ஆட்டம் காணும் பாஜக – அயோத்தியில் போட்டியிடும் யோகி ஆதித்யநாத்!

லக்னோ (13 ஜன 2022): உத்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி தொகுதியில் போட்டியிடுகிறார். நாடே எதிர்பார்க்கும், உத்திர பிரதேச தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. 2 பாஜக அமைச்சர்கள் உட்பட 6 பாஜக எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு விலகிய நிலையில் பாஜக அங்கு ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் உ.பி.யில் ஆட்சியைத் தக்கவைக்க தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் அயோத்தியில் போட்டியிடுகிறார். டெல்லியில் நடைபெற்ற பாஜகவின்…

மேலும்...

அயோத்தி ராமர் கோவில் திறப்பு எப்போது தெரியுமா?

லக்னோ (04 ஆக 2021): அயோத்தியில் ராமர் கோவில் வரும் 2023 ஆம் ஆண்டு திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இந்துத்வாவினரால் இடிக்கப்பட்டது. மேலும் அங்கு ராமர் கோவிலை கட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ். பாஜக உள்ளிட்ட இந்துத்வாவினர் முழுமூச்சாக இருந்தனர். எனினும் பாபர் மசூதி இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட வேண்டும் என்றும் மசூதி முஸ்லிம்களுக்கே சொந்தம் என்றும் முஸ்லிம்களால் தொடரப்பட்ட வழக்கு உச்ச…

மேலும்...

விஸ்வரூபமெடுக்கும் ராமர் கோவில் நில பேர ஊழல் – மோடி விளக்கமளிக்க சாதுக்கள் கோரிக்கை!

புதுடெல்லி (26 ஜூன் 2021): அயோத்தி ராமர் கோவில் நில பேர ஊழல் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று சாதுக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராமர் கோயிலுக்காக அயோத்தி நிலத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு நிலம் வாங்கியதில் தான் தற்போது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரே நாளிலேயே ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் ரூ.18 கோடிக்கு கைமாற்றப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை சிபிஐ…

மேலும்...

அயோத்தியில் ராமர் கோவில் நிலம் பத்திரப் பதிவில் மோசடி!

அயோத்தி (14 ஜூன் 2021): அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் மோசடியில் ஈடுபட்டதாக ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கட்டுமான பணிகளை கண்காணிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில், ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. 15 உறுப்பினர்களை கொண்ட இந்த அறக்கட்டளையில் 12 பேரை ஒன்றிய…

மேலும்...

குடியரசு தினத்தில் அயோத்தியில் புதிய பாபர் மசூதி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா!

அயோத்தி (18 டிச 2020): 2021 ஜனவரியில் இந்திய குடியரசு தினத்தன்று உத்திர பிரதேசத்தில் புதிய பாபர் மசூதி கட்டுவதற்காக அடிக்கல் நாட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம் ஜென்ம பூமி-பாப்ரி மஸ்ஜித் தளத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழி வகுத்ததுடன், மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அயோத்தியின் சோஹவல்…

மேலும்...

இந்துத்வாவிற்கு மீண்டும் திரும்பிய உத்தவ் தாக்கரே!

லக்னோ (11 மார்ச் 2020): இந்துத்வாவை விட்டு நான் விலகவில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ 1 கோடியை நன்கொடையாக வழங்கினார். இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, ” இது மகாராஷ்டிர அரசு பணம் அல்ல, இது எனது அறக்கட்டளையிலிருந்து தரப்பட்டுள்ள…

மேலும்...

பாபர் மசூதி தீர்ப்பை எதிர்த்து பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

புதுடெல்லி (08 மார்ச் 2020): பாபர் மசூதி – ராமர் கோவில் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் பாபர் மசூதி கட்ட வேறு இடத்தில் இடம் ஒதுக்க உபி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து பாப்புலர்…

மேலும்...