பாஜகவில் இணைந்த அதிமுக பிரபலம்!

புதுடெல்லி(10 ஜூன் 2023): அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் அருண் சிங் முன்னிலையில் மைத்ரேயன் இணைந்தார். அப்போது பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி உடனிருந்தார்.

மேலும்...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான ‘கிருஷ்ணா’வில் 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பில் அவர் இந்த உறுதிமொழியை அளித்தார். நாட்டை ஆபத்தில் ஆழ்த்தும், பன்மைத்துவத்தை அழிக்கும் பாஜகவுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, இது தொடர்பாக மக்களை எச்சரிக்க முன்வந்த எழுத்தாளர்களுக்கு…

மேலும்...

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் உறுப்பினர்களும் அக்கட்சியில் இருந்து விலகினர். அவர்களும் அதிமுகவுக்கு மாறினர். தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தாலும், அக்கட்சியில் இருந்து பலர் மொத்தமாக ராஜினாமா செய்திருப்பது பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாஜக செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலைவர்…

மேலும்...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை பாஜக பயன்படுத்துகிறது என்றும், என்றும் அவர் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராமர் இந்துக்களுக்கு மட்டும் கடவுள் அல்ல, இந்த எண்ணத்தை உங்கள் மனதில் இருந்து அகற்றிவிடுங்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், அமெரிக்கர்கள், ரஷ்யர்கள் என யாராக இருந்தாலும், அவரை நம்பும்…

மேலும்...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் எதிர் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் நாட்டை அவமதித்ததாகக் கூறி ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை ரத்து செய்ய பாஜக கோரி வருகிறது…

மேலும்...

இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறு பரப்பிய கல்யாணராமனுக்கு சிறைத்தண்டனை – ஆனால் நடந்தது என்ன தெரியுமா?

சென்னை (09 மார்ச் 2023): இஸ்லாமியர்களைப் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் 163 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் நள்ளிரவில் கைது செய்தனர். பெண் பத்திரிகையாளர்கள், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் இஸ்லாமிய மற்றும் கிருத்துவ மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் அருவறுக்கத்தக்க கருத்துக்களை கல்யாணராமன் தொடர்ந்து பரப்பி வருவதாக, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞரும், விடுதலை சிறுத்தைகள்…

மேலும்...

தமிழ்நாடு பாஜகவிலிருந்து அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்!

சென்னை (06 மார்ச் 2023): தமிழ்நாடு பாஜகவிலிருந்து சிடிஆர் நிர்மல் குமாரை தொடர்ந்து பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜகவின் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்தவர் சிடிஆர் நிர்மல் குமார். இந்த நிலையில் நேற்று திடீரென்று கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். விலகல் குறித்த அவரது அறிவிப்பில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும்…

மேலும்...

ஒரு வதந்தி பரவிய நிலையில் அடுத்த வதந்தி – பாஜக பிரமுகரை பிடிக்க தனிப்படை டெல்லி விரைவு!

சென்னை (05 மார்ச் 2023): தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்தி பரப்பிய உத்திர பிரதேச பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்வ்வை பிடிக்க தனிப்படை டெல்லி விரைந்துள்ளது. தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பிய உ.பி. பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்ராவ் டெல்லிக்கு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து டெல்லியில் பதுங்கி இருக்கும் பிரசாந்த் உமாராவை கைது செய்ய தமிழ்நாடு தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர்…

மேலும்...

தமிழ்நாட்டின் காவல்துறை பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதா? – திருமாவளவன் கேள்வி!

சென்னை (01 மார்ச் 2023): தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்க பா.ஜ.க. முயல்வதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திருமாவளவன், “தமிழ்நாட்டில் பா.ஜ.க. உள்ளிட்ட சனாதன சக்திகளால் வன்முறை தூண்டப்படுகிறது. சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து தி.மு.க. அரசுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர்களின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில்தான் இருக்கின்றன. தி.மு.க….

மேலும்...

காலம் மாறும்போது காட்சியும் மாறுகிறது – காயத்ரி ரகுராம் திருமா சந்திப்பின் பின்னணி!

சென்னை (22 பிப் 2023): நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் விசிக தலைவர் திருமாவளவனை நேற்று சந்தித்திருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது. நடிகை காயத்ரி ரகுராம் தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. காயத்ரி ரகுராமுக்கும், மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்ததை அடுத்து, கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6…

மேலும்...