ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (16 ஜூலை 20222): முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மேலும்...

கொரோனாவோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது ஏன் – கமலுக்கு சுகாதாரத்துறை கேள்வி!

சென்னை (07 டிச 2021): கொரோனா சிகிச்சைக்குப்பின் நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது குறித்து கமலுக்கு சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பவுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருக்கிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், சில…

மேலும்...

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

சென்னை (22 நவ 2021): நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

மேலும்...

இந்தியாவில் 15 நாட்களில் 110 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (16 மார்ச் 2020): கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் அதிக அளவில் மிரட்டி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 110 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 93 நோயாளிகள் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர். இதில் 13 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர். இரண்டு பேர்…

மேலும்...

கொரோனா பாதித்த மாநில பேரிடராக கேரளா அறிவிப்பு!

திருவனந்தபுரம் (03 பிப் 2020): கொரோனா வைரஸ் தாக்குதலை மாநில பேரிடராக மாநில கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உருவானது. அந்த வைரஸ் சீனா மட்டுமின்றி, 27 நாடுகளுக்கு வேகமாகப் பரவியுள்ளது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, 361 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை, கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது….

மேலும்...

கொரோனா வைரஸ்: 6000 பேர் பாதிப்பு – 132 பேர் பலி!

பீஜிங் (29 ஜன 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 132 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 6000 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் உள்ள மக்களிடையே இந்த வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸைத் தடுப்பது…

மேலும்...

அமெரிக்காவிற்குள் நுழைந்த ஆபத்து!

நியூயார்க் (22 ஜன 2020): மனிதர்கள் மூலம் பரவும் ஆட்கொல்லி வைரஸ் காரணமாக சீனாவில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்த சூழலில், அந்த வைரஸ் பாதிப்பு அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் ஒன்று தற்போது சீனாவில் பரவ ஆரம்பித்துள்ளது. சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ள இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் கடும் அச்சம்…

மேலும்...