ஊரடங்கு காலத்தில் சிஏஏ எதிர்ப்பாளர்களை கைது செய்வதா? – எதிர் கட்சிகள் கடும் கண்டனம்!
புதுடெல்லி (02 ஜுன் 2020): நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்களை கைது செய்வதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கொரோனா பவலாலும், ஊரடங்காலும் நாடே பெரும் சோதனை காலத்தில் உள்ளது. இந்நிலையில் அவசியமில்லாமல் சிஏஏ எதிர்ப்பு மாணவர்களை டெல்லி போலீஸ் கைது செய்து வருகிறது. இதற்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக உலகம் இப்போது உள்ள சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதை கூட்டாக கண்டிக்க…