ஆம் ஆத்மியால் குஜராத்தில் மண்ணை கவ்விய காங்கிரஸ்!

அகமதாபாத் (08 டிச 2022): : குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கியில் கால் பதித்ததால், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. முதல் கட்ட முடிவுகளின்படி ஆம் ஆத்மி கட்சி 13 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 26 சதவீதம். இதற்கிடையில் பாஜகவின் வாக்கு வங்கி அசைக்கப் படவில்லை. 182 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அக்கட்சி முன்னிலையில் உள்ளது. 2017ல் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ்…

மேலும்...

காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவிய ஹர்திக் படேல் பின்னடைவு!

ஆமதாபாத் (08 டிச 2022): குஜராத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரும் முன்னேறி வரும் நிலையில், பாஜகவின் அல்பேஷ் தாக்கூர், ஹர்திக் படேல் ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.ப்ஜிக்னேஷ் மேவானி முன்னிலையில் உள்ளார். குஜராத் முதல்வர் வேட்பாளர் பூபேந்திர படேல் முன்னிலை வகிக்கிறார். வட்காமில் ஜிக்னேஷ் மேவானியும், கம்பலியாவில் ஆப்ஸின் இசுடன் காட்வியும் முன்னேறி வருகின்றனர். காந்தி நகர் தெற்கில் அல்பேஷ் தாக்கூர் பின்தங்கியுள்ளார். விரங்கத்திலும் ஹர்திக் படேல் பின்தங்கியுள்ளார். ஜாம்நகரில் பாஜகவின் ரிவாபா ஜடேஜாவும் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸில் இருந்து…

மேலும்...

குஜராத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக – கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

ஆமதாபாத் (05 டிச 2022): பாஜக தற்போது ஆண்டு வரும் மாநிலங்களான இமாச்சல் பிரதேசத்திலும், குஜராத்திலும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இமாச்சல் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 12ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 1ந்தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளது. இரு மாநிலங்களில் பதிவான வாக்குகள் வரும் 8ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு…

மேலும்...

எஸ் எம் எஸ்ஸில் பூத் சிலிப் அனுப்பிய பாஜக – அதிர்ச்சியான வாக்காளர்கள்!

காந்திநகர் (05 டிச 2022): குஜராத்தில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பாஜகவினர் எஸ் எம் எஸ் மூலம் பூத் சிலிப் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 2ம் கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் இணைப்புகளுடன் பாரதீய ஜனதா கட்சி எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. எஸ் எம் எஸ் பெற்ற வாக்காளர்களின் மொபைல் எண்களை பாஜக எவ்வாறு பெற்றது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்த விவரங்களை சமூக ஆர்வலர் ஒருவர்…

மேலும்...

குஜராத்தில் ராணுவப் படையினர் இடையே மோதல் – இருவர் சுட்டுக் கொலை!

போர்பந்தர் (27 நவ 2022): குஜராத் மாநிலம் போர்பந்தரில் ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேர்தல் பணிக்கு வந்த ராணுவ வீரர்கள், பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் ஒருவர் ஏகே 47 துப்பாக்கியால் சுட்டார். இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் மணிப்பூரை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரிகள் முன்னதாக துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இரு ராணுவ வீரர்கள் காந்திநகரில் உள்ள மருத்துவமனையில்…

மேலும்...

படுக்கையில் இருப்பவர் எப்படி பிரச்சாரத்தில் ஈடுபட முடியும்? – மஹுவா மொய்த்ரா கேள்வி!

கொல்கத்தா (17 நவ 2022): படுக்கையில் இருப்பதாக கூறி ஜாமீன் பெற்றவர் பின்னர் மகளுக்காக எப்படி பிரச்சாரம் செய்கிறார்? என்று மேற்கு வங்க எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கூறியதாவது: நரோத்யபாத்யா படுகொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி உடல் நலம் கருதி ஜாமீன் பெற்ற குற்றவாளி, மனோஜ் குக்ரானி குஜராத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளார். “நரோடா பாட்யா படுகொலை வழக்கில் மனோஜ் குக்ரானி…

மேலும்...

குஜராத் தேர்தலையொட்டி மீண்டும் விஸ்வரூபம் எடுக்கு குடியுரிமை திருத்த சட்ட விவகாரம்

புதுடெல்லி (10 நவ 2022): இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, ஒரே மாதிரியான சிவில் சட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தை பாஜக செயல்படுத்தியுள்ளது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மாநில கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் பாஜகவின் எதிர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி எதிர்த்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக மாநிலத் தலைமை அறிவித்துள்ளது. ஐம்பது சதவீத இடஒதுக்கீட்டு வரம்பை நீக்கி,…

மேலும்...

மருத்துவர்களின் அலட்சியம் – குழந்தைக்கு 70 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (23 அக் 2022): குஜராத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் பார்வை இழந்த குழந்தைக்கு ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் சுனிதா சவுத்ரி என்ற பெண்ணுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நவ்சாரியில் உள்ள அரசு மருத்துவமனையில் 28 வாரங்களில் குறை மாத்தில் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தை 1,200 கிராம் எடையுடன் இருந்தது. 42 நாட்கள் ஐசியூவில் தங்கியிருந்த பிறகு குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. இந்நிலையில் வீட்தூக்கு கொண்டு…

மேலும்...

பில்கிஸ் பானு பாலியல் வழக்கு குற்றவாளிகள் விடுதலையை ரத்து செய்யும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

புதுடெல்லி (22 அக் 2022): 2002 கோத்ரா கலவரத்தின் போது பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய பெண்கள் அமைப்பின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முக்கிய மனுவுடன் இந்த மனுவையும் விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. முன்னதாக, 11 குற்றவாளிகளுக்கு விடுதலை…

மேலும்...

பில்கிஸ் பானு விவகாரத்தைப் பற்றி பேச மறுத்த ஆம் ஆத்மி தலைவர்!

அகமதாபாத் (20 அக் 2022): பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு தொடர்பான கேள்விகளை டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான மணீஷ் சிசோடியா தட்டிக் கழித்தார். குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரத்தின் போது சிறுபான்மையினர் பிரச்சனைகள் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க சிசோடியா மறுத்துவிட்டார். சமீப நாட்களில், குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சார நிகழ்ச்சிகளில் சிசோடியா பங்கேற்றார். அப்போது, தேசிய ஊடகமான ஏபிபியின் நிருபர், பில்கிஸ் பானு விவகாரம்…

மேலும்...