மத்திய பாஜக அரசுக்கு மற்றும் ஒரு நெருக்கடி- ஐநா மனித உரிமைகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (03 மார்ச் 2020): குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் மனு அளித்துள்ளார். மேலும் இந்தியா தொடர்பான வழக்கில் வெளிநாட்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க முடியாது என்று மத்திய வெளியுறவு விவகாரத்துறை தெரிவித்திருக்கும் நிலையில், சிஏஏ விவகாரம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மனித உரிமை சார்ந்து உலக நாடுகளின் அரசுகள் கொண்டுவரும் கொள்கை முடிவுகளில் ஐ.நா….

மேலும்...

300 பேர் என் வீட்டை எரித்தனர் – முன்னாள் ரிசர்வ் படை அதிகாரியின் பதற வைக்கும் தகவல்!

புதுடெல்லி (03 மார்ச் 2020): டெல்லி வன்முறை வெறியாட்டத்தின் போது முன்னாள் CRPF வீரருடைய வீடும் எரிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 22 ஆண்டுகளாக பணியாற்றி 2002ஆம் ஆண்டில் தலைமைக் காவலராக ஓய்வு பெற்றவர் அயிஷ் முகமது (58), தற்போது வடகிழக்கு டெல்லியில் ஒரு தற்காலிக நிவாரண முகாமில் தஞ்சம் புகுந்துள்ள அவர் கடந்த வாரம் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விவரித்தவை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “என் வீட்டிற்கு வன்முறையாளர்கள் 200…

மேலும்...

தமிழக போராட்டம் எதிரொலி- சட்டசபையில் தீர்மானத்திற்கு வாய்ப்பு- தமிழக அமைச்சர்கள் அமித் ஷாவுடன் சந்திப்பு!

புதுடெல்லி (02 மார்ச் 2020): குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களின் எதிரொலியாக தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாரும் தங்கமணியும் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர். குடியுரிமை சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியனவற்றை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் இதுவரை அதிமுக அரசு அதை ஏற்கவில்லை. எனினும் முதல்வர் எடப்பாடியின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அண்மையில் திருச்சியில்…

மேலும்...

பற்றி எரிந்த டெல்லியில் முஸ்லிம்களை பற்றிப் பிடித்த மொஹிந்தர் சிங்!

புதுடெல்லி (01 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலை சம்பவத்தில் 70 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொலைக் கும்பலிடமிருந்து காப்பாற்றியுள்ளனர் இரண்டு சீக்கியர்கள். தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி வழி போராட்டத்தில் இனப்படுகொலையாளர்கள் புகுந்து போராட்டத்தை வன்முறையாக மாற்றி 42 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக வடகிழக்கு டெல்லியில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் கோகுல்புரி பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டட்ஜி/ அங்கு வசித்து வந்த 70-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வன்முறையாளர்களுக்குப் பயந்து ஆங்காங்கே பதுங்கியிருந்தனர். இஸ்லாமியர்கள் அதிகம்…

மேலும்...

தமிழக முஸ்லிம் உலமாக்கள் நடிகர் ரஜினியுடன் சந்திப்பு!

சென்னை (01 மார்ச் 2020): தமிழ்நாடு முஸ்லிம் உலமாக்கள் நடிகர் ரஜினியை சந்தித்து பேசியுள்ளனர். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நாடெங்கும் வலுத்துள்ளது. மேலும் மத்திய பாஜக அரசுடன் நெருங்கிய நட்பு வைத்திருக்கும் ரஜினி, வெளியில் பாஜகவுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறி வருகிறார். ஆனால் தமிழகம் வரும் பாஜக தலைவர்கல் நிகழ்ச்சிகளில் எல்லாவற்றிலும் ரஜினி கலந்து கொள்வார். இதுவல்லாமல் பாஜக அரசின் அனைத்து திட்டங்களையும் ஆதரித்து கருத்து தெரிவித்து வருபவர் ரஜினி. குறிப்பாக சிஏஏவுக்கும்…

மேலும்...
shaheen-bagh

டெல்லியில் ஷஹீன் பாக் போராட்டக் காரர்களுக்கு இந்துத்வா அமைப்பு மீண்டும் மிரட்டல்!

புதுடெல்லி (01 மார்ச் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் காரர்களை அப்புறப்படுத்த இந்து சேனா இந்துத்வா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் நடைபெறும் மஜ்பூர், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் இந்துத்துவ தீவிரவாதிகள் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதில் 42 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மிக முக்கிய காரணம் பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் வெறுப்பூட்டும் பேச்சும், மூன்று நாட்கள் அவகாசத்தில் போராட்டக் காரர்களை அப்புறப்படுத்துவோம்…

மேலும்...

மத்திய அமைச்சரின் சுட்டுத் தள்ளுங்கள் (கோலி மாரோ) வாசகம் இன்றும் தொடரும் அவலம்!

புதுடெல்லி (29 பிப் 2020): மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் சுட்டுத் தள்ளுங்கள் என்ற சொல் இன்றும் வன்முறையாளர்களால் தொடரப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும் ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டது. இதில் 42 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ள்னர்.. பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் அமைதி திரும்பியதாக போலீஸ்…

மேலும்...

டெல்லி இனப்படுகொலையில் கொல்லப்பட்ட சகோதரர்கள் ஹாஷிம் மற்றும் ஆமிர்!

புதுடெல்லி (29 பிப் 2020): டெல்லி இனப் படுகொலையில் கொல்லப்பட்ட அண்ணன் தம்பி இருவரின் உடல் நீண்ட ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது. டெல்லியில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் நடைபெறும் மஜ்பூர், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் இந்துத்துவ தீவிரவாதிகள் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதில் 42 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தீவிரவாதத்தில் 27 வயது ஆமிரும் அவருடைய தம்பி 17 வயது ஹாஷிமும் இந்தத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது கொடூரத்தின் உச்சம்….

மேலும்...

டெல்லி கலவரத்தில் எல்லை பாதுகாப்பு வீரர் முஹம்மது அனீஸ் வீடு எரிப்பு!

புதுடெல்லி (29 பிப் 2020): டெல்லி கலவரத்தில் எல்லை பாதுகாப்பு வீரர் ஜவான் அனீஸ் வீடும் வன்முறையாளர்களால் எரியூட்டப்பட்டுள்ளது. டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும் ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டது. இதில் 41 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ள்னர்.. பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள். இந்நிலையில் டெல்லி வட கிழக்கு பகுதியில் இருந்த எல்லை பாதுகாப்பு வீரர் (BSF) முஹம்மது அனீஸ் வீடும் எரித்து…

மேலும்...

முஸ்லிம்களின் ஆதரவைப் பெற திட்டம் தீட்டும் எடப்பாடி!

சென்னை (29 பிப் 2020): குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து கெட்ட பெயரைச் சம்பாதித்த அதிமுக அரசு முஸ்லிம்களின் வாக்குகளைத் தக்க வைக்க புதிய திட்டத்திற்கு தயாராக உள்ளது. சிஏபி என்று அழைக்கப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது அதை காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆயினும் மக்களவையில் பிஜேபி அரசுக்கு இருந்த அதீதப் பெரும்பான்மையால் அங்கு அந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பிஜேபிக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில்…

மேலும்...