர் உவைசி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி, எ.பி.ஆர் ஆகியவற்றிற்கு இடையே ஒற்றுமை…

மேலும்...

டெல்லி துப்பாக்கிச் சூடு விவகாரம் – பிரதமர் மோடிக்கு அசாதுத்தீன் உவைசி கிடுக்கிப்பிடி கேள்வி!

புதுடெல்லி (31 ஜன 2020): “டெல்லியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் உடைக்கு அடையாளம் என்ன?” என்று பிரதமர் மோடிக்கு உவைசி கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தை கொச்சை படுத்தும் வகையில் பேசியிருந்த பிரதமர் மோடி, வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஆடைகளை வைத்தே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் டெல்லியில் “ஜாமியா மில்லியா பல்கலை மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதியின் உடை குறித்து அடையாளம் தர முடியுமா?” என்று…

மேலும்...

சுடப்படும் இடத்தை சொல்லுங்கள் நான் தயார் – அனுராக் தாக்கூருக்கு அசாதுத்தீன் உவைசி சவால்!

மும்பை (29 ஜன 2020): “குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை சுட வேண்டுமெனில் என்னை சுடுங்கள்” என்று ‘ஆல் இந்தியா மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமிமன்’ (AIMIM) தலைவர் அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் ஆத் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. டெல்லியில் மாணவர்கள்…

மேலும்...

நீங்கள் ஹல்வா என்றால் நான் மிளகா – நிர்மலா சீதாராமனின் ஹல்வா விழாவை கிண்டல் செய்த உவைசி

புதுடெல்லி (23 ஜன 2020): மத்திய நிதியமைச்சகம் கொண்டாடிய ஹல்வா விழாவை அசாதுத்தீன் உவைசி கிண்டலடித்துள்ளர். மத்திய நிதி அமைச்சகம் ஹல்வா விழாவை அதன் தலைமையகத்தில் கொண்டாடியது. இந்த விழாவிற்கு மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்நிலையில் இந்த விழா குறித்து கறீம் நகரில் பேசிய உவைசி, “ஹல்வா என்பது இந்தியாவின் எந்த மொழியிலும் உள்ள வார்த்தை கிடையாது….

மேலும்...

குடியுரிமை திருத்தச் சட்டம்: நேருக்கு நேர் விவாதிக்க தயார் – அமித்ஷாவுக்கு உவைசி சவால்!

புதுடெல்லி (22 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க நானும் தயாராக உள்ளேன் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினரின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து…

மேலும்...

இரண்டு குழந்தைகள் கருத்து – ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு உவைசி பதிலடி!

நிஜாமாபாத் (19 ஜன 2020): அடுத்து ஒரு குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் என்ற சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்துக்கு AIMIM தலைவர் அசதுத்தீன் உவைசி பதிலடி கொடுத்துள்ளார். நிஜாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உவைசி, “மோகன் பகவத் பேசியுள்ளது வெட்கக் கேடானது. இந்தியாவில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பலருக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளது. ஆனால் முஸ்லிம்கள்  எல்லாவற்றிலும் கட்டுப்பாடாகவே உள்ளனர். பகவத் முஸ்லிம்களை குறி வைத்தே இதுபோன்ற…

மேலும்...