சேதமடைந்த மெரீனா மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை இன்று மீண்டும் திறப்பு!

சென்னை (16 டிச 2022): புயலால் சேதமான மெரீனா மாற்றுத் திறனாளிகள் மரப்பாதை மறு சீரமைக்கப்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் திறக்கப்படுகிறது. ரூ.1.14 கோடி செல்வில் அமைக்கப்பட்ட இந்த பாதை நவம்பர் 27ல் திறக்கப்பட்டது. இது சமீபத்தில் ஏற்பட்ட மாண்டோஸ் புயல் காரணமாக ஒரு பகுதி சேதமடைந்தது. இந்நிலையில் சீரமைப்புப் பணிக்காக மரப்பாதை வழி மூடப்பட்டு சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து இன்று இந்த மரப்பாதை மீண்டும் திறக்கப்படுகிறது.

மேலும்...

மொபைலைக் கீழே வைக்க முடியவில்லை – பாராட்டுகள் குவிகின்றன: முதல்வர் ஸ்டாலின்!

சென்னை (11 டிச 2022): “மாண்டஸ் புயலை திறமையாகக் கையாண்டதாக, அரசுக்கு பாராட்டுகள் குவிகின்றன” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:- “இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக நடந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறீர்கள். புயலுக்கு அரசு எடுத்த நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர். ஆட்சிக்கு வந்தபோது கொரோனா-வின் தாக்கம் இருந்தது. அதில் இருந்து மீண்டோம். அன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மட்டும் சுகாதாரத்துறை அமைச்சர்…

மேலும்...

மாண்டஸ் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் – VIDEO

சென்னையை புரட்டிப் போட்ட மாண்டஸ் புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.

மேலும்...

சென்னையை புரட்டிப் போட்ட மாண்டஸ் புயல் – VIDEO

சென்னை (10 டிச 2022): சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலி உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்ற நிலையில், இரவில் தீவிர புயலாகவும் மாறி மிரட்டியது. தொடர்ந்து வங்க கடல் பகுதியில் நேற்று காலை வரை நிலைக்கொண்டு இருந்தது. இந்த சூழலில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத்…

மேலும்...

அடிக்குது புயல் – வெளுக்குது மழை!

சென்னை (09 டிச 2022): சென்னை அருகே 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல். மாண்டஸ் புயலால் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பல்லாவரம், ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, வாலாஜாபாத், மாம்பலம்,…

மேலும்...

தீவிரமடையும் மாண்டஸ் புயல்!

சென்னை (09 டிச 2022): மாண்டஸ் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவுக்கு பிறகு தீவிர புயலாக வலுப்பெற்றது. இது இன்று காலை வரை தீவிர புயலாக இருந்து, பின்னர் மீண்டும் புயலாக வலுவிழந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கும். இதனை தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது…

மேலும்...

மாண்டஸ் புயல் – 251 நிவாரண மையங்கள் தயார்: தஞ்சை கலெக்டர் தகவல்!

தஞ்சாவூர் (08 டிச 2022): தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக வலுப்பெற்று வட தமிழக கடற்கரைக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளதால் 3 நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை…

மேலும்...

தீவிரமாக மாறும் மாண்டஸ் புயல்!

சென்னை (08 டிச 2022): நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு புயலாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இன்று காலை 0830 மணி நிலவரப்படி, காரைக்காலுக்கு 460 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கே மற்றும் சென்னைக்கு 550 கி.மீ. தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம்-புதுவை-தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 9ம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கக்கூடும்…

மேலும்...