மொராக்காவை தாண்டி யாரும் இல்லை – மொராக்கோ கால்பந்து அணிக்கு துபாய் ஆட்சியாளர் வாழ்த்து!

தோஹா (11 டிச 2022): கத்தார் உலகக் கோப்பையின் அரையிறுதியில் போர்ச்சுக்கலை வீழ்த்திய மொராக்கோ அணியின் வீரர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில். “உலகக் கோப்பையில் மொராக்கோவைத் தாண்டி யாரும் இல்லை. அனைத்து அரேபியர்களுக்கும் வாழ்த்துக்கள். மொராக்கோவின் சிங்கங்கள் அரபுக் கனவை நனவாக்குகின்றன” என்று ஷேக் முகமது ட்வீட் செய்துள்ளார்.  

மேலும்...

துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு!

துபாய் (10 டிச 2022): கேரளாவிலிருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பி737-800 விமானம் கேரள மாநிலம் காலிகட்டில் இருந்து சென்றது. சனிக்கிழமை துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில் விமானத்தின் சரக்குக் கிடங்கில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது, இதனை அடுத்து பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். மேலும் விமான ஒழுங்குமுறை டிஜிசிஏ சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….

மேலும்...

துபாயில் பிச்சை எடுத்தல் மற்றும் சட்டவிரோத வர்த்தகம்; 2100 பேர் கைது!

துபாய் (14 செப் 2022): துபாயில் பிச்சை எடுத்ததற்காகவும் சட்டவிரோதமாக வியாபாரம் செய்ததற்காகவும் 2100 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை துபாய் காவல்துறை வெளியிட்டுள்ளது. இதன்போது, ​​796 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 1,287 சட்டவிரோத வீதி வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். இதில் 414 பேர் போலீஸ் ஐ என்ற மொபைல் செயலி மூலம் சிக்கியுள்ளனர். சட்டவிரோத செயல்கள் கண்டறியப்பட்டால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் வழிமுறை போலீஸ்…

மேலும்...

துபாயிலிருந்து இந்தியா செல்பவர்களுக்கு அறிய வாய்ப்பு!

துபாய் (14 செப் 2022): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்கு தற்போது நல்ல வாய்ப்பு . விமான நிறுவனங்கள் மிகக் குறைந்த கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இந்தியாவுக்கான விமானக் கட்டணம் 300 திர்ஹம்களுக்குக் கீழே விமான நிறுவனங்கள் வசூலிக்கின்றன. கோடை விடுமுறை முடிந்து டிக்கெட் விலை கணிசமாக குறைந்துள்ளதாக டிராவல் ஏஜென்ட்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தீபாவளியையொட்டி இந்த மாத இறுதிக்குள் கட்டணம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு திரும்புவதற்கான…

மேலும்...

வளைகுடா நாடுகளை அதிர வைத்த திடீர் நில நடுக்கம்!

துபாய்(02ஜூலை 2022):ஈரானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் வளைகுடா நாடுகளில் உணரப்பட்டுள்ளது. சனிக்கிழமை அதிகாலை தெற்கு ஈரானில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின்படி, பந்தர் கமீர் அருகே அதிகாலை 1.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. இந்த நில நடுக்கம் ஐக்கிய அரபு அமிரகத்திலும் உணரப்பட்டது. துபாய், ஷார்ஜா, உம்முல் குவைன் மற்றும் அஜ்மான் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக…

மேலும்...

லுலு குழுமம் தமிழகத்தில் ரூ.3,500 கோடி முதலீடு – முதல்வர் ஸ்டாலினுடன் நடந்த பேச்சுவார்தையில் முடிவு!

துபாய் (28 மார்ச் 2022): கேரளாவைச் சேர்ந்த என்ஆர்ஐ தொழிலதிபர் எம்.ஏ.யூசுப் அலியின் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள லுலு குழுமம் தமிழகத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்யவுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துபாயில் நடைபெற்ற தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட குழுமத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.ஏ.யூசுப் அலி இதனைத் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நான்கு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை…

மேலும்...

முதல்வர் ஸ்டாலினுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கிய பிஎம்டபிள்யூ கார்!

துபாய் (25 மார்ச் 2022): தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு பிஎம்டபிள்யூ கார் வழங்கியுள்ளது. 4 நாள் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தனி விமானம் மூலம் நேற்று சென்று அடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி. இந்த உலகக் கண்காட்சி, துபாய்…

மேலும்...

உலகின் முதல் காகிதமற்றதாக மாறும் துபாய் அலுவலகங்கள்!

துபாய் (12 டிச 2021): துபாயில் அரசுத் துறை முற்றிலும் காகிதமற்றது என்று துபாயின் பட்டத்து இளவரசரும் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அறிவித்தார். துபாயை டிஜிட்டல் நகரமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக ஷேக் ஹம்தான் 2018 இல் காகிதமில்லா திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் ஐந்து கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. ஐந்தாவது கட்டத்தின் முடிவில், துபாயில் உள்ள 45 அரசுத் துறைகளும் காகிதமற்றவை. இதன் மூலம், இந்த…

மேலும்...

ஈரானில் இரட்டை நிலநடுக்கம் – துபாயில் கட்டிடங்கள் குலுங்கின!

துபாய் (14 நவ 2021): ஈரானில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தை அடுத்து துபாயில் சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகம் துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா மற்றும் அபுதாபியில் வசிப்பவர்கள் “இரண்டு முதல் மூன்று நிமிடங்கள்” நீடித்த நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பல கட்டிடங்கள் காலி செய்யப்பட்டன. ஜுமைரா லேக் டவர்ஸ், நஹ்தா, டெய்ரா, பர்ஷா, துபாய் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பார்க் மற்றும் டிஸ்கவரி கார்டன்ஸ் போன்ற சமூகங்களில்…

மேலும்...

மீலாது நபியை முன்னிட்டு துபாயில் இலவச பார்க்கிங் வசதி!

துபாய் (21 அக் 2021): மீலாது நபியை முன்னிட்டு முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவின் சில பகுதிகளில் இலவச பார்க்கிங். மல்டி லெவல் பார்க்கிங் வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை டெர்மினல்களைத் தவிர, பொது பார்க்கிங் இலவசமாக இருக்கும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. சாலை, நீர் போக்குவரத்து மற்றும் சேவை மையங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வெளியில் புறப்படுவதற்கு முன்பு இணையதளத்தில் மறுசீரமைக்கப்பட்ட நேரத்தை சரிபார்க்க வேண்டும்…

மேலும்...