தேச துரோக வழக்கில் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (30 செப் 2022): சிஏஏ வழக்கில் 2019 முதல் சிறையில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் மீது வேறு வழக்குகள் உள்ளதால் தொடர்ந்து அவர் காவலில் இருக்க நேர்ந்துள்ளது. கடந்த. 2019 ஆம் ஆண்டு ஜாமியா நகர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பேசிய உரைக்காக ஷர்ஜீல் இமாம் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். ஷர்ஜீல் இமாம் மீது பல வழக்குகள்…

மேலும்...

சிஏஏ போராட்டக்காரர்களின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (18 ஜுன் 2021): சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் ஆஷிப் இக்பால் ஆகியோரது ஜாமீனை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்ட மூவரையும் உபா சட்டத்தில் கைது செய்த டெல்லி போலீஸ் அவர்களை சிறையில் அடைத்தது. இவர்கள் ஜாமீன் மீதான விசாரணையின்போது டெல்லி உயர் நீதிமன்றம் போராட்டத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையே வேறுபாடு உள்ளது, ஐபிசியின்…

மேலும்...

போராட்டம் நடத்துவது தீவிரவாதமாகாது – சிஏஏ போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன்!

புதுடெல்லி (16 ஜூன் 2021): போராட்டம் நடத்துவது தீவிரவாதம் இல்லை என்று கூறிய டெல்லி உயர் நீதிமன்றம் நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஆஷிப் இக்பால் ஆகிய சிஏஏ போராட்டக்காரர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற சிஏஏ போராட்டம் தொடர்பாக நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் ஆஷிப்…

மேலும்...

சிஏஏ வழக்கில் இளைஞர்கள் மீதான எஃப்.ஐ ஆரை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (12 ஏப் 2021): சி.ஏ.ஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக இளைஞர்கள் மீது போலீசார் பதிவு செய்த எப் ஐ ஆரை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஜாபர் சாதிக் என்பவர் மீதும் ஒரு சில இளைஞர்கள் மீதும் சி ஏஏ போராட்டத்தின்போது பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்தியதாகவும் , சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் கன்னியாகுமரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் சாதிக் உள்ளிட்டவர்கள் மீது புகார் செய்தார். இது குறித்த வழக்கு சென்னை…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

கடையல்லூர் (19 பிப் 2021): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பேசும்போது தெரிவித்ததாவது: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்ததியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்படும். சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட 1500 வழக்குகளில் சிலவற்றை தவிர மற்றவை ரத்து செய்யப்படும். கூடங்குளத்தில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும்…

மேலும்...

முஸ்லிம்கள் ஒன்றும் குழந்தைகளல்ல – மோகன் பகவத்துக்கு ஒவைசி பதிலடி!

புதுடெல்லி (25 அக் 2020): CAA மற்றும் NRC ஆகிய சட்டங்களை முஸ்லிம்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்பதாக மோகன் பகவத் கூறியுள்ளதற்கு அசாதுத்தீன் உவைசி பதிலடி கொடுத்துள்ளார். CAA சட்டம் எந்த சமூகத்திற்கும் எதிரானது அல்ல என்றும் முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் பகவத் கூறினார். போராட்டம் என்ற பெயரில் நாட்டில் திட்டமிட்ட வன்முறை நடத்தப்படுவதாக பகவத் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள AIMIM தலைவர் ஆசாதுதீன் ஒவைசி, முஸ்லிம்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. சிஏஏ…

மேலும்...

சிறையில் தனிமையில் கொடுமைப் படுத்தப்படுகிறேன் – ஒமர் காலித் நீதிமன்றத்தில் விளக்கம்!

புதுடெல்லி (22 அக் 2020): திகார் சிறையில் தனிமையில் கொடுமைப் படுத்தப்படுவதாக ஜே.என்.யூ முன்னாள் மாணவர் ஒமர் காலித் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். டெல்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் ஒமர் காலித் கடந்த பிப்ரவரி மாதம் முதல் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவர் நீதிபதியிடம் அளித்த விளக்கத்தில், உமர் காலித் தனது…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மீண்டும் வெடித்த போராட்டம்!

அஸ்ஸாம் (22 அக் 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியதை அடுத்து அசாமில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு அனைத்து அசாம் மாணவர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. . நாடே கொந்தளித்தபோதும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது கோவிட் தான் என்றும், இந்தச் சட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்….

மேலும்...

பாஜகவில் இணைந்த ஷாஹீன்பாக் போராட்டக்காரர்கள் – ஆம் ஆத்மி பாஜக மீது புகார்!

புதுடெல்லி (18 ஆக 2020): சிஏஏ எதிர்ப்பு, டெல்லி ஷாகீன்பாக் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் டெல்லி ஷாஹீன்பாக் போராட்டம் பாஜக திட்டமிட்டு நடத்திய சதி என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தேசிய தலைநகர் டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் 24 மணி நேரமும் 101 நாள் தொடர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை பின்பற்றி நாடெங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது….

மேலும்...

டெல்லி சிறையில் வாடிய கர்ப்பிணி மாணவி சஃபூரா ஜாமீனில் விடுதலை!

புதுடெல்லி (23 ஜூன் 2020): டெல்லி திகார் சிறையில் வாடிய அப்பாவி கர்ப்பிணி பெண் சபூராவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் சமூகவியலில் ஆய்வு அறிஞரான 27 வயதான ஸர்கர், ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் 10 ஆம் தேதி, போக்குவரத்தைத் தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் பிணை பெற்ற பின்னர், மீண்டும் ஏப்ரல் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பிப்ரவரி இறுதியில் டெல்லியைச்…

மேலும்...