புத்தாடை இல்லா ரம்ஜான் பண்டிகை – முஸ்லிம்கள் முடிவு!

ஐதராபாத் (22 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம்கள் புத்தாடை அணியாமல் இவ்வருட ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடிவு செய்துள்ளனர். ரம்ஜான் நோன்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலக அளவிலான கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகமெங்கும் ரம்ஜான் பண்டிகை களையிழந்து காணப்படுகிறது. இது இப்படியிருக்க இந்தியாவில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கு ம் தெலுங்கானா மாநிலத்தில் இவ்வருடம் புத்தாடை அணியாமல் வீட்டிலேயே தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முஸ்லிம்கள் முடிவு செய்துள்ளனர். எனினும்…

மேலும்...

குடியரசு தினத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு!

ஐதராபாத் (24 ஜன 2020): ஐதராபாத்தில் குடியரசு தினத்தன்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பிரம்மாண்ட வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பலதரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று அசாதுத்தீன் உவைசி தலைமையிலான United Muslim Action Committee (UMAC) சார்பில் ஐதராபாத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எஹ்திஜாஜி முஷைரா (Ehtejaji Mushaira) மைதானத்தில்…

மேலும்...