புதிய கட்சி தொடங்கினார் குலாம் நபி ஆசாத்!

ஜம்மு (26 செப் 2022): ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், புதிய கட்சியை துவக்கினார். ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், காங்கிரசின் முன்னாள் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், சமீபத்தில் காங்கிரசில் இருந்து வெளியேறினார்; தனிக் கட்சி துவக்கப் போவதாக அவர் அறிவித்திருந்தார். அதன்படி, தனது புதிய கட்சி குறித்தான அறிவிப்பை குலாம் நபி ஆசாத் இன்று வெளியிட்டார். தனது கட்சிக்கு ‘ஜனநாயக ஆசாத் கட்சி’ எனப் பெயரிட்டுள்ள…

மேலும்...

காங்கிரஸுக்கு காந்தி குடும்பம் இல்லாதவர் தலைவராகிறார்!

புதுடெல்லி (20 செப் 2022): 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வருவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கலோட் மற்றும் கேரள மாநிலம் எம்பி சசி தரூர் ஆகியோர் களத்தில் உள்ளனர். அசோக் கலோட் காந்தி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தலைவர். கட்சியில் சீர்திருத்தம் கோரிய கோஷ்டியின் தலைவராக சசி தரூர் உள்ளார். காங்கிரஸின் ஜி23 குழுவின்…

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரையை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

புதுடெல்லி (15 செப் 2022): பாரத் ஜோடோ யாத்திரையை அடுத்து இன்னொரு யாத்திரையை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரை ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில் புதிய யாத்திரை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கில் குஜராத்தில் இருந்து கிழக்கே அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்யும் புதிய யாத்திரையை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில், பாரத்…

மேலும்...
Sonia Gandhi

மீண்டும் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியின் பெயர் பரிந்துரை!

புதுடெல்லி (14 செப் 2022): காங்கிரஸின் தலைவராக சோனியா காந்தியின் பெயரை பரிந்துரைக்க அனைத்து மாநில காங்கிரஸ் பிரிவுகளும் தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதேச காங்கிரஸ் கமிட்டி, சோனியா காந்தியை தலைவர் பதவிக்கு இம்மாதம் 20ஆம் தேதிக்குள் முன்னிறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெறுகிறது….

மேலும்...

51 தலைவர்கள் விலகல் – காஷ்மீரில் காலியாகும் காங்கிரஸ்!

ஜம்மு (30 ஆக 2022): குலாம் நபி ஆசாத்தின் விலகலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 51 தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விளக்கியுள்ளனர். காங்கிரஸ் முத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரசிலிருந்து விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது காங்கிரஸ் கட்சியை துவழச் செய்தது. இந்நிலையில் காஷ்மீரின் 51 தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விளக்கியுள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் ஆசாத்தின் புதிய கட்சியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக கட்சியில் இருந்து…

மேலும்...

பாஜகவைக் கை கழுவும் எடப்பாடி – அதிர்ச்சியில் பாஜக!

சென்னை (24 ஜூன் 2022) : அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராகுல் காந்தியுடன் எடப்பாடி ரகசியமாக பேசியுள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதனை இரு தரப்பினரும் இன்னும் உறுதிபடுத்தவில்லை. மேலும் அ.தி.மு.க. தொண்டர்களின் ஒற்றை தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் நிறைவேற்ற முடியாமல் போனதை, தனக்கு ஏற்பட்ட தோல்வியாக எடப்பாடி கருதுகிறார். ஓபிஎஸ்-ஐயே பாஜக விரும்புகிறது…

மேலும்...

பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைய மறுப்பு!

புதுடெல்லி (26 ஏப் 2022): பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரசில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவர் காங்கிரசில் இணைய மறுத்துவிட்டார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பிரசாந்த் கிஷோருடனான நீண்ட ஆலோசனைக்கு பிறகு, அதிகாரம்மிக்க குழு ஒன்றை அமைத்த காங்கிரஸ் தலைவர் சோனியா, அக்குழுவின் ஒரு பகுதியாக கட்சியில் சேர அவருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அதனை ஏற்க பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார். இவ்வாறு…

மேலும்...

திமுகவை எதிர்த்து போராட காங்கிரஸ் முடிவு!

ஸ்ரீபெரும்புதுார் (01 ஏப் 2022): பேரூராட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்காத திமுகவை எதிர்த்து காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு போராட திட்டமிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.,- – ஆறு; சுயேச்சை – நான்கு; அ.தி.மு.க.,- – மூன்று; பா.ம.க.,- மற்றும் காங்.,- தலா ஓரிடம் வென்றன.தி.மு.க., தலைமை கழகம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி தலைவர் பதவியை, காங்.,குக்கு ஒதுக்கியது. கடந்த 2ம் தேதி நடந்த தலைவர் தேர்தலில் தி.மு.க., உத்தரவை மீறி, தி.மு.க.,வைச்…

மேலும்...

ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்த காங்கிரஸ் தலைவர் சித்து!

புதுடெல்லி (17 மார்ச் 2022): 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததையடுத்து, காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான சிறிது நேரத்தில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். 5 மாநிலங்களில் ஏற்பட்ட மோசமான தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர்களை இராஜினாமா செய்யுமாறு சோனியா காந்தி கேட்டுக் கொண்டார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை இராஜினாமா செய்த அடுத்த நாள்,…

மேலும்...
Sonia Gandhi

ராஜினாமா செய்கிறாரா சோனியா காந்தி? – இன்று பரபரப்பு விவாதம்!

புதுடெல்லி (13 மார்ச் 2022): ஐந்து மாநில தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெறுகிறது. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், தேர்தலில் பெற்ற தோல்விக்கான காரணங்கள் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வரும்நிலையில், அவரால் தீவிரமான தேர்தல் பணிகளை செய்ய…

மேலும்...