பூஸ்டர் தடுப்பூசி – இன்று ஆலோசனை!

புதுடெல்லி (06 டிச 2021): இந்தியாவில் கொரோனாவிற்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்தியாவில் கொரோனா ரைவஸ் தொற்றுக்கு எதிராக இரண்டு டோஸ்கள் கொண்ட கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை எதிர்த்து போராட இரண்டு டோஸ்கள் போதுமானது என்று வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இரண்டாவது அலையில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளன. ஆனால், இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி…

மேலும்...

இந்தியாவிலிருந்து சவூதி அரேபியாவிற்கு ஏற்றுமதியாகும் கொரோனா தடுப்பூசி!

புதுடெல்லி (26 ஜன 2021): சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), சவுதி அரேபியாவுக்கு 3 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா  (AstraZeneca) கோவிட் -19 தடுப்பூசி அளவுகளை பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் சார்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து கொரோனா தடுப்புசிகளை தயாரித்து வருகிறது. இந்நிலையில் “பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் சார்பாக கொரோனா தடுப்புசிகளை சவூதி அரேபியாவிற்கு ஒருவாரத்தில் ஏற்றுமதி செய்யப்படும்.” என தன் தலைமை நிர்வாகி திங்களன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்….

மேலும்...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

சென்னை (20 ஜன 2021): தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கூறுகையில், “நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நான் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளப் கொள்கிறேன். ஒரு அமைச்சராக இல்லாமல் மருத்துவராக, ஐ எம் ஏ உறுப்பினராக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன். மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில் நானே கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள உள்ளேன்” என்று…

மேலும்...

கொரோனா தடுப்பூசி யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது? -பாரத் பயோடெக் விளக்கம்!

புதுடெல்லி (19 ஜன 2021): பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை யார் பயன்படுத்தலாம், யார் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்கள் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவரை அணுகிய பின்னரே தடுப்பூசி போட வேண்டும்.  கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் இந்தத் தடுப்பூசியை பயன்படுத்தக்கூடாது. மற்றொரு கோவிட் தடுப்பூசி பெற்றவர்கள் கோவாசின் எடுத்துக் கொள்ளக்கூடாது. தடுப்பூசி நாடு முழுவதும் விநியோகிக்கத் தொடங்கியதிலிருந்து தடுப்பூசி பெற்றவர்களில் சிலர், சில பக்கவிளைவுகளைச் சந்தித்ததாக வெளியான தகவல்களுக்கு…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்களுக்கும், கோவிட் 19 தடுப்பூசி போடுவதில் முக்கியத்துவம்!

துபாய் (12 ஜன 2021): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோவிட் தடுப்பூசி வழங்குவதில் இந்தியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அழைப்புகள் கொடுக்கப்படுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய சங்கங்களும் கோவிட் தடுப்பூசி விநியோகத்தில் இந்தியர்களுக்கு உதவி வருகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டினர் உட்பட அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் கோவிட் தடுப்பூசி பெறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் தடுப்பூசி வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.

மேலும்...

மோடி அமைச்சரவையில் உள்ளவர்கள் முதலில் கோவேக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் – தலைவர்கள் கோரிக்கை!

புதுடெல்லி (04 ஜன 2021): கோவேக்சின் கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை கட்டங்கள் முடிவடையாமல் மக்களுக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இரண்டு கட்ட சோதனை மட்டுமே முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட சோதனை முடிவடைவதற்கு முன்னர் தடுப்பூசியை நடைமுறைப்படுத்த மோடி அரசாங்கத்தின் அவசர நடவடிக்கைக்கு எதிராக முக்கிய புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன, இது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கோவேக்சின் தடுப்பூசி ஒப்புதலுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சஷி தரூர் எம்.பி. கூறுகையில், கோவாக்ஸின்…

மேலும்...

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி என்ற பெயரில் சைபர் மோசடி!

லக்னோ (01 ஜன 2021): கோவிட் தடுப்பூசிக்கான பதிவு என்ற பெயரில் சைபர் மோசடியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் எனவே ஆதார் எண் ஒடிபி போன்ற எந்த தகவலையும் போலி தொலைபேசி மூலம் கேட்பவர்களிடம் கொடுக்கக் கூடாது என்று உபி அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கோவிட் நோய்க்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு இன்னும் கொண்டு வரவில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் சைபர் கிரைமிற்கு பலியாகலாம் என்றும் தடுப்பூசி பதிவுக்கு எந்த…

மேலும்...

ஒரு ஹேப்பி நியூஸ் – உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு வழங்க அனுமதி!

லண்டன் (02 டிச 2020): பைசர் – பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனை நிகழ்த்திவரும் நிலையில் பைசர் – பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்துவதாக விஞ்ஞானிகள் உறுதி அளித்தனர். இந்த தடுப்பூசி 95 சதவீதம் பலனளிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. லண்டன்: பிரிட்டனில்…

மேலும்...

நம்பிக்கை அளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து – ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை!

புதுடெல்லி (27 மே 2020): கொரோனா பரவல் மற்றும் இந்திய பொருளாதாரம் குறித்து ராகுல் காந்தி முக்கிய வல்லுநர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் ஹார்வோர்ட் குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட் இயக்குநர் அஷீஷ் ஷாவுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனாவிற்கான தடுப்பு மருந்து குறித்து ராகுல் காந்தியிடம் பேசிய அஷீஷ் ஷா, கொரோனா தடுப்பில் மூன்று தடுப்பு மருந்துகள் நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இவை சீனா மற்றும் ஆக்ஸ்போர்ட் ஆகியவற்றில் தயாரிக்கும்…

மேலும்...

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை – திங்கள் முதல் தொடக்கம்!

வாஷிங்டன் (16 மார்ச் 2020): கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை அமெரிக்காவில் திங்கள் முதல் தொடங்கியது. உலகை ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்காவும், சீனாவும் தடுப்பு ஊசி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் ஆரம்ப நிலை தடுப்பு ஊசி மருந்து கண்டறியப்பட்டு முதல் தடுப்பு ஊசி மருந்து சோதனை திங்கள்கிழமை அமெரிக்காவில் பரிசோதிக்கப்படும் என்ற தகவலை அசோசியேட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரிகள்…

மேலும்...