சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய குழந்தை மரணம்!

ரியாத் (29 ஜன 2023): சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறுமாத இந்தியக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹசிம் மற்றும் அவரது மனைவி ஜார்யா, ஆறுமாத குழந்தை அர்வா, மகன்கள் அயன் மற்றும் அஃப்னான் மற்றும் ஹசிமின் மாமியார் நஜ்முன்னிசா ஆகியோர் சவூதியில் உம்ரா செய்துவிட்டு அல்கோபரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். ரியாத்தில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள அல்…

மேலும்...

சவூதி அரேபியா ஜித்தாவில் உடல் நலக்குறைவு காரணமாக எட்டு வயது சிறுமி மரணம்!

ஜித்தா (16 ஜன 2023): சவூதி அரேபியா ஜித்தாவில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுமி காய்ச்சல், வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஸ்கேன் செய்து பார்த்ததில் இடுப்புப் பகுதியில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது. நடைமுறைகள் முடிந்து இன்று பிற்பகல் அல் பைசலியா சமாதியில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என ஜித்தா கேஎம்சிசி தெரிவித்துள்ளது.

மேலும்...

தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!

ஐதராபாத் (05 டிச 2022): தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி ஒரு வயது சிறுவன் உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் நெகொண்டா மண்டலத்தைச் சேர்ந்த படாவத் மாலு கவிதா மகன் மணிகண்டா (1) என்ற குழந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை விளையாடுவதற்காக பெற்றோர் பூஜைக்காக வைத்திருந்த தேங்காய் துண்டை கொடுத்துள்ளனர். குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது தேங்காய் துண்டை திண்றுள்ளது. அப்போது தேங்காய் துண்டு குழந்தையின் தொண்டையில் சிக்கியுள்ளது. குழந்தை அலறல் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்….

மேலும்...

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி இன்று முதல் தொடக்கம்!

புதுடெல்லி (03 ஜன 2022): நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. பல கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டத்தில் தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது….

மேலும்...

வீட்டில் பிரசவம் – குழந்தை மரணம்!

கோவை (07 டிச 2021): வீட்டில் சுயமாக பிரசவம் பார்த்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கோவை செட்டிவீதியில் உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார், நகை பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி புண்ணியவதி. விஜயகுமார் – புண்ணியவதி தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந் த நிலையில் 4-வது முறையாக கர்ப்பமானதால் பிரசவம் தொடர்பாக அலட்சியப் போக்கே இருந்து வந்துள்ளது. புண்ணியவதியும் மனவருத்தத்துடன் இருந்ததாக தெரிகிறது. நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவ வலி எடுத்ததும் மருத்துவமனைக்குச்…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் அரங்கேறிய அடுத்த கொடூரம் – 5 வயது சிறுமியையும் விட்டு வைக்காத காம கொடூரர்கள்!

லக்னோ (11 அக் 2020): உத்திர பிரதேசத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. அந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அதன்பின்னரும் பல்வேறு இடங்களில் பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஹர்டோய் மாவட்டத்தில் 5 வயது…

மேலும்...

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் அர்ச்சகர் கைது!

சென்னை (23 மே 2020): சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மடிப்பாக்கம் அடுத்த உள்ளகரம் மண்டபம் இணைப்பு சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் சிவக்குமார்(59). இவர் சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி பின்புறம் உள்ள அன்புக்குறிய அம்மன் கோயிலில் அர்ச்சகராக உள்ளார். நேற்று முன்தினம் சிவகுமார் வீட்டின் பகுதியில் வசித்து வந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து…

மேலும்...

5 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த 50 வயது முதியவர் கைது!

கோவை (09 பிப் 2020): ஐந்து வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் காமராஜபுரத்தில் உள்ள ஒரு மர குடோனில் கூலி வேலை செய்து வருகிறார். அதே குடோனில் ஒரு தம்பதியினர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (08/02/2020) அந்த தம்பதியினர் தங்களின் 5 வயது சிறுமியுடன் வேலைக்கு வந்துள்ளனர். பின்பு சிறுமியை தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு…

மேலும்...

அதிர்ச்சி – மூன்று வயது குழந்தைக்கு வாக்காளர் அட்டை!

ஐதராபாத் (08 ஜன 2020): மூன்று வயது குழந்தைக்கு 35 வயது போட்டு வாக்காளர் அட்டை வழங்கி அசிங்கப்பட்டுள்ளனர் அதிகாரிகள். தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் பகுதியில் வசிக்கும் மெதுக்கு ரமேஷ் என்பவர் வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அவரது வீட்டின் முகவரியில் அவரது மூன்று வயது மகள் நந்திதா பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. போதாதற்கு வயது 35 என பதியப்பட்டிருந்தது. இதனை அடுத்து இதுகுறித்து அதிகாரிகளிம் நந்திதாவின் தந்தை பட்டியலிலிருந்து மகளின் பெயரை…

மேலும்...

ஒரே மாதத்தில் 219 குழந்தைகள் மரணம் – பதிலளிக்காமல் மழுப்பும் முதல்வர்!

அஹமதாபாத் (06 ஜன 2020): குஜராத்தில் ஒரே மாதத்தில் 219 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் அரசு மருத்துவமனையில் 134 பச்சிளம் குழந்தைகளும், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் 85 பச்சிளம் குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்கோட் மருத்துவ மனையில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் 1,235 குழந்தைகள் பலியானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். ஆனால் அவர் பதிலளிக்காமல் நழுவிச் சென்றார். ராஜஸ்தான் மாநிலம்…

மேலும்...