கொரோனா வைரஸுக்கு இந்தியாவில் இரண்டாவது மரணம்!

புதுடெல்லி (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் மேலும் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். ஏற்கெனவே, கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்காகத் டெல்லியில் சிகிச்சை பெற்றுவந்த 69 வயதான ஒரு பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது. சீனாவில் மட்டுமே பரவி வந்த கரோனா வைரஸ், தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் தீவிரமாகப் பரவி…

மேலும்...

கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர் வீட்டுக்கு அருகில் வசித்தவர் திடீர் மரணம்!

கோட்டயம் (13 மார்ச் 2020): கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர் வீட்டுக்கு அருகில் வசித்தவர் வெள்ளிக்கிழமை அன்று திடீரென மரணம் அடைந்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரை கொரோனா வைரஸ் கேரளாவில்தான் முதலில் பரவியது. அந்த வகையில் தற்போது கேரளாவில் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது இப்படியிருக்க கோட்டயத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வீட்டுக்கு அருகில் வசித்த ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) திடீரென மரணம் அடைந்துள்ளார்….

மேலும்...

கொரோனா வைரஸால் இந்தியாவில் முதல் மரணம்!

பெங்களூரு (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் முதல் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் மொஹம்மது ஹூசைன் சித்திக் சிகிச்சைப் பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த மொஹம்மது ஹூசைன், ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவரது சளி மாதிரி பெங்களூருவில் உள்ள மருத்துவ ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தெலங்கானா அரசும் உறுதி செய்துள்ளது….

மேலும்...

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 அக உயர்வு!

நியூயார்க் (11 மார்ச் 2020): அமெரிக்கா முழுவதுமாக கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் கரோனா கொரோனா வைரஸ் (கோவிட் -19)தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஐ எட்டியுள்ளதாக வாஷிங்டன் நல்வாழ்வுத் துறை உறுதிப்படுத்தியுள்ளனர், இதையடுத்து அமெரிக்கா முழுவதுமாக கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதன்முதலாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்டறிப்பட்டார். அதிலிருந்து இதுவரை வாஷிங்டன்…

மேலும்...

கர்நாடகம் சென்ற தமிழகத்தை சேர்ந்த 10 பேர் விபத்தில் பலி!

கிருஷ்ணகிரி (06 மார்ச் 2020): கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தாலா கோயிலுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 10 பக்தர்கள் விபத்தில் பலியாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீக்கணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10 பேர் காரில் கர்நாடகத்தின் தர்மஸ்தாலா கோயில் சென்றிருந்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் அனைவரும் காரில் நள்ளிரவு தமிழகம் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த கார் தும்கூர் அருகே குனிகல் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதியது….

மேலும்...

டெல்லி இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு!

புதுடெல்லி (05 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி வழி போராட்டத்தில் இனப்படுகொலையாளர்கள் புகுந்து போராட்டத்தை வன்முறையாக மாற்றினர். இதனால் டெல்லி போர்க்களமானது. பலரது வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்நிலையில் இந்த வன்முறையில் 53 பேர் உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 44 பேர் இறந்ததாக தகவல் வெளியானது. எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர்…

மேலும்...

அமெரிக்காவில் அமேஸான் ஊழியருக்கு கரோனோ வைரஸ் – சியாட்டிலில் 9 பேர் பலி!

அமெரிக்காவில் சியாட்டில் நகரில் உள்ள அமேஸான் நிறுவன ஊழியரை கரோனோ வைரஸ் தாக்கியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் தன் ஊழியர்களுக்குத் தகவல் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி, உடல்நலம் சரியில்லை என்று அந்த ஊழியர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அதன் பிறகு அவர் வேலைக்கு வரவில்லை. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரை COVID-19 கரோனோ வைரஸ் தாக்கியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். இத்தகவல் மார்ச் 3ந் தேதி எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று அத்தகவல் கூறுகிறது. தடுப்புக்காப்பில் உள்ள அந்த ஊழியருக்குத் தேவையான…

மேலும்...

அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு 6 பேர் பலி!

வாஷிங்டன் (03 மார்ச் 2020): அமெரிக்காவின் வாஷிங்டனில் கொரோனா வைரஸுக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் நான்கு பேர் உயிரிழந்ததாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனாவால் மேலும் பலர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எந்த விதமான சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறி…

மேலும்...

கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் ஒருவர் பலி!

வாஷிங்டன் (01 மார்ச் 2020): அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் ஹூபெய் மாகாணத்தின் வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. இந்த வைரஸ், அண்டார்டிகா தவிர மற்ற அனைத்து கண்டங்களுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில், நேற்று வரை 2,835 பேர் உயிரிழந்துள்ளனர். 79,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமல்லாமல் பல நாடுகளில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. ஈரானையும் இந்த வைரஸ் அதிக…

மேலும்...

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆக உயர்வு!

புதுடெல்லி (27 பிப் 2020): டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 34 ஆக உயர்ந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இந்நிலையில் தற்போதைய தகவல்படி இந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது….

மேலும்...