திமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் நீக்கம் – அன்பழகன் அதிரடி நடவடிக்கை!

சென்னை (04 பிப் 2020): திமுகவின் முக்கிய நிர்வாகிகளை நீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாள அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, அவர் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் நியமிக்கப்படுகிறார். தேர்தல் பணிக் குழுச் செயலாளராக இருந்த டி.எம். செல்வகணபதி அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். மாவட்டப்…

மேலும்...

குடியுரிமை சட்டம் நிறைவேற அதிமுகவும் பாமகவுமே காரணம் – ஸ்டலின்!

சென்னை (02 பிப் 2020): குடியுரிமை சட்டம் நிறைவேற அதிமுகவும் பாமகவுமே காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிக்காய் குடிமக்கள் பதிவேடு ஆகிவற்றுக்கு எதிரான ஒருகோடி கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இன்று கையெழுத்திட்டுத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் உரையாற்றுகையில், தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்…

மேலும்...

மத்திய பட்ஜெட் திருப்தியில்லை – ஸ்டாலின் அறிக்கை!

மத்திய அரசின் பட்ஜெட்டில் திருப்தியில்லை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: மத்திய பா.ஜ.க அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை ”பொருளாதார தேக்க நிலைமை”, “கிராமப்புறப் பொருளாதார வீழ்ச்சி”, “கிராமப்புற மக்களின் வருவாய்”, “வேலைவாய்ப்பின்மை” உள்ளிட்ட மிக முக்கியப் பிரச்சினைகள் குறித்துக் கிஞ்சித்தும் கவலை இல்லாமல், பா.ஜ.க விரும்பும் கலாச்சாரத் திணிப்பைச் செய்யும் ஒரு நிதிநிலை அறிக்கையாக இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது….

மேலும்...

திருமண விழாவில் பிறந்தநாள் – அசரடித்த அழகிரி!

மதுரை (30 ஜன 2020): முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேற்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடினார். திமுக ஆட்சியில் இருந்தபோது அவரது பிறந்த நாளன்று, மதுரையே திருவிழா கோலம் பூண்டிருக்கும். அவரது ஆதரவாளர்கள், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழகிரியையும், அவரது குடும்பத்தினரையும் மதுரை ராஜாமுத்தையா மன்றத்திற்கு அழைத்து வந்து பிறந்த நாள் விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாடுவார்கள். மு.க.அழகிரி, கேக் வெட்டி, நலிவடைந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவார். விழாவில் கலந்து கொண்டோருக்கு…

மேலும்...

கற்பனையை மிஞ்சும் மோசடி – ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை (29 ஜன 2020): குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தாவிட்டால், தி.மு.க இளைஞரணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கியில் கூறியிருப்பதாவது: “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில், “தரகர்களின்” புகலிடமாக மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. “குரூப்-4 தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள்” வெளிச்சத்திற்கு வந்து, அதன் காரணமாக, தமிழக…

மேலும்...

பாஜகவின் மதவெறிக்கு எதிராக ஸ்டாலின் கடிதம்!

சென்னை (28 ஜன 2020): குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும் என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்கிற அதிகார ஆணவத்தினால் இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உடைக்கும் வகையில் மொழி-பண்பாடு-இனம்-மதம் எனப் பல தளங்களிலும்…

மேலும்...

ஆசை பட்டவர்களுக்கு பதவியில்லை – அதிருப்தியில் உடன்பிறப்புக்கள்!

திமுக முதன்மை செயலாளர் பதவி கே.என்.நேருக்கு வழங்கப்பட்டதால் திமுக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். தலைமைக் கழக முதன்மைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் டி.ஆர்.பாலு, நாடாளுமன்றக் குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருவதால் அவருக்குப் பதிலாகத் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்குச் சென்றவருடன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேடப்பட்டி முத்தையா மகன் மணிமாறன், மதுரை மூர்த்தி உட்பட…

மேலும்...

திமுகவில் டி.ஆர் பாலு திடீர் போர்க்கொடி – படு அப்செட்டில் ஸ்டாலின்!

சென்னை (27 ஜன 2020): டி.ஆர் பாலுவின் நடவடிக்கைகளால், திமுக தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருக்கும் டி.ஆர்.பாலு, தலைமைக் கழக முதன்மைச் செயலாளராகவும் இருந்தார். ஆனால் இரு பதவிகளில் இருப்பது சரியானதல்ல என்று கே.என்.நேருவுக்கு அறிவாலயப் பதவி கொடுக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவியை திமுகவுக்கு வழங்க பாஜக முன்வந்துள்ளது. ஆனால் அதனை ஏற்க ஸ்டாலின் தயாராக இல்லை. காரணம், ஏற்கெனவே பி.ஜே.பி அரசு கொண்டுவந்துள்ள…

மேலும்...

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு காரணம் மோடிதான் – உதயநிதி ஸ்டாலின்!

சென்னை (27 ஜன 2020): நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற மோடியும் டாடியும் என்று தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஆவடியில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி, ” நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., பெரிய அளவில் வெற்றி பெற என் பிரசாரம் பெரிய அளவில் உதவியது. ஆனால் அது என்னுடைய வெற்றி இல்லை. அதற்கு காரணம் இருவர்….

மேலும்...

13 வருடங்கள் என்ன செய்தீர்கள்? – ஸ்டாலினுக்கு எடப்பாடிகேள்வி!

சென்னை (26 ஜன 2020): 13 வருடங்கள் மத்தியில் இருந்து தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? என்று ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். மொழிப் போர் தியாகிகளுக்கான நினைவுப் பொதுக்கூட்டம் சென்னையில் அதிமுக சார்பாக நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது- அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு பாஜகவின் அடிமை அரசு என்று செல்லும் இடமெல்லாம் ஸ்டாலின் சொல்லி வருகிறார். அப்படியல்ல….

மேலும்...