சென்னை டிஜிபி அலுவலகத்தில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (06 மே 2020): சென்னை டிஜிபி அலுவலகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்தில், துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர், தொழில்நுட்ப பிரிவில் ஒருவர், உளவுத்துறை கட்டுப்பாட்டு அறையில் 2 பேர், மோட்டார் வாகன பிரிவில் ஒருவர் என 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டிஜிபி அலுவலகத்தில் இன்று மட்டும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், டிஜிபி அலுவலகத்தில்…

மேலும்...

இந்தியாவில் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விசாக்களும் ரத்து!

புதுடெல்லி (06 மே 2020): இந்தியா வருவதற்காக வெளிநாட்டினருக்‍கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விசா அனுமதிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், தூதரகப் பணிகள், அலுவல்பூா்வ பணிகள், ஐ.நா.சா்வதேச அமைப்புகளின் பணிகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சில பிரிவுகள் தவிர, இதர பிரிவுகளில் வழங்கப்பட்டிருந்த அனைத்து விசா அனுமதிகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்தியாவில் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கும் வரை இந்த விசா அனுமதி ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரம்,…

மேலும்...

பிளாஸ்மாவை தானம் செய்வதற்காக நோன்பை முறித்த 150 தப்லீக் ஜமாஅத்தினர்!

புதுடெல்லி (06 மே 2020): கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை தானம் செய்வதற்காக 150 தப்லீக் ஜமாஅத்தினர் ரம்ஜான் நோன்பை முறித்துக் கொண்டுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மாற்று முறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒருமுறை பிளாஸ்மா சிகிச்சை முறை. இதற்கு பிளாஸ்மா தானம் செய்ய, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த தப்லீக் ஜமாஅத்தினர் அதிக அளவில் முன்வந்துள்ளனர்….

மேலும்...

தமிழகத்தை அதிர வைக்கும் கொரோனா – இப்போதைக்கு இதுதான் சிங்கிள் சோர்ஸா?

சென்னை (06 மே 2020): தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதுவரை 600க்கும் அதிகமானோருக்கு கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவி உள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலோனோர் கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில்…

மேலும்...

சென்னையில் அனைத்து கடைகளையும் திறக்க மாநகராட்சி அனுமதி!

சென்னை (06 மே 2020): சென்னையில் நாளை அனைத்து தனிக் கடைகளையும் திறக்க சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் ஒருபுறம் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்க, இந்தியாவில், 42 ஆயிரத்து, 533 பேர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில், 11 ஆயிரத்து, 706 பேர், குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்; 1,373 பேர் பலியாகி உள்ளனர்.கடந்த, 24 மணி நேரத்தில், 1,074 பேர், குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைவோர் விகிதம், 28 சதவீதமாக உயர்ந்துள்ளது….

மேலும்...

அறிகுறியின்றி கொரோனா பாதித்தவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை – தமிழக அரசு முடிவு!

சென்னை (05 மே 2020): அறிகுறியின்றி கொரோனா பாதித்தவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகிறது. இதனால் கொரோனா தீவிரம் குறைவாக உள்ள நபர்கள் மற்றும் அறிகுறி இல்லாமல்…

மேலும்...

எங்கள் மீது மலர் தூவ வேண்டாம் உணவு கொடுங்கள் – மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை!

புதுடெல்லி (05 மே 2020): எங்கள் மீது மலர்கள் தூவ சொல்லி கேட்கவில்லை உணவு தந்தால் போதும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் பணியாளர்களும் மத்திய அரசுக்‍கு கோரிக்கை விடுத்துள்ளனர். ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்புடைய மருத்துவர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்களுக்‍கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தாங்கள் தங்கவைக்‍கப்பட்டுள்ள இடம், சுகாதாரமற்று இருப்பதாகவும்,…

மேலும்...

மே 7ஆ, தேதி மதுபானக் கடைகள் திறக்கப்படுமா?

சென்னை (05 மே 2020): தமிழகத்தில் வரும் 7-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அன்று கடைகள் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு, மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நிபந்தனைகளுடன் வரும் 7-ம் தேதி முதல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது….

மேலும்...

கோதுமை பாக்கெட்டுக்குள் பணம் வைத்தேனா? – நடிகர் அமீர்கான் விளக்கம்!

புதுடெல்லி (05 மே 2020): கோதுமை பாக்கெட்டுக்குள் பணத்தை வைத்து ஏழைகளுக்கு உதவியதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திக்கு நடிகர் அமீர்கான் மறுப்பு தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் உணவுக்கு பெரிதும் திண்டாடுகின்றனர். இந்நிலையில் நடிகர் சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவியது. அதில் கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ 15000 ரூபாய் வைத்திருப்பதாக அந்த செய்தியில் விளக்கப்பட்டது. மேலும் இதனை நடிகர் அமீர்கான் தான் செய்தார் என்றும் தகவல் பரவியது….

மேலும்...

கொரோனா வைரஸ் – ராகவேந்திரா மண்டபம் குறித்து ரஜினி கூறியது என்ன?

சென்னை (04 மே 2020): சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்கு தரமுடியாது என்று கூறியதாக வெளியான தகவலுக்கு ரஜினி விளக்கம் அளித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பராமரிப்பு பணியால் மண்டபத்தை தர முடியாது என கூறியதாக தவறான தகவல் பரவுகிறது எனவும் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார்,…

மேலும்...