தமிழகத்தில் இன்று புதிதாக 776 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (21 மே 2020): தமிழகத்தில் இன்று புதிதாக 776 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார் . அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 776 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 689 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள். எஞ்சியோர் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர் ஆகும். இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ்…

மேலும்...

டெல்லியிலிருந்து வந்த தப்லீக் ஜமாத்தினருக்கு கொரோனா தொற்று இல்லை!

திருநெல்வேலி (21 மே 2020): டெல்லியிலிருந்து தமிழகம் வந்த தப்லீக் ஜமாத்தினருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியான நிலையில் நெல்லையில் அவர்கள் சொந்த வீடுக:ளுக்குச் சென்றனர். தமிழகத்திலிருந்து டெல்லி சென்ற தப்லீக் ஜமாத்தினர் நாடுதழுவிய ஊரடங்கால் சொந்த மாநிலம் வரமுடியாமல் தவித்தனர். அவர்கள் தமிழக இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை அடுத்து, தமிழக அரசின் முயற்சியில் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் நெல்லியில் நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தங்கவைக்கப்பட்டிருந்த தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்று இல்லை…

மேலும்...

உள்நாட்டு விமானங்களில் பயணம் மேற்கொள்ள ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்!

புதுடெல்லி (21 மே 2020): உள்நாட்டு விமான சேவை வரும் 25-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பயணிகளுக்கான நடைமுறைகளை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. பயணிகளுக்கு ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல், பெரும்பாலான விமானங்கள், விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது உள்நாட்டு விமான போக்குவரத்து வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்‍கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

மேலும்...

உள்நாட்டு விமான கட்டணம் 10 ஆயிரம் வரை அதிகரிப்பு!

புதுடெல்லி (21 மே 2020): இந்தியாவில் உள் நாட்டு விமான கட்டணம் 10 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்காம் கட்ட பொது முடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்ட பொது முடக்கத்தில் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. நோய் கட்டுப்பாட்டு அளவைப் பொறுத்து பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொது முடக்கம்…

மேலும்...

இந்தியாவின் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைளை கண்டித்து அமெரிக்க செயிண்ட் பால் நகரசபை தீர்மானம்!

வாஷிங்டன் (21 மே 2020): இந்தியாவின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளை கண்டித்து அமெரிக்க செயிண்ட் பால் நகரசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் மிகைத்து நிற்கும் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் உலக அளவில் பேசுபொருளாக உள்ளது. சமீபத்தில் கொரோனா பரவலில் இஸ்லாமியர்களை மையப்படுத்தி காய் நகர்த்திய இந்திய அரசின் நடவடிக்கைகள் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் குடியுரிமை சட்டம், முத்தலாக் சட்டம் என எல்லாவகைகளிலும் முஸ்லிம்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். இந்நிலையில் இவை அரபு நாடுகளின் பார்வைக்குச்…

மேலும்...

கொரோனா ரணகளத்திலும் அமெரிக்காவில் நடக்கும் அரசியல் அக்கப்போர்!

வாஷிங்டன் (21 மே 2020): கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை சாப்பிடுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பது அமெரிக் அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட பல நாடுகள் இம்மருந்தை பரிந்துரைக்கின்றன. இந்த மாத்திரையை அதிகளவில் உற்பத்தி செய்யும் இந்தியாவை மிரட்டி, லட்சக்கணக்கான மாத்திரைகளை அமெரிக்கா…

மேலும்...

பாஜக பெண்களை மதிக்கும் கட்சி – தமிழக பாஜக தலைவர் கருத்து!

சென்னை (21 மெ 2020): பாஜக பெண்களை மதிக்கும் கட்சி என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முருகன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இதுவரை 35 லட்சம் மோடி கிட்வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் முகக்கவசம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஏற்கனவே 35 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது, மேலும் 1 கோடி பேருக்கு வழங்க தயார் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் 1.75 லட்சம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 21…

மேலும்...

நீ முஸ்லிம் என்று நினைத்து அடித்தோம் – கா(வி)வல்துறையின் மத துவேஷ பதில்!

போபால் (20 மே 2020): காவல்துறையில் ஊடுருவியுள்ள காவிகளை அடையாளம் காட்டியுள்ளது இன்னொரு சம்பவம். மத்திய பிரதேசத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட தீபக் பந்துலே என்ற வழக்கறிஞரிடம் மன்னிப்பு கேட்டுள்ள போலீசார், “உங்களை முஸ்லிம் என்று நினைத்து தாக்குதல் நடத்தினோம்” என்று மத துவேஷத்துடன் காரணம் கூறியுள்ளது. இதுகுறித்து கூறிய தீபக் பந்துலே கூறியிருப்பதாவது: “நான் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி மத்திய பிரதேசம் பிதுல் பகுதியில் மருந்துப் பொருட்கள் வாங்க மருந்து கடைக்கு சென்றேன்….

மேலும்...

அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

சென்னை (20 மே 2020): கல்வி அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டலின், “கொரோனா பாதிப்பு சீராகி இயல்புநிலை திரும்பும்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும். கல்வி…

மேலும்...

உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு தலைவரகிறார் அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!

புதுடெல்லி (20 மே 2020): உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்‍குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தன், நாளை மறுதினம் பதவியேற்கிறார். உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்‍ குழு தலைவராக தற்போது, ஜப்பானை சேர்ந்த மருத்துவர் ஹிரோகி நகாதனி இருந்து வருகிறார். இந்நிலையில், புதிய தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தனை நியமிக்‍க, 130 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நாளை மறுதினம் நடைபெறவுள்ள உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்‍குழு…

மேலும்...