சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம்!

புதுடெல்லி (13 டிச 2021): கடும் எதிர்ப்பை அடுத்து பத்தாம் வகுப்பு தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வியை சிபிஎஸ்இ நீக்கியுள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆங்கிலப் பாடத் தேர்வுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில், பெண்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை நடைமுறைகள் பற்றிய கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இதில் பாலின பாகுபாடு, பிற்போக்குத்தனம் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் வகையில் சிபிஎஸ்இ வினாத்தாள் இருப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,…

மேலும்...

12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளால் சவூதி வாழ் இந்திய மாணவர்கள் கவலை!

ரியாத் (31 ஜூலை 2021): சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு முடிவுகள் சவூதி வாழ் இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கவலை அடையச் செய்துள்ளது. கோவிட் பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட போதும் தேர்வுகள் நடக்கவில்லை. எனினும் தேர்வு முடிவுகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதால், பலர் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலை. தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள், உயர்கல்வி வாய்ப்பை சிதைப்பதாக மாணவர்களும்…

மேலும்...

சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து இரண்டு பரிந்துரைகள் முன்வைப்பு!

புதுடெல்லி (23 மே 2021): சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய அமைச்சர்களுடன் இரண்டு பரிந்துரைகள் மூன்வைக்கப்பட்டு அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் மாநில கல்வித்துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தபப்ட்டுள்ளது. கோவிட் நோய்த்தொற்றின் இரண்டாவது அலைகளைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழு முன் இன்று பிற்பகல் விளக்கக்காட்சி மூலம் இரண்டு பரிந்துரைகள் வைக்கப்பட்டன. முதல் பரிந்துரையின் கீழ், தேர்வுகள்…

மேலும்...

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைப்பு!

புதுடெல்லி (14 ஏப் 2021): நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தொடர்ந்து, இன்று பிற்பகல் 12 மணியளவில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய…

மேலும்...

ஆன்லைன் வகுப்புக்காக ஃபேஸ்புக்குடன் இணையும் சிபிஎஸ்இ!

புதுடெல்லி (16 ஜூலை 2020): இணைப்பில் நிஜமாக்கல்’ என்ற முறையில் ஆன்லைனில் பாடம் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இதற்காக ஃபேஸ்புக்குடன் இணைந்து செயலாற்ற சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அதன்படி டிஜிட்டல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டதாக இந்த முறை இருக்கும். தற்போதைய கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த தொழில்நுட்பம் அமையும். இதற்காக ஆசிரியர்களுக்கு 3 வாரப்பயிற்சி முகாம் 5 கட்டமாக நடக்கவுள்ளது. இந்த பயிற்சி பேஸ்புக்கின்…

மேலும்...

சிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம் – கொரோனா காரணம்..?

புதுடெல்லி (09 ஜூலை 2020): ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பிற்கான 2020-2021 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தினை மூன்றில் ஒரு பகுதியாக குறைப்பதாக 7.7.2020 அன்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனாவைரஸ் காரணமாக தற்போது நிலவும் அசாதாரண சூழலைக் கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. ஜனநாயக உரிமைகள், உணவு பாதுகாப்பு, குடியுரிமை, மதச்சார்பின்மை போன்ற முக்கியமான பாடங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து கொவிட்-19 காரணம் காட்டி நீக்கப்பட்டுள்ளது. பதினொன்றாம் வகுப்புக்கான அரசியல் அறிவியல் பாடத்தில் இருந்து…

மேலும்...

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து!

புதுடெல்லி (25 ஜூன் 2020): சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் பாதியில் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மீதமுள்ள தேர்வுகள் நடத்தப்படும் என கடந்த மாதம் 18ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்…

மேலும்...

சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படுமா? – உச்ச நீதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (12 ஜூன் 2020): சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்யக் கோரி, மாணவர்களின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் பாதியில் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மீதமுள்ள தேர்வுகள் நடத்தப்படும் என கடந்த மாதம் 18ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பெற்றோர்கள் நேற்று வழக்கு…

மேலும்...

CBSE பள்ளிகளில் ஆன்லைன் பயிற்சி – பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு!

புதுடெல்லி (25 மே 2020): CBSE பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளை CBSE நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், CBSE பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இணையத்தில் வரம்புமீறிய செயல்கள் நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து ஆன்லைனில் செயல்பாடுகள் குறித்த வழிகாட்டு முறையை CBSE வெளியிட்டுள்ளது. பிறருக்கு பகிரும் புகைப்படங்கள், வீடியோக்களில்…

மேலும்...

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ மாணவர்கள் ஆல் பாஸ் – மத்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி (01 ஏப் 2020): 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்சி பெற்றதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, நாடு முமுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகள் இயங்கவில்லை. மேலும் நடைபெற வேண்டிய தேர்வுகளும் நடைபெறவில்லை. இந்நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு…

மேலும்...