தமிழகத்துக்கு இது மிகப்பெரிய ஆறுதல்!
சென்னை (24 ஏப் 2020): தமிழகத்தில் கொரோனாவிலிருந்து நிவாரணம் பெற்று வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது. அதேசமயம் நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரில் பலர் குணமடைந்து வீடு திரும்புவது ஆறுதல் அளிக்கிறது. தமிழகத்திலும் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் பலர் குணமடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாக குணமடைந்தோர் விகிதம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில்…